செவ்வாய், 25 ஜூன், 2013
சும்மா சிலவரிகள் 3
41. விவாத அரங்கத்தில் வெல்வதில் திறமையே முக்கியம் சரிபிழை
என்பதல்ல.ஆனால்.. நீதியை வெல்வதில் நேர்மையே முக்கியம் ஆள்
பார்த்தல் என்பதல்ல.
42. கடவுளைக் காணாமல் தேடியே அலைகின்ற மனிதனைக் கடவுளே
நேரில் வந்து பார்த்தால் "என்னை நேரில் கண்டுமேன் என்னையவன் கவனியாமல் போகின்றான் என்று வியப்பினால் மலைத்துப் போவான்.
43. ஒரு நாட்டின் பணத்தினை அது எதுவென்று புரியாதார் குப்பைக்குள்
எறிந்துவிடக்கூடும். சுய அறிவு இல்லாத மடையர்கள் அறிஞர்களை
இகழ்ந்து அதில் மகிழ்வு கொள்வதுவும் அப்படித்தான்.
44. அறிவினைச் சேர்ப்பது மிகமிகக்கடினம். அதனைப் பிறருக்காகப்
பயன்படுத்தலோ மிகமிக இலகு.
45. வண்ணத்தின் அழகு குழைப்பதில் கூடும். எண்ணத்தின் அழகு
உழைப்பதில் கூடும்.
46 தேய்க்கத் தேய்க்கப் பொன் பொலிவுறும். எழுத எழுத அறிவு
வலிவுறும். பார்க்கப் பார்க்க அறிவு விரிவுறும். கேட்கக் கேட்க
அறிவு தெளிவுறும்.
47. ஆழமில்லா குளத்திலே கப்பல் ஒடாது. ஆழமில்லா அறிவினால்
நன்மை வராது.
48. ஆற்றலுக்கு ஆயுதம் தொழிலாளி. ஆற்றலின்மைக்கு அதுவே
எசமான்.
49. நாற்பது நல்ல உரைகளை விடவும் ஒரு நல்ல செயல் பெறுமதி
கூடியது
50. நன்னீர் மலர் காக்கும். வெந்நீர் அதை அழிக்கும்.
இலட்சியங்களும் அப்படித்தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக