செவ்வாய், 21 மே, 2019

வலியுணரா சிந்தனை வலி வழியை விழைந்து நிற்கும்




எல்லாரும் வாழ வேண்டும். எல்லாரும் நன்றாக வாழ வேண்டும்
எல்லாரும் உயர வேண்டும் எல்லாரும் எந்நிலையிலும் உயர வேண்டும்
எல்லாரும் கற்க வேண்டும் எல்லாரும் சரியைச் சரியாகக் கற்க வேண்டும்
எல்லாரும் வாழ வேண்டும் எல்லாரும் பேதம்தவிர்த்திணைந்து வாழ வேண்டும்

என்றாலும் இதற்குள்ளே ஒன்று உண்டு என்பதை எல்லாரும் தெரிய வேண்டும்
ஒன்றென்று எதுவுமில்லை ஒன்றுக்கொன் றெதிராக உண்டென் றுணரவேண்டும்
நன்றென்கின்தீதுண்டு ஒளியென்கின்இருளுண்டு ஒருபாதைக் கிருதிசை தெரியவேண்டும்
நன்மக்கள் எங்கணும் நல்லவர்போலவே தீயரும் எங்கும்என தெரியவேண்டும்.

உள்ளத்துள் வஞ்சகமும் கள்ளமும் நிறைந்தவர் நாடாளக் கூடுகின்றார்
பள்ளத்துள் என்றைக்கும் எழையை வைப்பதை பக்குவம் ஆய்வகுத்தார்
கீழ்சாதி மேல்சாதி எனப்பிரிப் பவர்தம்மின் சுயபலம் கோர்க்க நிற்பார்
பாழ்செய்யும் மதவெறித் தீயூட்டி பயமூட்டிப் பணம்வீசிப் படிஉயர்வார்

நல்லவர் பயங்களும் ஒதுங்கிடும் குணங்களும் நாட்டுக்கு நாசம் சேர்க்கும்
வல்லவர் ஆகவே தீயவர் எழுந்திடின் நாடெங்கும் சாபம் சூழும்
எல்லாரும் எல்லாமும் பெறுவண்ணம் இல்லாமல் வறுமையில் தேசம் சாயும்
கல்லாராய் ஏழைகள் உருவாகும் வழிவந்து எல்லாமே நாசமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக