ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

புல்லை நட்டு நெல்லை விழையாய்!



அன்பைத் தொடுத்து இணைத்தலை விடுத்து
அம்பைத் தொடுத்து இணைவினை ஒழிக்கும்
பண்பே இல்லா பாதகர் கூட்டம்
கண்மண் தெரியா தியங்குதல் என்னே!

நல்லதைச் செய்யும் நல்லலவர் நோக்கம்
நல்லவர் போன்றே ஏய்ப்பவர் கையில்!
நல்லவர் கண்டே கொதித் ததைஎதிர்த்தால்
நல்லவர் தீவிரர் எனச்சிறைக் கூண்டில்.

சிறியவர் பெரியவர் எவரதும் வெற்றி
சரிவழியன்று பிழைவழி போதல்
அறிவினைக்கூடப் பணத்தினை வீசி
சரிக்கட்டிப் பட்டம் பதவியை வாங்கல்

மக்களை நம்பியே வாக்குகள் கேட்போர்
மக்கள்முன் சரிவழி காட்டிடும் போது
மக்கள்வி ரோதிகள் பணத்தினைக் கொட்டி
மக்கள் மனங்களைக் கெடுத்தென்ன ஆட்சி?

வறுமையை முன்வைத்து மக்களை ஏய்த்தல்
பெருமைபோல் துணிகின்ற அரசியல் வாதி
உருப்படல் வழிதேடி புரிகின்ற பாவம்
உருப்படும் வழியற்ற பரம்பரை ஆக்கும்

நீதியைக் கையேந்தும் பாதையில் செல்வார்
பீதியே அற்றராய்க் களம்புக நிற்பார்
வீதியில் ஆதரவு அற்றவர் ஏய்ப்பார்
நீதியால் நிச்சயம் தெருவிலே நிற்பார்

இயற்கையின் நியதியை உற்றுநீ கண்டால்
இயங்குதற் கேற்பவே அதுபலன் சேர்க்கும்
இயங்கிடும் அனைத்துமே இயற்கைக் குள்ளாகும்
இயங்கையில் பிழைசெய்யின் அதேபலன் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக