செவ்வாய், 25 ஜூன், 2013

சும்மா சிலவரிகள் 3



41. விவாத அரங்கத்தில் வெல்வதில் திறமையே முக்கியம் சரிபிழை
   என்பதல்ல.ஆனால்.. நீதியை வெல்வதில் நேர்மையே முக்கியம் ஆள்
   பார்த்தல் என்பதல்ல.

42. கடவுளைக் காணாமல் தேடியே அலைகின்ற மனிதனைக் கடவுளே
   நேரில் வந்து பார்த்தால் "என்னை நேரில் கண்டுமேன் என்னையவன் கவனியாமல் போகின்றான் என்று வியப்பினால் மலைத்துப் போவான்.

43. ஒரு நாட்டின் பணத்தினை அது எதுவென்று புரியாதார் குப்பைக்குள்
   எறிந்துவிடக்கூடும். சுய அறிவு இல்லாத மடையர்கள் அறிஞர்களை
   இகழ்ந்து அதில் மகிழ்வு கொள்வதுவும் அப்படித்தான்.

44. அறிவினைச் சேர்ப்பது மிகமிகக்கடினம். அதனைப் பிறருக்காகப்  
   பயன்படுத்தலோ மிகமிக இலகு.

45. வண்ணத்தின் அழகு குழைப்பதில் கூடும். எண்ணத்தின் அழகு
  உழைப்பதில் கூடும்.

46 தேய்க்கத் தேய்க்கப் பொன் பொலிவுறும். எழுத எழுத அறிவு
   வலிவுறும். பார்க்கப் பார்க்க அறிவு விரிவுறும். கேட்கக்  கேட்க
   அறிவு தெளிவுறும்.

47. ஆழமில்லா குளத்திலே கப்பல் ஒடாது. ஆழமில்லா அறிவினால்
   நன்மை வராது.

48. ஆற்றலுக்கு ஆயுதம் தொழிலாளி. ஆற்றலின்மைக்கு அதுவே
   எசமான்.

49. நாற்பது நல்ல உரைகளை விடவும் ஒரு நல்ல செயல் பெறுமதி
   கூடியது

50. நன்னீர் மலர் காக்கும். வெந்நீர் அதை அழிக்கும்.
   இலட்சியங்களும் அப்படித்தான்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

கண்மூடி நடந்தால் காலம் கைவிரிக்கும்









பிறருக்கு நலம்செய்யும் விதமதைப்போல்
குரல்தந்து உலகேய்க்க விழைந்திடாதே!
முதல் செய்த செயலெல்லாம் பின்புஒருநாள்
முதல்சேர்த்த பலனாகும் மறந்திடாதே!

தற்போதைக் குனதுவாழ் வுயரல்வேண்டி
தற்போது செய்பாவம் மறைந்திடாது
முட்களை விதைத்துநீ தோட்டம்போட்டு
முளைவிட்டுப் பலன்தரல் நடந்திடாது

மண்மேட்டில் நின்றுநீ மழையை வென்று
மழைவெள்ளம் அள்ளாமல் தப்பவீடு
அதனுயரத்  தைநம்பி அமைத்துவைத்தால்
அதன்பிழைப் பொறுப்புயார்? நீயா, ஊரா?

ஆற்றுமணற் கொள்ளையினை வர்த்தகம்என்று
ஏற்றுச்செய்யும் வஞ்சகத்தால் நீரின்றிநாடு
வற்றிவாடித் தவிப்பததன் பாதகத்தாலே
சுற்றிவாழும் மக்கள்துயர் உன்பழியாகும்

ஞாலமதன் இயக்கமென்ப தெதிர்விளைவுதான்
காலமொன்றில் ஒன்றைவைப்ப தென்பதுண்மைதான்
செய்வினையின் நன்தைீமை வகுத்து இயங்கிடேல்
கைவிரித்துக் காலம்விடும்! நடக்கும் உண்மைதான்



சும்மா சில வரிகள் 2





21. வேதனையைத் தாங்கிக்கொள். அது இதயத்தை இலகு படுத்தும்.
   வேதனையைப் பிறருடன்  கலந்து கொள். பாடம் கிடைக்கும். பொய்யாகச் சூழுகின்ற நண்பர்களை இழப்பாய்.

22. புகையிலையின் நட்பு மரணத்துக்கு அழைப்பு. தீயவரின் நட்பு
   பாவத்துக்கு அழைப்பு.

23. தவறுகளை மறுக்கும் துணிவின்மையை மறைக்கத்தான் மனிதன்
   மனம் பலவீனமானது என மழுப்புகிறான்.

24. அழகாக எழுதுவதற்கு மொழி அறிவு வேண்டும். அழகாகத்
   தோன்றச் செய்ய கலையறிவு வேண்டும். அழகாக 
   வாழ்வதற்கு நல்லொழுக்கம் வேண்டும்.

25. இரு முறை நாம் ஒன்றை வலியுறுத்த நேர்ந்தால் முன்னிற்பவர்
   ஒன்றில் செவிடர் அன்றில் பாமரர் என்று பொருள். மும்முறை
   முயன்றால் ஒன்றில் முன்னிற்பவர் குருடர் அன்றில் மடையர் என்று
   பொருள். அதற்குமேலும் முயன்று தோல்வி வந்தால் முன்னிற்பவர் வெறுந்தலைக்கனமுள்ள முட்டாள் என உணர்ந்து விலகுங்கள்.

26. வாய்க்கு இரண்டு உதடுகள், வாழ்க்கைக்கு இரண்டு உயிர்கள்,
   காலத்துக்கு இரண்டு பிரிவுகள் ஏன்? இரண்டின்றி ஒன்றென்று 
   ஒன்றில்லை என்பதால்தான்.

27. வறுமையென்பது பொருளிலல்ல, மனதிலேயே வடிவமைகிறது.
   இதயம் இளகினால்தான் வறுமையை ஒழிக்கும் வழி பிறக்கும்.

28. ஒரு நாளென்பது எல்லார்க்கும் பொதுவென்றாலும் அதுவே
   சுறுசுறுப்பானவனுக்கும் சோம்பேறிக்கும் வித்தியாசப்படுகின்றது.

29. கணனியால் உலகம் கைக்குள் வந்தும் அறிவின் தேடல்
   குறையவில்லை. தாகந்தீரத் தீர ஓடும் வேகம் கூடுகின்றது.

30. ஆத்மீகம் ஒரு மாதுளை. அதன் முத்தான வித்தில் சத்துண்டு.
   தோலிலும் மருந்துண்டு.

31. வயதேறத் துவங்குகையில் மகிழ்வூட்டும் பிறந்த நாள் வயதேறி   
   வருகையில் பயமூட்டுகின்றதை மறைத்து முறுவலிப்பவர்களே
   முதிய மனிதர்கள்.

32.; கடவுளுக்குக் காணிக்கை செலுத்தி;த் தங்களுக்கு ஏற்ப
   காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்று மக்கள் நம்பும்
   வரைக்கும் கடவுளிடம் ஏமாற வேண்டியதுதான்.

33. தேவையில்லாததை அளவுக்கதிகமாகச் சேர்ப்பது குப்பைத்
   தொட்டி. தேவைக்குமேல் சேர்த்து அதில் அமிழ்பவன் பணக்காரன்.

34. ஒரு நல்ல விளக்கிருந்தால் காரிருளை வென்றிடலாம். ஒரு
   நேர்மையான, நல்ல உறவிருந்தால் துன்பத்திலும் மகிழ்வோடு
   வாழ்ந்திடலாம்.

35. அர்த்தமின்றிப் புகழ்கிறவர் அடிக்கடி நம் அருகில் வந்தால்
   ஆபத்து நெருங்குகின்றதென்று பொருள்.

36. அளவாக இருவார்த்தை அறிவோடு பேசினால் அறிவான பல
   மாந்தர் நட்புக்கு அது உறுதி. அளவுக்கு அதிகமாய் உதடுகளை
   விரித்தால் அருகில் வருபவர்கள் அகன்றோடுவது உறுதி.

