திங்கள், 22 அக்டோபர், 2012

"நம்ம மவராசா எங்கே போயிட்டாராம், தம்பி ?" (சிறுகதை)


   



1983

காலை வெய்யில் சுட்டெரிக்கத் துவங்கிக் கொண்டிருந்தது. கலவரத்தால் எரிந்தழிந்த தமிழர்களின் உடைமைகளின் சூடு கூட இன்னமும் தணியவில்லையே! அதற்குள் இந்தச் சூரியன் இரக்கமில்லாமல் இப்படி  வந்து நடந்து கொள்கிறதே!

அமலனும் லூயியும் அவர்களோடு வந்திருந்த சாரதியும் ஏதோ நடந்து விட, இருந்த ஆபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே அந்த வாகனத்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.

சிந்தனைக் கூறுகாய் - 9






81. பணம்கூடினதரம்கூடும் எனுமெண்ணம் தவறாகச் சமுதாயம் ஏற்றதாலே
      பணம் தேடின் அதுபோதும் எனக் குற்றம் தனைஏற்கும் தனிநபர் 
      வளர்கிறாரே!

வெள்ளி, 19 அக்டோபர், 2012

பதம் பிழைத்தால்....... (கவிதை)


   


 பதம் பிழைத்தால் சுவைக்கும் கறிதன் சுவையினை இழந்து போகும்
பதம் பிழைத்தால் இசைக்கும் கருவியதன் பயனும் கேள்வியாகும்
பதம் பிழைத்தால் நட்பும் கெடுகின்ற சூழ்நிலை தோன்றக் கூடும்
பதம் பிழைத்தால் உறவுகள் பலவும் விலகும் சூழல் தோன்றும்

சிந்தனைக் கூறுகாய் - 8








71. வளர்பவர் கண்டு மனம் நிறைவதுதான் மனிதத்தில் முதன்மைப் பண்பு
      தளர்வதும் காழ்ப்பிலே வெறுப்பதும் தகுதியைத் தாழ்த்திடும் தீய பண்பு

வியாழன், 18 அக்டோபர், 2012

உண்டா? இல்லை! இல்லையா? உண்டு! (சிறுகதை)





னுபவங்களை அசைபோட்டு உண்மைகளை உணர்ந்து கொள்ள முயலும்போது சில சமயங்களில் நம்மை நாமே நம்பிக் கொள்ள முடியாதபடிக்கு சில சம்பவங்களில் உதாரணங்கள் மிதப்பதை உணர முடிவதுண்டு. 

சிந்தனைக் கூறுகாய் - 7









61.விமர்சனம் என்பதை ஊக்குவிக் கும்கலை என எண்ணிச் செய்து 
      வந்தால்
     விசமத் தனங்களைச் சொற்களால் செய்திடும் மதியரைத் தவிர்த்தல் 
     கூடும்

புதன், 17 அக்டோபர், 2012

தர்மமெல்லாம் தர்மமில்லை (சிறுகதை)






லங்கைத் தாயின் மனிதாபிமான சேலையை சிங்கள இனவெறியர்கள் உரித்து அவளைக் கதறியழ வைத்துக் கொண்டு இருந்தார்கள். அன்பென்னும் ஆடை அவிழ்ந்து விழ, அவள் அழுது குழறிக் கொண்டிருந்த அவலங்கள் பரவி வழிந்து கொண்டிருந்த இனவெறிக் கலவர வேளை அது.

ஜனநாயகமா ஜனசாவகமா? (கவிதை)







யார்யாரோ வந்துநின்று பார்பார்பார் என்றுகத்தி
ஊர் ஏய்க்கும் நாடகமா ஜனநாயகம்?
பார் எங்கும் பரவுதற்காய் போர்பரப்பும் நாடுகளே!
யார் காக்கப் பசப்புகிறீர் ஜனநாயகம்?

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 6







51. விதைகளே பெருமரம் ஆவன என்பது மாறாத நியதியென்றால்
      விதியதே முன்பின் மாறாத வழியென நம்புதல் எவ்வண்பிழை?

52. முயல்வதுஎதற்கு எனமனம்உணரா பணிகளில் என்றைக்கும்
      வெற்றியில்லை
      முயல்வதன்பணிகளில் மனிதத்தைஇணைத்திடின்அதன்வழி                             
     தோற்பதில்லை
53. ஆட்சிக்கு  மக்களைப் பேதமாய்ப் பார்ப்பரைத் தெரிந்திடல்பெரும்பாவம்             வீழ்ச்சிக்குள்தேசத்தை வீழ்த்திடத் தூண்டுதல் பிரித்தாளும் இனக்(கு)ரோதம்

54. அநீதிக்குச் சுயமுகம் இல்லையென்பதால் அதுபன்முகம் காட்டி
       நிற்கும்   
      நீதியைக்காட்டியே அதுவாழமுயல்வதால் தனைநீதியாய்க்காட்ட
      பொய்யும் சொல்லும்

55. ஒன்றுக்குள் நூறாகப் பயிர்களே விளையுதே! மனிதனே உனக்குப்
      பின்னால்
      நன்றாக உன்னாலே உலகத்தின் நலம்தேடி எவருக்கு எவ்வண்ணம்   என்ன        செய்தாய்? 

56. உயரமாய் இருப்பதால் பயனில்லை மரமதன் அடிவேரில் பழுதிருந்தால்
      உயர்ந்தனாய்க் காண்பவன் உண்மையில் கீழவன் ஒழுக்கத்தில்
      பிறழ்ந்திருந்தால்        

57.  பிழையையும் சரியென வலுசேர்க்க முனைபவன் இருமடங்கு குற்ற வாளி
      அழைக்கிறான் அன்புடன் எனநம்பி இணைவனவன் பிழைவிழுங்கும்                   நோயாளி

58.  வழியென்று ஒன்றினை வகுக்காமல் வாழ்பவன் இலகுவாய்ஒழுக்கத்தை
       மறுதலிப்பான்
      குழியிலும் துயிலினும் கூண்டினுள் துயிலினும் ஒன்றுதான்எனஅவன்      
        அறிவுரைப்பான்

59.  பள்ளியை உணராத, அறியாத விலங்குகள் விதிவைத்துவாழும்போது                  புள்ளிக்கும் உதவாத கெடுவழி வியென்று கற்றவர் செல்வதும் ஏன்?

60.  நியதியை வகுக்காமல் வாழலைச் சுதந்திரம் எனஓதும் பெரியரெல்லாம்
      நியதிவைத் தேயவர் தாம்கற்ற கல்வி  தவறென்று உரைப்பராமோ?

வதைத்து நியாயம் இழிந்ததில்லை சிதைத்து நியாயம் அழிந்ததுமில்லை (கவிதை)









இத்தனை இன்னுயிர்கள் எதற்காக இறந்தார்கள்?
இத்தனை பொதுமக்கள் எதற்காக இறந்தார்கள்?
இத்தனை பொதுச் சொத்தை எதற்காக அழித்தார்கள்?
இத்தனை பொறுமைக்கும் எதை பதிலாய்த் தந்தார்கள்?

திங்கள், 15 அக்டோபர், 2012

தடத்தைப் பதிக்குமுன் தளத்தை உணர்ந்து கொள்! ( கவிதை)





முன்னெண்ணம் இன்றிநீ புதிதாக எதனிலும்
               முடிவுகள் எடுத்திடாதே! - எந்த
நன்மையும் சரியாகப் புரியாமல் வருமென
                நம்பிநீ இறங்கிடாதே! - என்றும்
இருக்கின்ற நிலைமைக்குள் சரியாக வகுக்காமல் 
                இதை அதைச் செய்திடாதே! - என்றும்
வருகின்ற இலாபங்கள் பலனவை  எல்லாமே 
                உறுதியேல் விட்டிடாதே!

எழாத வீழ்ச்சி எதற்கு உனக்கு? (கவிதை)




சரிந்துநீ விழுந்தையேல் பலவீனம்அது  வாகும்
சரிந்துசெய் பயிற்சியேல் அது பலம் சேர்க்கும்
புரிந்ததாய் நடித்திடில் அவை உனைத் தூற்றும்
புரிந்துநீ உரைத்திடின் அவைஉனைப் போற்றும்

உள்ளங்கை உண்மைகள் (கவிதை)



சிறுவிதையை மண்ணுள் வைத்தால்
பெருமரமாய் வளர்ந் தது காட்டும்
தருணத்தில் உதவிநீ செய்தால்
பெரும்பலனாய் அதன்வழி காட்டும்

அத்திவாரங்கள் (கவிதை)






இருட்டிடனுள் இருப்பவை எதுவெனத் தெரியாமை
மருண்டிடும் மனநிலைக் கத்தி வாரம்
புரிந்திடும் சக்தியைச் சிந்தையில் கொள்ளாமை
பிழைக்குள் விழும்வழியின்  அத்தி வாரம்

சிந்தனைக் கூறுகாய் - 5









41. தனியாக இருக்கையில் பெரிதான ஆமைகள் கடலினில் சிறுத்துப் போகும்
     இனியென்றில்லாத பெருமையும் புகழதும் காலத்தால் கரைந்து போகும்

42. பார்த்திடல் வாசினை, படித்திடல் அறிந்திடல், புரிதலே கல்வியென்றால்
     கற்றதைக் கடமையாய் நல்வழிச்செலுத்தலே கல்விக்குப் பெருமை                       என்பேன்.

43. உண்மையில்திண்மை கொண்டிணைவதுதான் மனிதரில் ஆண்மைநிலை
     சொல்லிலே ஒன்றும் செயலிலே ஒன்றுமேல அலிபோன்ற இரட்டை நிலை

44. நிரந்தரம் இல்லாத மனிதனின் மார்க்கங்கள்  நிரந்தரம்ஆவதில்லை                       நிரந்தரம் உள்ளானின் இயற்கையின் பாதையின் நிரந்தரம் மறைவதில்லை
 

45. அனுபவம் கூறிடும் நல்லுண்மை யைக்கூட அறிவில்லார் ஏற்பதில்லை
    அடுத்தவர் நலமதைச் சுயநலம் மிக்கவர் புரிந்தாலும் விழைவதில்லை

46. மனதினில் உறுதியும் அனுபவந் தனைப்போல் சிந்தனைத் தெளிவு தரும்
      தனமதைச் சரிவழி வகுத்ததில் விழைந்திடில் நேர்மையின் பலன் புரியும்

47. வெண்பனி மெதுமை குளிர்சுமந் திருக்கும். இயற்கையின் தன்மையது.
       பண்புடன் கடுமையும் சேர்ந்தே இருக்கும். நட்பதன் உண்மையது

48. மருந்தது பயன்தரும் உடலதை ஏற்றால், அன்றேல் பயனிழக்கும்              
      அறிவுரை பயன்தரும் மனததை ஏற்றால், அன்றேல் பயன்தடுக்கும்

49. இரண்டும் இரண்டும் நான்கெனும் விதியது என்றைக்கும் மாறாது
      இறைவனும் விதியாய் நமக்கென விதித்ததும் என்றைக்கும் மாறாது

50. தன்னைநன் குணர்ந்து தனிவழி நடந்தால் தரணியில் உயர்வு வரும்

      தன்னைப் பிறர்விதம் உயர்த்திட முயன்றால் தனித்துவம் தொலைந்து             விடும்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கண்ணீரும் கதை எழுதும் (கவிதை)








காலத்தால் சாகாதது எதுவோ அதுவும்
காலத்தால் மாறாதது எதுவோ அதுவும்
காலத்தால் மறக்காதது எதுவோ அதுவும்
காலத்தில் பதிவதே சரித்திரம் ஆகும்

எல்லை எது? இல்லை அது! (கட்டுரை)






என்றும் ஒன்றே பலதாய்க் காணும் என்னும் உண்மை புரியாமல்
என்றைக்கும்நம்அறிவை வைத்து இறையை உணரல் இயலாது
ஒன்றேஎங்கும் பலதாய்ஆட்டும் பரிணாமம்தனைப் புரியாமல்
என்றும்இழப்பின் ஏக்கம்தொடரும் பரிதா பங்கள் என்றும்குறையாது

தினமும் ஒரே விதமாய்ப் பொழுது புலர்ந்தாலும் தினமும் ஒரே விதமாய் வானம் இருப்பதில்லை. வண்ணங்களில்  அமைப்புக்களில்  வடிவங்களில் அதனது தோற்றம் மாறுபட்டுக் கொண்டேதான் இருக்கும்.

சுயசூடே தரமுணர்த்தும் (கவிதை)







எழஎழ விழுந்தேன் என்றாலும் எழுந்தேன்
தொழத்தொழத் தளர்ந்தேன் என்றாலும் தொழுதேன்
பழகிடப் பழகிடப் பலரேய்க்க அழுதேன்
பழமென இனித்தவை நஞ்சாக அதிர்ந்தேன்

யாரப்பா அது யாரப்பா? நாமப்பா அது நாமப்பா!







யாதும்ஊரே என்பன் யாவரும் கேளிர் என்பான்   
சாதியை வைத்துத்தூண்டித் தன்னினம் குனியவைப்பான்
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்றுசொல்லிச் சென்று கொண்டே
துண்டுதுண்டாய் இனம்பிரித்துத் துரோகஞ்செய்து உயரநிற்பான்.

அலட்சியம் ஆபத்துக்கும் அடிகோலலாம் (கவிதை)









தாகத்தைத் தீர்த்திடும் நீரதும் கூட
தாக்கியே உயிர்கொல்லும் வெள்ளமாய் மாறின்
இனிப்பினும் இனிப்பான நன்நட்பும் கூட
இதயத்தை உடைத்திடும் தீநட்பை நாடின்

காலம் அனுமதிக்க மறுத்தால்.... (சிறுகதை)


 


ளமைக் காலக் கண்ணோட்டத்தில் என் கனவாய்; நினைவாய் வந்து போகும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். இளமையின் நெகிழ்ச்சியில் அதன் கிளுகிளுப்பில் அன்று அனுபவித்த சின்னஞ்சிறு அனுபவ சுகங்களின் மின்மினிப்பூச்சியொளிக் காட்சிகளைக் கூட இதயம் இன்று அசை போடும்போது  சில அனுபவங்களால் என் கண்கள் பனிக்கத் தொடங்குவதை உணர்கிறேன்.

என்னைத் தாக்கிய அந்தச் சின்னஞ்சிறு அனுபவங்களை மீண்டும் ஒரு தடவை  அனுபவித்துப் பார்த்துவிட என் இதயம் துடியாய்த் துடித்தாலும் அது முழுமையாக நினைவில் வராமல் என்னை அலட்சியப்படுத்துவதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாமலிருக்கின்றது.

நான் கற்புடையவள் (சிறுகதை)









தனியின் இதயத்தில் இனந்தெரியாதவொரு படபடப்பு. தான் செய்தது சரியா பிழையா என்பதை அவளால் தீர்மானிக்க முடியாமலிருந்ததே அதற்குக் காரணம்.

"நானுந்தான் எத்தனை எத்தனை வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒன்றுமே சரிவரவில்லை என்பதால்தானே இதைச் செய்யத் துணிந்தேன். அதனால் இது தவறே அல்ல!"

அவள் மனதின் ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது.

சிந்தனைக் கூறுகாய் - 4





31. காமமே மனிதனின் அடிப்படை எனினது பாவமே நெறி பிறழின்
     சாகவும் விடுமது நோயினை அழைத்தே ஒழுக்கத்தில் அதுதவறின்

மன வடிவங்கள் (கவிதை)




வருத்தத்தைத் தருகின்ற வலியதனை
   வேதனை என்கின்றார் உணர்ந்தவர்கள்
கருத்துக்குச் சரியாகப் படுவதனைச்
    சிறப்பென்று போற்றுவார் படித்தவர்கள்
உருவுக்கு உயிர்கூட்டும் உழைப்பதனை
    உயிர்மைகொள் கலையென்பார் (இ)ரசிப்பவர்கள்
உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்தால்
    உருவாகவே தேடுவார் பாமரர்கள்

சனி, 13 அக்டோபர், 2012

கடி வலியிலும் பாடம் படி! (கவிதை)






பாலருக்குப் படிப்பிக்கப் பாதகர்க்குப் பதவிதந்தால்
பாலபாடம் ஆகஅவர் பாதகத்தைப் படிக்க வைப்பார்
ஞாலமறி யாதவொரு மூடனைநாம் வலிந் தழைத்து
ஞானியவன் எனமதித்தால் நியாயமென்று நமைமிதிப்பான்

விழிக்குள் விழிக்கும் பழக்கம் வேண்டும் (கவிதை)




நாவிலே இனித்ததென்று நல்லவை கெட்டவற்றை
ஆயாமல் ஏற்றிடாதே! பின்வருந்தி அழுதிடாதே!
கோவிலுள் கிடக்குதென்று சிறுகுப்பை தனையெடுத்துக்
கண்களில் ஒற்றிடாதே! தூயதென் றதைஎண்ணிடாதே!

இயலாத முழுமைகள









முழுமையாக எதனையும் அறிந்துவிடல் இயலாது
முழுமையாக எதனையும் புரிந்திடுதல் இயலாது
முழுமையாக எவரையும் கணித்திடுதல் இயலாது
முழுமையாக எதனிலும் நிறைவுபெறல் இயலாது

மனோகரா! பொறுத்தது போதும். ஓட்டமெடு! (சிறுகதை) (




செல்வேந்திரன் தன்னைச் சூழ அமர்ந்திருந்த ஆச்சிமார், மாமிமார் கூட்டத்தை நோக்கி ஒரு தடவை தனது வலக்கரத்தை வயிற்றினடியில் மடக்கியவாறே குனிந்து வணங்கி விட்டு நிமிர்ந்தான். 

பலத்த கரவொலியுடன் பெரியவர்களின் உரத்த, கலகலப்பான பாராட்டுக்களும் சேர்ந்து அவனைக் குளிர வைத்துக் கொண்டிருந்தன.


நிலைகள்





கனிதரற்கு மரமெதுவும் அனுமதிக்கு அலைவதில்லை
கண்கவரும் மலர்தரற்கும் செடிஅனுமதி கேட்பதில்லை
மலையடியில் வலம்வரற்கு நதியனுமதி கேட்பதில்லை
இலைஅறிவில் நமக்குஉயர் எனும்நமக்கோ எதுவுமில்லை

சாதனையில்..தொடர் நடையும் படர் நடையும் (கட்டுரை)




சாதனைகளின் அடிப்படையில் வேதனைகள் இருப்பது இயல்பானதும் அநேகமாகப் பலருக்கும் தெரிந்ததுமான ஓர் உண்மைதான். 

ஆர்வங்கள் முயற்சிகளாகி, 
முயற்சிகள் உழைப்புகளாகி, 
உழைப்புகள் அனுபவங்களாகி,
அனுபவங்கள் பாடங்களாகி, 
அப்பாடங்களிலிருந்து பெறும் அறிவு துணிச்சல்களாகி,
துணிச்சல்களின் வெற்றி நிலைகளே சாதனைகளாகின்றன.

மூட நம்பிக்கையே நீ வாழ்க! (சிறுகதை)




திகாலை இளந் தென்றலில் அந்தக் கடற்கரையோரம் ஒரு விதமான குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தது.

மீனவர்களே அதிகமாக வாழ்ந்த பகுதியென்பதால் ஓலைக் குடிசைகளுக்குப் பஞ்சமே இல்லாத இடம். வறுமைதான் சூழ்ந்திருந்தாலும் சிறுமையென்பதே இல்லாத வெள்ளையுள்ளம் கொண்ட மக்களினால் நிறைந்திருந்தது அந்தக் கடற்கரையோரக் கிராமம்.


வெள்ளி, 12 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 3






21.  பிழைசேரின் சரிகெடும் சரியாலே என்றும் பிழைமாறித் திருந்திடாது
     பிழையாகிப் போவரில் நல்லரே திருந்துவர். கெட்டவர் திருந்திடாரே!

பாம்பின் கை பாம்பறியும் (சிறுகதை)



ளமைக் காலக் குறுகுறுப்புக்களும் கலகலப்புக்களும் மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயங்கள்.உடல் கிழமையை அதாவது வயோதிபத்தை நெருங்கி வரும்போது மனதினால் இளமையைக் காத்துக் கொள்ள அவைதான் பெரிதும் உதவுகின்றன.

நான் போகப் போகிறேன் (சிறுகதை)


ம்மா எண்ணெய் தாத்தா வந்திருக்கிறார்.எண்ணெய் தாத்தா வந்திருக்கிறார்“

தன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நரேஷ் வீட்டுக்குள் தலையை நுழைத்துக் கத்தி விட்டு மீண்டும் விளையாட ஓடிவிட்டான். 

குசினிக்குள்ளிருந்த அம்மா “தாத்தாவை வந்து இருக்கச் சொல். நான் ஒரு நொடிக்குள் வந்து விடுகிறேன்” என்று பதில் கொடுத்தார். அதைக் கேட்க அவன் இருந்தால்தானே!

அவன் சார்பில் தாத்தாவே பதில் கொடுத்தார். “நான் இருந்து கொள்கிறேனம்மா! நீ மெதுவாக உனது வேலைகளை முடித்து விட்டு வந்தால் போதும்.”

“அவனெங்கே தாத்தா?” குசினிக்குள்ளிருந்து கேள்வி வந்தது.



உள்ளத்தின் பிம்பங்கள்







த்தியம் சாராத தீயவர் கட்
புத்தியில் தீயவை நல்லதாய்த் தோன்றும்
கத்தியில் நம்பிக்கை வைப்பவர் கட்கே
சத்தியம் இதயத்தைக் கத்தியாய்க் குத்தும்.  

வியாழன், 11 அக்டோபர், 2012

நடக்கவில்லை நாம் ; நடத்தப்படுகிறோம் ( கட்டுரை)

னசாட்சி என்ற ஒன்று இருந்தால், அது நமது இதயத்துக்கு சரியையும் பிழையையும் வலியுறுத்துவது உண்மை என்றிருந்தால், நீதியென்றும் நியாயமென்றும் நம் மனதுக்கு தீர்ப்பிடும் எண்ணம் எழுவதற்கு அடிப்படை இருக்க முடியும் என்றால், அது வெறுமனே சாதாரணமாக எழுந்தவிடக் கூடிய எதுவோவல்லவென்றும் எதனாலோ தூண்டிவிடப்பட்டே எழுகின்றது என்றும் கொண்டால், நாம் நடக்கவில்லை என்றும் நடத்தப்படுகின்றோம் என்னும் ஓர் உள்ளுணர்வு நமக்குள் எழுவதை நாம் உணரல் கூடும்.

இயற்கைபோல் காட்டப்படும் செயற்கையும் இறைவனை அதற்குள் வைக்கும் வஞ்சகமும். (கட்டுரை)

ல்ல இதயங்கள் எப்போதும் மற்றவரின் நன்மைகளிலேயே நாட்டங் கொண்டிருப்பது இயற்கை.

நல்ல பெற்றோரும் நல்ல ஆசிரியர்களும் நல்ல நண்பர்களும் அமையப் பெற்றதாக ஒரு வாழ்க்கை கிடைக்குமென்றால் அப்பேற்றுக்கு உரியவர்தான் கொடுத்த வைத்தவர் எனப்படத்தக்கவர்.

நல்லவையென்பன வாழ வைக்கவும் தீயவை என்பன நாசஞ் செய்யவும் என்ற இருவித இயக்க அடிப்படையிலேயே

கானலை நீராக்க வருகிறாயா?

தயங்கள் பொய் சொல்லா நிலை நிலைத்தால்
           இகமெங்கும் அமைதிக்கு இடம் கிடைக்கும்
சதமென்று சுயநலம் தனை விழைந்தால்
          சந்ததி கள்கூடப் பழி சுமக்கும்
உதவிடற் கியலாமை இருந்த போதும்

புதன், 10 அக்டோபர், 2012

சரி புரிந்தால் வழி தெரியும்

ரியாகப் புரியாமல் சிந்திக்கும் மனங்கட்குச் சரியாகப் பிழைகள் தோன்றும்
புரிந்ததில் உண்மையைத் தேடிடும்உள்ளமே சரியினைச் சரியாய்க் காணும்
வானத்தில் கண்ணுக்குத் தெரிவதை வில்போல வானவில்என்று சொல்வார்
ஞாலத்தின்மறுபுறம் சேர்த்ததைப் பார்ப்பரே அதுவட்டம் என்றுணர்வார்.

பிழம்பை அழகெனத் தொடுவாயோ?

ம்பித் துணைசென்றால் நடுவழியில் கைவிடுவார் நமைச்சுற்றும் சூழலிலே
தம்பி, தங்கையென நம்பியெவர் நெருங்கிடலும் ஆபத்தாய் இருக்குதடா!
வெம்பி அழும்குழந்தைக் காறுதல் எனவருவார் நிழலெனத் தீதுவரும்.
நம்பி எவரருகும் நம்பொறுப்பைக் கொடுப்பதுவே தற்கொலையாய் ஆகிவிடும்.

விழியிழந்தும் வாழலாம்; மொழியிழந்து வாழமுடியுமா?

குறைகள்சொல்லும்  மனிதர்விட்டு விலகிநின்று  வாழலாம்
வரையறுத்து வாழ்க்கைதன்னை  அமைத்துஎங்கும் வாழலாம்
தரமுணர்ந்து நண்பர்சேர்த்து உயர்ந்திணைந்து வாழலாம்
விழியிழந்தும் வாழலாம் மொழியிழந்து வாழமுடியுமா?

பலமிழந்த நிலையில்கூடப் பிறர்துணையில் வாழலாம்

காண மாட்டாய் ; கண்டு கொள்வாய்! (கட்டுரை)

உணர்ந்திரா இதயத்தில் உறுதியிருக் காது!
தெளிந்திரா சிந்தனை பலம் கொண்டி ராது!
தெரிந்திரா எதனிலும் உண்மை விளங் காது!
பலம்பெறா பக்திஇறை வனைஅறி யாது!


இறைவனை உண்டென்றும் இல்லையென்றும் வாதிடலை விடுத்து, சுயமாக நமது சிந்தனையை நாம் விரிவுபடுத்தினால்

செவ்வாய், 9 அக்டோபர், 2012

கேட்டுப் பார்! பதில் கிடைக்கும்

ற்புத மாய்நீ அடுத்தவர் பெயரைக் கெடுப்பதில் உயர்ந்திடலாம்
அற்புத மாய்நீ பொய்மைகள் நிறைத்தே அகிலத்தை மயக்கிடலாம்
அற்புத மாய்நீ அடுத்தவர்சொத்தை அபகரித் துயர்ந்திடலாம்
அற்பமே ஆகி நோய்நொடி வீழ்ந்தே ஒதுங்கவே நேர்ந்து விட்டால்?

சிந்தனைக் கூறுகாய் 02


11. த்துவிரல் இருப்பினும் பணிக்கேற்ப அவையவை பணிசெய்தல் நியதியாகும்
     தரம் உணர்ந் ததற்கேற்ப உழைப்பை அமைப்பதே வெற்றியின் பாதையாகும்.

12. சிரிப்பது எதற்கெனக் கவனித்துக் கணித்தால் சிரிப்பவர் தரம் தெரியும்
       ஏறியே புகழதில் நிற்கையில் நடத்தையில் தனிநபர் தரம் புரியும்.

திங்கள், 8 அக்டோபர், 2012

இது கலிகாலமா அன்றில் ஒளிர் காலமா?

ந்த நூற்றாண்டின் உலகம் தனது சரித்திர அத்தியாயங்களின் மிகமிக மோசமான அத்தியாயத்தை இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கின்றது போலும்.

மனிதாபிமானத்தை வலியுறுத்துகின்ற, மனித உரிமைகளைக் காப்பாற்றுகின்ற, நியாயங்களைச் சரியாக உணர்த்துகின்ற எல்லா நல்ல உணர்வுகளும் வழிகளும் படிப்படியாக மழுங்கி, மழுங்கி இப்போது சாதாரண மனித மனங்களில் கூட இரக்க உணர்ச்சிகள் மறக்கடிக்கப்பட்டு

சனி, 6 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் 01

1. றவென்ப துலகினில் பகைசெய்யா அனைத்துமே எனுமெண்ணம் தரமுயர்த்தும்
   பிறர்நலம் விழைகின்ற பலன்தேடாப் பணியெலாம் சிறப்புடைத் தரம் வழங்கும்.

2. ரம்கொண்ட உள்ளமே வெற்றியின் பாதையின் அடிப்படைத் தகுதியாகும்
    கரம்புரி பணிகளின் வெற்றியும் தோல்வியும் மனம்செய்யும் தெரிவில் சாரும்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

முயற்சி

திரும்பத் திரும்பச் சுழல் உலகினைப் பார்!
விரும்பிப் பலன் தேடாமல் உழைப்பதைப் பார்!
உருளும்பணி உலகமே நிறுத்திடும் கால்
உருப்படும் விதமெதுவும் இருக்குமோ பார்!

வியாழன், 4 அக்டோபர், 2012

தொட்டெழுதின் பட்டிருக்கும்

விரல்நுனிகள் எழுத்தினை உருவாக்கும் போது
நிரல்வைத்து நலன்விழைந் தெழுதிடல் நன்று
சிரத்தினுள் சிந்தனை உருவாகும் போது
சீர்செய்து உண்மைக்கு உரம்சேர்த்தல் நன்று.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

சிந்தையைத் தட்டின் சிந்தனை திறக்கும்

தாவிடும் மனதினை ஓடவே விடுவது
  தவறுக்கு வழிவகுக்கும்
நாவினை அதன்வழி சுவைத்திட விடுவது
  நோய்களுக் கழைப்புவிடும்
தாவிடும் உணர்வுகள் தடமதை மீறினால்
  தரமது தகர்ந்துவிடும்
ஆவியும் உடலமும் நீதிக்காய் உழைத்தால்
  யாவிலும் திடம் பிறக்கும்.

நேர்வழி செல்பவன் பாதையை மாற்றினால்
  சீர்நிலை அகன்றுவிடும்
பார்வையில் பாவத்தைப் புதைத் ததைவீசினால்
  பார்கெடும் பாதை வரும்

படிக்கத் தெரியாமல் படித்துவிட முடியாது படிப்பிக்கப் படிக்காமல் படிப்பிக்கவும் முடியாது (கட்டுரை)


டிப்படையை அறியாத அறிவு அடிப்படையில் அறிவன்று.
சிந்திக்கத் தெரியாத சிந்தனை என்றைக்கும் சிந்தனை அன்று. நட்பினைத் தெரியாதவரின் நட்புறவு நட்பன்று.
உண்மையை உணராதவரின் உண்மை உண்மையில் உண்மை அன்று.
தூய்மையின் தன்மை உணரார் தூய்மையை அறிந்தவர் அல்லர்
அழகை உணரார் கண்ணில் அழகென்பது எதுவுமே அல்ல

ஆக-
வாசிப்பு என்பதும்  படிப்புஏன்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.