செவ்வாய், 21 மே, 2019

வலியுணரா சிந்தனை வலி வழியை விழைந்து நிற்கும்




எல்லாரும் வாழ வேண்டும். எல்லாரும் நன்றாக வாழ வேண்டும்
எல்லாரும் உயர வேண்டும் எல்லாரும் எந்நிலையிலும் உயர வேண்டும்
எல்லாரும் கற்க வேண்டும் எல்லாரும் சரியைச் சரியாகக் கற்க வேண்டும்
எல்லாரும் வாழ வேண்டும் எல்லாரும் பேதம்தவிர்த்திணைந்து வாழ வேண்டும்

என்றாலும் இதற்குள்ளே ஒன்று உண்டு என்பதை எல்லாரும் தெரிய வேண்டும்
ஒன்றென்று எதுவுமில்லை ஒன்றுக்கொன் றெதிராக உண்டென் றுணரவேண்டும்
நன்றென்கின்தீதுண்டு ஒளியென்கின்இருளுண்டு ஒருபாதைக் கிருதிசை தெரியவேண்டும்
நன்மக்கள் எங்கணும் நல்லவர்போலவே தீயரும் எங்கும்என தெரியவேண்டும்.

உள்ளத்துள் வஞ்சகமும் கள்ளமும் நிறைந்தவர் நாடாளக் கூடுகின்றார்
பள்ளத்துள் என்றைக்கும் எழையை வைப்பதை பக்குவம் ஆய்வகுத்தார்
கீழ்சாதி மேல்சாதி எனப்பிரிப் பவர்தம்மின் சுயபலம் கோர்க்க நிற்பார்
பாழ்செய்யும் மதவெறித் தீயூட்டி பயமூட்டிப் பணம்வீசிப் படிஉயர்வார்

நல்லவர் பயங்களும் ஒதுங்கிடும் குணங்களும் நாட்டுக்கு நாசம் சேர்க்கும்
வல்லவர் ஆகவே தீயவர் எழுந்திடின் நாடெங்கும் சாபம் சூழும்
எல்லாரும் எல்லாமும் பெறுவண்ணம் இல்லாமல் வறுமையில் தேசம் சாயும்
கல்லாராய் ஏழைகள் உருவாகும் வழிவந்து எல்லாமே நாசமாகும்

சனி, 18 மே, 2019

உயிர்த்தெழத் தயங்கிடும் நடைப்பிணங்கள்




எங்கணும் மக்களுள் அமைதிக்காய் வழிவிழை இதயங்கள் கோடிகோடி
எங்கணும் கண்ணீரும் செந்நீரும் வழிவண்ணம் அலைகிறார் ஓடிஓடி
தங்களை விட்டிடில் எங்கணும் எவருமே தலைதாங்க இல்லைபோலே
எங்களை அடக்கியே ஆள்கின்ற நிலைமாறஇயலாதா எனதவிப்பர் கோடிகோடி

எழும்பாத நிலைதனில் ஏழ்மையில் அமுக்குவார் எங்கணும் ஆளுகின்றார்
ஏழும்பிடும் பெரும்சக்தி ஆகவேவருகையில் பணம்வீசி அதைத் தடுப்பார்
சனநாய கம்என்று உரிமையைப் பணம்கொட்டிப் பறித்திடும் பாதகர்க்கே
சனங்களும் அறியாமல்புரியாமல் உடன்சென்று வெற்றிக்கு வழிசமைத்தார்

கற்றவர் பண்புள்ள கொள்கையைச் சொல்லிடும் உயர்ந்தரைத் தவிரவைத்து
கெட்டவர் பண்பற்ற காடையர் கூட்டமே மக்களை ஆளுமொரு சூழல் வந்தால்
சுற்றிலும் கொள்ளைசெய் காடையர் கூட்டமும் இவரோடு கூட்டுசெய்யும்
சுற்றுச்சூ ழல்கெட்டு விவசாயம் அழிவுற பிணங்களில் வீடுகட்டும்

கொள்கையைத் தெளிவாக தேர்வாக எழுதிப்பின் தேர்தலில் நிற்கச் செய்யும்
கொள்கைகள் என்பன எவையென்று சொல்தக்க அறிஞர்கள்அவை அமைத்து
அவர்கையில் எவரெவர் தேர்தலில் நிற்கலாம் எனும்தகுதி வரையறுத்தால்
சுவருறுதி வீட்டுக்கு அவசியம் என்பதாய் நாட்டுநலன் முன்னில் நிற்கும்

பிறன்ஏழுதும் வசனமதைப் பேசுபவன் பேச்சுதனைத் தன்னதுபோல் பகடங்காட்டி
பிறன் மனதுள் உயர்ந்தவனாய் பதிவதது பாமரர்கள் கருத்தின் போக்கு
புறம்அழைத்தே பரீட்சை வைத்துப் புட்டுப்புட்டுச் சரியாகத் தரமுணர்ந்தால்
அறம்காக்கும் அரசமையும் அரசியலின் நாகரீகம் அனைவர்க்கும் விரைந்து கி;ட்டும்.

கிழவர்கள் கூட்டம் அரசியல் வாழ்வில்; எங்கணும் இன்றைய பெருஞ்சாபம்
கிழவர்கள் ஓடவும் நாளையசந்ததி வாழவும் இளைஞர்கள் வரவே இனிலாபம்
பழம்மதம் பேசி வெறிகளை ஊட்டும் பலனற்ற அரசியற் கிழகுணங்கள்
இளந்தலை யினரின் கரம் படத்ததவறின் இவரும் சந்ததி நடைப்பிணங்கள்



ஞாயிறு, 12 மே, 2019

அன்னை தினம

       

அம்மா!

அன்னை உனை நினைத்து அனுதினமும் சில மணித்துளிகள்
கண்கலக்கிக் கரையுதம்மா!
அன்பின் நினைவுகளை அனுதினமும் உன்நினைவில்
அரிதரிதாய் உணர்வதனால்
என்முன் அனுதினமும் அயராது தொடருணர்வால்
கண்கலங்கல் தொடருதம்மா!
என்னதான் என்மனமும் ஆறுதலை விழைந்தாலும்
ஏக்கமதாய் முடியுதம்மா!

எவ்வளவோ உயர்ந்தாலும் எழுந்தெழுந்து நின்றாலும்
அவ்வளவும் உனக்குக் கீழ்தான்
அன்பதுவே இறைவனென அறிந்தாலும் அவனும்கூட
நீ சொல்லி அறிந்ததுதான்
கண்மூடும் நிலைநெருங்க கண்கலங்கி நீநோக்க
தாலாட்டு பாடினேன் நீஉறங்க
பாலூட்டி எனைவளர்;த்த தாயேநீ அதன்பின்பே
கண்மூடிப் பிரிந்தனை மறப்பதென்றோ?

கண்போல நற்பண்பைக் காக்கும்படி சொன்னவள்நீ
கண்மறைந்தும் நிலைக்குதது!
புண்படநீ உன்பேச்சில் வசைசேர்க்காய் எனச் சொன்னாய்
இன்றுமது என்னின் வழி
கோபமது கெட்டவனாய்க் காட்டுமதை விட்டுவிடு
கேட்கவில்லை பட்டுணர்ந்தேன்
அனுபவமே நல்லபள்ளி நீவிளித்தாய் நான்விழித்தேன்
அதுசரிதான் இன்றுணர்ந்தேன்

பன்னூறு உறவுகள்என் புடைசூழ இருந்தாலும்
உன்உறவுக் கீடுஇல்லை
பன்னாடு கடந்தாலும் பலவிதங்கள் அறிந்தாலும்
உன்னீடாய் எதுவுமில்லை
கண்ணீரால் கவிவடித்தே உன்னைநான் நினைவுறுதல்
என்வகையில் சுயநலந்தான்
என்இயக்கம் அத்தனையும் உன்னறிவின் உந்துதலால்
என்மனம்சொல் உண்மைஅதுதான்!




உன் அன்பால் உருகி நிற்கும் உன் மகன்