37. பணம் தேட மட்டும்நீ தொழிலுக்கு ஓடினால் வாழ்வின் சுவை
   கெட்டுப் போகும். மனம்ஈடு படும்வண்ணம் தொழில் தேடி ஓடினால்
   வாழ்வின் வழி உயர்ச்சி காணும்.

38. பத்தும் பத்தும் சேர்ந்தாலும் பூச்சியம் ஒன்றாய்த் தானிருக்கும்.
   அதுபோல சரியான இலட்சியத்தைப் பற்றி நிற்பாரின் பன்மையும்
   ஒருமையாய்த்தானிருக்கும்.

39. பழிவாங்கும் எண்ணம் நம் உள்ளத்தில் வந்தால் முடிவெடுப்பதை
   உடனடியாகவே ஒத்தி வைப்பது நல்லது. காரணம், அவ்வுணர்வு
   பிழைகளைச் சரிபோலக் காட்டவல்லதாகும் என்பதுதான்.

40. கோழைக்கு இருட்டினைக் கண்டாலே பயம் வரும். அதனாலே
   விளக்குடன் போ. ஏழைக்குச் சிறுஉதவி என்றாலும் பயன்தரும்.
   அதனால்நல் இதயத்துடன் போ.

செவ்வாய், 18 ஜூன், 2013

சும்மா சில வரிகள் 1





1.  பத்து மலர்ச் செடிகளுக்கு நடுவிலும் ஒரு வாழை அதிக பலன் தரும்.
   பத்து பணக்காரர்கள் நடுவிலே ஒரு நன்னடைத்தையுள்ளவனால்
   அதிக நன்மை கிடைக்கும்.

2.  நட்புறவை அதிகம் வளர்ப்பது உறவு. நண்பர்களை அளவாய்த்
 தெரிவது அறிவு. நுண்பரைச் சரியாய் உணர்த்துவது அனுபவம்.

3.  தனித்தே பெருகுதல் மரங்களின் இயற்கை. இணைந்தே பெருகுதல்
 மனிதரின் இயற்கை.

4. காண்பதை நம்புபவன் பாமரன். காரணத்தை உணர்பவன் அறிஞன்.
  கேட்பதை ஏற்பவன் பாமரன்.கேட்டதில் தக்கதை ஏற்பவன் அறிஞன்.

5. அயல் வீட்டு விருந்தின் சுவையை விடவும், சொந்த வீட்டின்
  சாதாரண உணவே நிரந்தர சுவையைக் கொண்டதாக இருக்கும்.

6. நாலிலிருந்து நாற்பதுவரை நூல்களும் நாற்பதன் பின் 
  அனுபவங்களும் மனிதர்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாவர்.

7. கடலில் முத்தும் உண்டு கால் பறிக்கும் விலங்கும் உண்டு.
  சூழலிலும் அப்படித்தான்.

8. சக்திக்கு மீறிய துன்பங்கள் இறைவன் தருவனவல்ல, நாமே
  இழுத்துக் கொள்வன.

9. மூவேளை உணவை ஒன்றாய் உண்ணலும் எல்லாம் அறிந்து
  முழுமையுறுதலும் இயலாமையினால் ஏமாற நிற்கும் மனித
  பலவீனத்தின் அடையாளங்களாகும்

10. இதயத்தை சுத்தமாக வைத்திருக்காத காரணத்தால்தான்  
   இறைவனை ஆலயங்களில் தேடி ஓட வேண்டிய தேவை
   மனிதர்களுக்கு ஏற்படுகின்றது.

11. மதங்களின் அடிப்படை உட்செய்தி ஒன்றுதானென்று உணராத
   வரைக்கும் மதபேத மோதல்கள் ஒழிய மாட்டா.

12. வாசித்தல் நல்ல பழக்கம். நல்லவற்றைத் தேடி வாசித்தல் மிக 
   நல்ல பழக்கம். நட்புறவு நல்ல பழக்கம். நல்லவர்களுடன் நட்புறவு
   மிக நல்ல பழக்கம்.

13. கடினப்பட்டு உருவாக்கிய பத்திரிகையைக் கண்டபடி
   விமர்சிப்பவர்கள் கண்ணுள்ள குருடர்களே!

14. உழைப்பை மதிக்க உயர்ந்த உள்ளம் வேண்டும் என்பதையே 
   அதில் தோல்வியுறுபவர்கள் பாடமாக உணர்த்துகின்றார்கள்.

15. நமக்கு வேண்டியவர்களின் குற்றங்களைப் பொறுப்பது சரியென்றால்
   வேணடாதவர்ளின் பிழையை பொறுக்க மறுப்பதில் நியாயமில்லை.

16. நீதிக்குத் துணிவு அழகு. துணிவுக்குச் சாதனை அழகு. அறிவுக்கு
   ஆற்றல் அழகு. ஆற்றலுக்கு விவேகம் அழகு.

17. பாட்டு இசையின்றி எடுபடாது. நற்கருத்து உண்மையின்றேல்
   எடுபடாது.

18. முத்தின் பெறுமதி நகையினில் தெரியும். நட்பின் பெறுமதி
   கஷ்டத்தில் புரியும்.

19. பணத்தினால் விளையாத நல்லவைகள் நல்ல வழிகாட்டலில்
   விளைவதுண்டு.

20. கருமிகள் சேர் செல்வம் கண்டவர்களிடமும் உழைப்பவர் செல்வம்
   உரியவர்களிடமும் அடைதலே வினைப்பயனாகின்றன.

சனி, 15 ஜூன், 2013

சிந்தனைக் கூறுகாய் 17






161.உடலிலே தொடங்கி உடலதில் இணைந்தும் உயிரின்றி இருப்பது? காமம்.
       உடலிலே தொடங்கி உள்ளத்தில் இணைந்து உயிரோடு கலப்பது காதல்

162.வாழ்வதன் அர்த்தத்தை வழங்கிடும் தூயதோர் இலக்கணம் ஆகும் காதல்
       வாழ்வதன் அடிப்படைக் குதவாது போகையில் அர்த்தமே அற்றுப்போகும்

163  அடுத்தவர்க்குதவிடும் நற்பண்பைக் குழந்தைகள் உள்ளத்தில்                      
         ஊட்ட  வேண்டும்
         கெடுப்பவர் நல்வேடம் பற்றியும் புரியும்வண் சரியாகக் காட்ட வேண்டும்

164.அநியாயம் செய்பவர் கைகட்குத் தீயவர்ஆயுதம் தற்காலிக பலம் தரலாம்
       அநியாயம் அதனாலே வெல்லாது அடிபட்டு அழிவுறல் நிச்சயம் எனச்             சொலலாம்

165.போர்வீரர் எனப்போர்வை போர்த்திட்ட போலியர் போர்முனை நின்று              வெல்லார்
யார்யாரோஅப்பாவி எனத்தேடி அவர்கொன்று போர்வென்றோம் எனப் புகல்வார்

166.பொதுமக்கள் உரிமையைப் பறித்ததில் ஆள்பவன் ஆட்சியொரு சாபக்கேடு
      அதுகண்டும் அவன் பின்னே அணிதிரள் கூட்டமோ மனிதத்தின் பாவக்கூடு

167.துறவியும் மனிதனே மனப்பல வீனனே என்பதை மறந்து செல்லின்
       திறமையாய் ஆண்டவன் பெயரிலே அவன்பிழை செய்தலைத் தடுத்தலென்று?

168.பாவத்தால் உயரவே முயலுவன் தண்டனை காலத்தால் அவனைச் சேரும்
      ஆபத்து சூழினும் அதிராதநீதிசார் மக்களைத் தவறாது வெற்றி சேரும்

169.வெல்லாமல்நீதியை அடக்கிடும் தீயவர் இறுதியில் விழுந்திடல்தான்
எல்லாரும் இறுதியில் கண்டவோர் உண்மையாய் வரலாறு சொல்லுதையா!

170. வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காகவே தீமைசெய் மனிதர்கள்தம்
குணமற்ற நிலையதால் உயிர்வாழும் மனிதவுரு விலங்குகள் மட்டுமேதான்