ஓர் ஏக்கம் அழுகிறது!
பிழை கோர்த்து பிழை ஏற்று பிழைவழியில் உயர்பவன்
பிழைபோலச் சரிகாட்டி அதில் வெற்றி காண்கிறான்
பிழைசார்ந்த வழிகளே பிழைக்கவும் உயரவும்
பிழையொன்றே சரியென்றும் நலமென்றும் காண்கிறான்
சரியாக்கும் விதம்விழைந்த அதைநோக்கும் பாதையை
சரிபோன்றே பொய்யாக்கி அதில்வென்றும் ஆள்கிறான்
சரிசாரும் பெரும்பான்மை சரிசெய்யும் என்பதை
சரியாகப் பின்பற்றும் ஒருநாட்டைச் சொல்வையோ?
சனம்ஆளும் பெரும்வாய்ப்பைத் தரவந்த நாயகம்
சனநாய கம்என்றே பெயர்தூக்கி வந்தது
இனம் என்றும் மதம்என்றும் மனிதத்தைப் புதைப்பதால்
சனநாய கம்எங்கும் பிணமாகிப் புதைந்ததே!
மக்களை மாக்களாய் ஆக்குவோர் அரசியல்
மக்களை ஆள்வதே விதியென்றே ஆனதும்
மக்களை நெறிசெய்ய பலுகிட்ட மதங்களும்
மக்களுள் பகைசேர்க்கும் விதியெவ்வண் ஆனது?
நியாயத்தைக் கேட்பவர் நாசமாய்ப் போகிறார்
நியாயத்தை எழுதுவோர் நிதமெங்கும் சாகிறார்
நியாயமே இல்லாதார் நிலமெங்கும் ஆள்கிறார்
நியாயத்தின் பொருள் எங்கும் „அ“ சேர்ந்தே ஆகுதோ?
பிழை கோர்த்து பிழை ஏற்று பிழைவழியில் உயர்பவன்
பிழைபோலச் சரிகாட்டி அதில் வெற்றி காண்கிறான்
பிழைசார்ந்த வழிகளே பிழைக்கவும் உயரவும்
பிழையொன்றே சரியென்றும் நலமென்றும் காண்கிறான்
சரியாக்கும் விதம்விழைந்த அதைநோக்கும் பாதையை
சரிபோன்றே பொய்யாக்கி அதில்வென்றும் ஆள்கிறான்
சரிசாரும் பெரும்பான்மை சரிசெய்யும் என்பதை
சரியாகப் பின்பற்றும் ஒருநாட்டைச் சொல்வையோ?
சனம்ஆளும் பெரும்வாய்ப்பைத் தரவந்த நாயகம்
சனநாய கம்என்றே பெயர்தூக்கி வந்தது
இனம் என்றும் மதம்என்றும் மனிதத்தைப் புதைப்பதால்
சனநாய கம்எங்கும் பிணமாகிப் புதைந்ததே!
மக்களை மாக்களாய் ஆக்குவோர் அரசியல்
மக்களை ஆள்வதே விதியென்றே ஆனதும்
மக்களை நெறிசெய்ய பலுகிட்ட மதங்களும்
மக்களுள் பகைசேர்க்கும் விதியெவ்வண் ஆனது?
நியாயத்தைக் கேட்பவர் நாசமாய்ப் போகிறார்
நியாயத்தை எழுதுவோர் நிதமெங்கும் சாகிறார்
நியாயமே இல்லாதார் நிலமெங்கும் ஆள்கிறார்
நியாயத்தின் பொருள் எங்கும் „அ“ சேர்ந்தே ஆகுதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக