ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பசப்பு வார்த்தைகளைப் பாசமென நம்பாதே!




கரையான்கள் அயர்ந்திருந்தால் பாம்பின்புற்று  ஆகிவிடும்
தலைமைகள் பலம்குறைந்தால் அந்நியர்கள் பலம் பரவும்
முறையில்லா விதமமைந்தால் சோலைபுதர்க் காடாகும்
வரைவகுக்கும் அறம் சோர்ந்தால் அநநியர்வசம் நாடாகும்

கண்திறந்தே துயிலுபவர் பொதுமக்கள் எனஇருந்தால்
மண்பறிக்கும் தீயவர்கள் அடக்கியாள மனம்வகுப்பார்
மண்சாரா வெளிமகனை மரியாதைக் கிழுத்துநின்றால்
மண்பிடித்து நினையாண்டு உன்மண்ணைப் பறித்திடுவான்

பொதுமக்கள் சேவையினைப் பணம்பண்ணும் கயவரிடம்
பொதுமக்கள் தற்காலச் சிறுவுதவிக் கடகுவைத்தால்
பொதுமக்கள் எந்நாளும் பொறுக்குவராய் ஆகிடுவார்
பொதுமக்கட்: குரிதனைததும் அவர்பறித்தே உயர்ந்திடுவார்

ஆட்சியொன்றை அமைப்பதிலே அறிந்துணர்ந்து செயல்படலே
மாட்சிமைக்கு வழியமைக்கும் மக்களாட்சி மலரவைக்கும்
காட்சிவைத்துக் கவர்ச்சிசெய்தும் கலகம்செய்தும் வெல்லவரின்
வீழ்ச்சிக்கான வழியுனக்கு வருகுதென்று தெளிந்திருப்பாய்!

அள்ளியள்ளித் தருவதுபோல் அரசுபணம் தருவதுவும்
அள்ளியதைக் கொண்டதிகம் செய்கிறதாய் எண்ணுவதும்
நஞ்சுணரா துணவருந்தும் நமையிழக்கும் மூடத்தனம்
பஞ்சுபோன்ற பசப்புவாhத்தை பாசமன்று – கயமைத்தனம்

புதன், 13 பிப்ரவரி, 2019

கண்ணுறங்கில் கல் நசுக்கும்! கவனம்!





உலகைச் சூழ்கிற அத்தனையும் வருமொருகாலம் கற்பனைதான்!
உலகைச் சூழ்கிறஆபத்துக்கள்  காலத்தின்பக்கத்தில் கற்பனைதான்!
உலகைப் படைத்த சக்தியெதோ அதுவும் ஒருநாள் கற்பனைதான்!
உலகை அழிக்கும் மனிதகுல விஞ்ஞானம்அதும்; கற்பனைதான்!

கனவுஎன்னும் ஒன்றினையன்றி உற்றதுணைநமக் கெதுவுமில்லை
கனவுகள்கண்ட மனிதர்கள்வாழ்வே வரலாறாயின வேறுஇல்லை
கனவுகள்என்பன கற்பனைச்சிதறல்கள் படைக்கும் ஒருவித ஓவியம்தான்!
கனவுஎன்பது இல்;லையென்றே லிந்த வையகமே வெறும் பூச்சியம்தான்!

இறைவன் வீட்டில் இடம்பிடித்திடவே இருக்கும்வீட்டை இடிப்பவர்தாம்
இறைவன் பேரில் மதம் பலபிடித்தே ஒற்றுமைதடுத்திட மோதுகின்றார்
இறைவன் உண்டு இல்லை என்று கானலில் தாகம் தீர்;ப்பவரோ
இறைவன் பற்றிய பயன்இல் கதைகளால் காலம்கரைக்கும் கயவர்களோ?

மாபெரும் மந்தை சிறுவெடிக்கஞ்சிப் பதறிச் சிதறிடும் காட்சியதாய்
மாபெரும் உலகம் பாதகர் சொற்பதம் கேட்டே அஞ்சும் அவலமதாய்
மாபெரும் உண்மைகள் நீதிகள்கழுமரம்ஏறுதல் கண்டும் தளர்ந்திருந்தால்
மாபெரும் அழிவும் தீமையும் உலகின் நியதியாய் மாறிடும்! விழித்திருப்பாய்!

மனமே வாழ்வின் ஆணிவேர்!





மனதில் அமைதி வேண்டுமென்றால் தனிமைதனை நீ நாடு!
மனதில் அமைதி கெடுவதற்கும் தனிமைதனை நீ நாடு!
மனதில் நன்மைக் கிடம்கிடைக்கத் தனிமைதனை நீ நாடு!
மனதில் தீமைகூடவேண்டின் அதற்கும் தனிமையை நீ நாடு!

மனதில் தோன்றும் கோடிகளில் தேடிஒன்றை நீ நாடு!
மனதில் தோன்றும் அத்தனையிலும் தேர்ந்தெடுத்து நீ நாடு!
மனதில் தோன்றும் நல்லவையில் சிறந்ததையே நீ தேடு!
மனதில் பக்குவம் வந்ததன்பின் எந்நிலையிலும் அதை நாடு

மனதில் நலனாய் இல்லாமல் நல்லவன்போல்நீ நடிப்பவனா?
மனதில் தெளிந்த நல்லவன்தான் எனநினைஉணர்நதே இருப்பவனா?
மனதில் பிறரை மன்னிப்பனாய் மனிதம் பேணும் நல்லவனா?
மனதில் பிழையைப் படரவிடாது நேர்மை உறுதியைக் கொண்:டவனா?

மனதிpல் எதுவும் தோன்றுகையில்; சோர்வுடனே தளர்ந்திருந்தால்
மனதில் கறைகள் படிந்துன் நிழலும் அச்சம்தரல் நடந்திடலாம்
மனதில் உறுதி ;படிப்படியாய் வளர்க்கும் விதத்தில் முயன்றுவரின்
மனதில் தளர்நிலை மறைந்து ;ஒளிபடரல் உணர்ந்திடலாம்.