செவ்வாய், 31 ஜூலை, 2012

நல்லா இருக்கக் கத்துக்கணும்

ல்லவற்றைப் பார்ப்பதற்கு நல்லவர்கள் துணை வரேல்
நல்லவற்றைப் போலகெட்ட பாதை தீயவர்கள் காட்டலாம்
பல்விதமும் கெட்டதையே நம்மனங்கள் நாடவே
பல்வழியும் நமைஇழுத்து
நம்தரம்கீழ் ஆக்கலாம்.

நல்லவற்றைக் கேட்பதற்கு நல்லவர்கள் இல்லையேல்
நல்லவற்றைக் கெட்டதெனக் கெட்டவர்கள் காட்டுவார்

பதார்த்தமும் யதார்த்தமும் (கட்டுரை)

முதாயத்தில் ஒளியுடன் நிழல் போல நல்ல மனிதர்களுடன் இணைந்து, எத்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் கள்ளக் குணாளர்களும் கபட நாயகர்களும் கடற்கரையோர மணல் கற்துளிகளாய் அளவுக்கு அதிகமாகவே பரந்து கிடந்து வதைகளையும் வாதைகளையும் விதைத்துக் கொண்டு, மிகவும் இலகுவான வழிகளில் வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களாகத் திருந்துவதும் இவர்களைத் திருத்துவதும் கடினமாக இருப்பதன் அடிப்படைக் காரணம் இவர்கள் இயல்பாகவே இத்தகைய குணங்களின்

ஞாயிறு, 22 ஜூலை, 2012

சொறிச்சலுக்குச் சிகிச்சை தோலை உரிப்பதல்ல (கட்டுரை)

னித பலவீனங்களில் மிகப் பெரிய பலவீனம் விமர்சனங்களுக்கு அஞ்சி ஓடி ஒதுங்குவதும் விமர்சனத்தை விளங்க முனையாமல் பகைக் கண் கொண்டு எதிர்க்க முனைவதுமாகும்.

எந்த மனிதனும் தன்னைப் பிறர் குறை சொன்னால் முதலில் ஆத்திரமடையவே செய்வான். காரணம், அது இயல்பான மனித மனத்தின் முதல் பிரதிபலிப்பு என்பதுதான். ஆதலால் அது தவறே அல்ல.

சனி, 21 ஜூலை, 2012

வெய்யிலும் முறுவலிப்பும்

வெறுங்காலுடன் நடக்கின்றேன்
எனது அன்னை வந்து தடுக்கின்றாள்
வெய்யிலாம். செருப்பணிந்துதான் நடக்க வேண்டுமாம்
பணிவதுதான் பண்பென்று நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
செருப்புடன் நடந்து நடந்து எனது கால்கள் வலிக்கின்றன
நடந்தால் கால் வலிக்குமென்று அம்மா சொல்லவில்லை.
வெக்கை வாட்டுகிறது.நிழலைத் தேடுகின்றேன்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

தெரிந்ததும் தெரிவதும்

தெரிந்துபிழை செய்கிறவன் ஒருபோதும் திருந்திவிடான்
தெரிந்துபிறர் கொல்கிறவன் ஒருபோதும் நீதி தரான்
தெரிந்துரிமை மறுக்கிறவன் நியாயத்தை மிதித்திடுவான்
தெரிந்துபொய் சொல்கிறவன் பழிபாவம் விரும்பிடுவான்.

புதன், 18 ஜூலை, 2012

மனிதன் படைத்த கொடிய மிருகமே, நீ என்றைக்குச் சாவாய்? (கட்டுரை)

ரு தெருவோரமாக நான் நடந்து கொண்டு இருக்கின்றேன். ஒரு குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு ஒரு குழந்தை எச்சில் உணவு மிகுதி இருந்த பொட்டலத்தை எடுத்து அதை நக்குகின்றது. எனக்கு ஒரே அருவருப்பாக இருக்கின்றது. "சீ! என்ன கெட்ட பழக்கம் இந்தச் சின்னக் குழந்தைக்கு? இந்தச் சின்ன வயதிலேயே இப்படிப் பொறுக்கித் தின்ன விட்டுவிட்டு, இதன் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்?

வியாழன், 12 ஜூலை, 2012

வடிகட்டத் தவறினால் வழிகெட்டுப் போய்விடும் (கட்டுரை)

டையில் தூய்மை அழகைக் கூட்டும்,
உணவில் தூய்மை சுகத்தைக் காக்கும்,
அறிவில் தூய்மை ஒழுங்கை வளர்க்கும்,
நடத்தையில் தூய்மை நல்வழி காட்டும்,
மனமதன் தூய்மை மனிதனை ஆக்கும்,
இதயத்தின் தூய்மை இகத்தையே மாற்றும்.

ஏழ்மை மிகுந்திருந்த முன்னைய ஒரு காலத்திலே கூட தூய்மையின் முக்கியத்துவத்தினை உணர்ந்திருந்த மக்கள் வாழ்ந்திருந்து வழி காட்டியிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் "கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்று அறிவுறுத்தி வைத்திருக்கின்றார்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

அக்கரை மாந்தர்களே! கவனம்! இக்கரை பச்சையில்லை! (கட்டுரை)

தூரத்துக்கு அழகாகத் தெரிவது நெருங்கிடின் எதிர்மாறாக, அசிங்கமாக இருப்பதுண்டு.

விமானத்தில் பறக்கையிலே கீழே வடிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்ற நிலப்பரப்பு, இறங்கிப் பார்த்தால் கரடுமுரடான பாதைகளாகவும் மேடு பள்ளங்களாகவும் இருக்கக் கூடும்.

ஆகவே கற்பனைக்குக் குளிர்ச்சி அனுபவத்திலும் குளிர்ச்சியாய் இருக்கும் என நம்பிவிடுவது தவறாகிவிடவும் வாய்ப்பிருக்கின்றது. வெளிநாட்டு வாழ்க்கை சம்பந்தப்பட்ட கற்பனைகளும் அப்படித்தான்.

நீதிக்கு இனபேதமில்லை (சிறுகதை)

ந்த நீண்ட பாதையில் இரண்டு பேருந்துகள் மிக வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தன.

8ம் வகுப்பு மாணவ மாணவியரின் கூச்சலும் கும்மாளமுமாக வண்டிகள் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தன.

கண்டி நகரிலிருந்து சீகிரியா குன்றினைப் பார்க்கவே உற்சாகமாகப் பிள்ளைகளெல்லாரும் பறந்து கொண்டிருந்தார்கள்.

சனி, 7 ஜூலை, 2012

சும்மாவும் பாவம் வேண்டாம் (சிறுகதை)

கொழும்பு மாநகரம் தகதகவென எரிய, புகை மண்டல மணம் கமழ, இனவெறி மரண விழாக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.

காலம் அது ஜூலை 1983 என்று சொல்லிக் கொண்டிருக்க, காலன் திக்கு முக்கெல்லாம் ஓடியோடிக் களைத்துக் கொண்டிருந்தான்.
 அவனால் எடுத்துச் செல்ல முடியாதபடிக்குத் தமிழ் உயிர்களைச் சிங்கள இனவெறிக் காடையர்கள் நாலா திசைகளிலும் மிக மிக வேகமாகப் பறித்துப் பறித்துக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.

திங்கள், 2 ஜூலை, 2012

பிணமும் கொலை செய்யும் (சிறுகதை)

1983.
ஜூலை மாதத்தில் ஒரு நாள்.

வறுமையின் கொடிமட்டும் பறக்கின்ற ஓர் பரம ஏழையின் வீடு.

மூன்று நாட்களாகக் காய்ச்சலில் படுக்கையில் கிடந்து வாடிக் கொண்டிருந்தான் மாதவன். அவனைச் சற்று எழுப்பி, நிமிர்த்திச் சுவரோடு சாத்தி வைத்தாள் சொர்ணம்.