ஞாயிறு, 12 மே, 2019

அன்னை தினம

       

அம்மா!

அன்னை உனை நினைத்து அனுதினமும் சில மணித்துளிகள்
கண்கலக்கிக் கரையுதம்மா!
அன்பின் நினைவுகளை அனுதினமும் உன்நினைவில்
அரிதரிதாய் உணர்வதனால்
என்முன் அனுதினமும் அயராது தொடருணர்வால்
கண்கலங்கல் தொடருதம்மா!
என்னதான் என்மனமும் ஆறுதலை விழைந்தாலும்
ஏக்கமதாய் முடியுதம்மா!

எவ்வளவோ உயர்ந்தாலும் எழுந்தெழுந்து நின்றாலும்
அவ்வளவும் உனக்குக் கீழ்தான்
அன்பதுவே இறைவனென அறிந்தாலும் அவனும்கூட
நீ சொல்லி அறிந்ததுதான்
கண்மூடும் நிலைநெருங்க கண்கலங்கி நீநோக்க
தாலாட்டு பாடினேன் நீஉறங்க
பாலூட்டி எனைவளர்;த்த தாயேநீ அதன்பின்பே
கண்மூடிப் பிரிந்தனை மறப்பதென்றோ?

கண்போல நற்பண்பைக் காக்கும்படி சொன்னவள்நீ
கண்மறைந்தும் நிலைக்குதது!
புண்படநீ உன்பேச்சில் வசைசேர்க்காய் எனச் சொன்னாய்
இன்றுமது என்னின் வழி
கோபமது கெட்டவனாய்க் காட்டுமதை விட்டுவிடு
கேட்கவில்லை பட்டுணர்ந்தேன்
அனுபவமே நல்லபள்ளி நீவிளித்தாய் நான்விழித்தேன்
அதுசரிதான் இன்றுணர்ந்தேன்

பன்னூறு உறவுகள்என் புடைசூழ இருந்தாலும்
உன்உறவுக் கீடுஇல்லை
பன்னாடு கடந்தாலும் பலவிதங்கள் அறிந்தாலும்
உன்னீடாய் எதுவுமில்லை
கண்ணீரால் கவிவடித்தே உன்னைநான் நினைவுறுதல்
என்வகையில் சுயநலந்தான்
என்இயக்கம் அத்தனையும் உன்னறிவின் உந்துதலால்
என்மனம்சொல் உண்மைஅதுதான்!




உன் அன்பால் உருகி நிற்கும் உன் மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக