ஞாயிறு, 23 ஜூன், 2013
கண்மூடி நடந்தால் காலம் கைவிரிக்கும்
பிறருக்கு நலம்செய்யும் விதமதைப்போல்
குரல்தந்து உலகேய்க்க விழைந்திடாதே!
முதல் செய்த செயலெல்லாம் பின்புஒருநாள்
முதல்சேர்த்த பலனாகும் மறந்திடாதே!
தற்போதைக் குனதுவாழ் வுயரல்வேண்டி
தற்போது செய்பாவம் மறைந்திடாது
முட்களை விதைத்துநீ தோட்டம்போட்டு
முளைவிட்டுப் பலன்தரல் நடந்திடாது
மண்மேட்டில் நின்றுநீ மழையை வென்று
மழைவெள்ளம் அள்ளாமல் தப்பவீடு
அதனுயரத் தைநம்பி அமைத்துவைத்தால்
அதன்பிழைப் பொறுப்புயார்? நீயா, ஊரா?
ஆற்றுமணற் கொள்ளையினை வர்த்தகம்என்று
ஏற்றுச்செய்யும் வஞ்சகத்தால் நீரின்றிநாடு
வற்றிவாடித் தவிப்பததன் பாதகத்தாலே
சுற்றிவாழும் மக்கள்துயர் உன்பழியாகும்
ஞாலமதன் இயக்கமென்ப தெதிர்விளைவுதான்
காலமொன்றில் ஒன்றைவைப்ப தென்பதுண்மைதான்
செய்வினையின் நன்தைீமை வகுத்து இயங்கிடேல்
கைவிரித்துக் காலம்விடும்! நடக்கும் உண்மைதான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக