சனி, 18 மே, 2019

உயிர்த்தெழத் தயங்கிடும் நடைப்பிணங்கள்




எங்கணும் மக்களுள் அமைதிக்காய் வழிவிழை இதயங்கள் கோடிகோடி
எங்கணும் கண்ணீரும் செந்நீரும் வழிவண்ணம் அலைகிறார் ஓடிஓடி
தங்களை விட்டிடில் எங்கணும் எவருமே தலைதாங்க இல்லைபோலே
எங்களை அடக்கியே ஆள்கின்ற நிலைமாறஇயலாதா எனதவிப்பர் கோடிகோடி

எழும்பாத நிலைதனில் ஏழ்மையில் அமுக்குவார் எங்கணும் ஆளுகின்றார்
ஏழும்பிடும் பெரும்சக்தி ஆகவேவருகையில் பணம்வீசி அதைத் தடுப்பார்
சனநாய கம்என்று உரிமையைப் பணம்கொட்டிப் பறித்திடும் பாதகர்க்கே
சனங்களும் அறியாமல்புரியாமல் உடன்சென்று வெற்றிக்கு வழிசமைத்தார்

கற்றவர் பண்புள்ள கொள்கையைச் சொல்லிடும் உயர்ந்தரைத் தவிரவைத்து
கெட்டவர் பண்பற்ற காடையர் கூட்டமே மக்களை ஆளுமொரு சூழல் வந்தால்
சுற்றிலும் கொள்ளைசெய் காடையர் கூட்டமும் இவரோடு கூட்டுசெய்யும்
சுற்றுச்சூ ழல்கெட்டு விவசாயம் அழிவுற பிணங்களில் வீடுகட்டும்

கொள்கையைத் தெளிவாக தேர்வாக எழுதிப்பின் தேர்தலில் நிற்கச் செய்யும்
கொள்கைகள் என்பன எவையென்று சொல்தக்க அறிஞர்கள்அவை அமைத்து
அவர்கையில் எவரெவர் தேர்தலில் நிற்கலாம் எனும்தகுதி வரையறுத்தால்
சுவருறுதி வீட்டுக்கு அவசியம் என்பதாய் நாட்டுநலன் முன்னில் நிற்கும்

பிறன்ஏழுதும் வசனமதைப் பேசுபவன் பேச்சுதனைத் தன்னதுபோல் பகடங்காட்டி
பிறன் மனதுள் உயர்ந்தவனாய் பதிவதது பாமரர்கள் கருத்தின் போக்கு
புறம்அழைத்தே பரீட்சை வைத்துப் புட்டுப்புட்டுச் சரியாகத் தரமுணர்ந்தால்
அறம்காக்கும் அரசமையும் அரசியலின் நாகரீகம் அனைவர்க்கும் விரைந்து கி;ட்டும்.

கிழவர்கள் கூட்டம் அரசியல் வாழ்வில்; எங்கணும் இன்றைய பெருஞ்சாபம்
கிழவர்கள் ஓடவும் நாளையசந்ததி வாழவும் இளைஞர்கள் வரவே இனிலாபம்
பழம்மதம் பேசி வெறிகளை ஊட்டும் பலனற்ற அரசியற் கிழகுணங்கள்
இளந்தலை யினரின் கரம் படத்ததவறின் இவரும் சந்ததி நடைப்பிணங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக