ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

சிந்தையைத் தட்டின் சிந்தனை திறக்கும்

தாவிடும் மனதினை ஓடவே விடுவது
  தவறுக்கு வழிவகுக்கும்
நாவினை அதன்வழி சுவைத்திட விடுவது
  நோய்களுக் கழைப்புவிடும்
தாவிடும் உணர்வுகள் தடமதை மீறினால்
  தரமது தகர்ந்துவிடும்
ஆவியும் உடலமும் நீதிக்காய் உழைத்தால்
  யாவிலும் திடம் பிறக்கும்.

நேர்வழி செல்பவன் பாதையை மாற்றினால்
  சீர்நிலை அகன்றுவிடும்
பார்வையில் பாவத்தைப் புதைத் ததைவீசினால்
  பார்கெடும் பாதை வரும்

படிக்கத் தெரியாமல் படித்துவிட முடியாது படிப்பிக்கப் படிக்காமல் படிப்பிக்கவும் முடியாது (கட்டுரை)


டிப்படையை அறியாத அறிவு அடிப்படையில் அறிவன்று.
சிந்திக்கத் தெரியாத சிந்தனை என்றைக்கும் சிந்தனை அன்று. நட்பினைத் தெரியாதவரின் நட்புறவு நட்பன்று.
உண்மையை உணராதவரின் உண்மை உண்மையில் உண்மை அன்று.
தூய்மையின் தன்மை உணரார் தூய்மையை அறிந்தவர் அல்லர்
அழகை உணரார் கண்ணில் அழகென்பது எதுவுமே அல்ல

ஆக-
வாசிப்பு என்பதும்  படிப்புஏன்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.

சனி, 29 செப்டம்பர், 2012

ஆலயத்தின் அவசியமும் அர்த்தமில்லா வழிமுறையும் (கட்டுரை)

ந்தக் காலத்தில்  நோயாளிகளுக்கு வைத்தியமனைகள் போல கெட்ட மனிதர்களுக்குத்தான்; பெரும்பாலும் கோவில்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன போல் தெரிகின்றது.

ஆலயத்துக்குப் போகும் நல்ல மனிதர்களுக்கு வரும் துன்பங்களும் துயரங்களும் குறைந்தபாடில்லை. ஆனால் அவை நம்மைப் புடம்போடக் கடவுள்தரும் சோதனைகள்தான் என்று சொல்லிக்கொண்டு  அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள். மனதை ஆற வைத்துக் கொள்கிறார்கள்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

துறவறத் தொழிலாளர்! ஜாக்கிரதை (கட்டுரை)

னித சக்திகளை வீணாக்கி வைத்து அதனடிப்படையில் உயர்வை விழையும் அற்புதமான ஆனால் ஆபத்தான அறிவாளிகளாக மதாபிமானிகளும் அவர்களின் வழிநடத்தலில் அவர்களின் பந்தங்களும் திட்டமிட்டுப் பரவி வைத்துவரும் நஞ்சானது  மனிதாபிமானத்தை ஒரேயடியாகக் கொல்லாது கொஞ்சம் கொஞ்சமாகவே கொலை செய்து கொண்டு வருகினமை ஒரு பெரிய கொடுமையாகும்.

எண் திசைகளிலும் தனிமனிதனின் அடையாளத்தையே மதம்தான் நிர்ணயிக்கின்றதோ என்னுமளவிற்கு ஊழல் புரையோடிப் போய்க் கிடக்கின்றது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சாவே என் முதலீடு ஐயா! (சிறுகதை)

ந்த மனிதரைச் சுற்றிலும் ஏகப்பட்ட கூட்டம். அவர் ஒரு சிறிய கட்டிடத்தின் படிக்கட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். சுற்று வித்தியாசமான தோற்றமாக இருந்தது.

பாதையில் அரைவாசியை நிரப்பிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் தானும் நுழைந்து கொண்டு அந்த மனிதரை நெருங்கினான் அமலன்.

அதென்ன ஒரு சாதாரண ஏழையைச் சுற்றி அத்தனை பெரிய கூட்டம்? ஏன் இப்படி ஒரேயடியாக  கலகலவென

புரியாமலும் புரியும் (சிறுகதை)

ரு கிராமத்தில் ஒரு பிறவிச் செவிடரிருந்தார். அவரால் எதையும் கேட்க முடியாதிருந்தாலும் பிறரின் உதட்டசைவை வைத்து ஓரளவிற்குப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருந்தது. ஊரில் பலருக்கும் அவரது இயல்பு நிலை தெரிந்திருந்தாலும் இவர் எதையும் புரிந்து கொள்ளக் கூடியவர் என்று கருதிப் பழகியதால் நாளடைவில் அவர் செவிடர் என்ற கருத்தும் கிட்டத்தட்ட மறைந்தே போயிருந்தது எனலாம்.

ஒரு நாள் அந்தக் கிராமத்துக்கு தனது உறவினரைப் பார்க்கவென்று

திங்கள், 17 செப்டம்பர், 2012

ஜயவேவா! ஜயவேவா!! (வெற்றி! வெற்றி!) (சிறுகதை)

1983-ம் ஆண்டு. புதிய லங்கா தகனம் ஆரம்பமாகியிருந்தது.

பட்டப்பகலின் பச்சை வெய்யிலுக்குப் போட்டியாக, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது இலங்கைத்தீவின் கொழும்பு மாநகரம்.

பலியாகப் போகின்ற ஆடுகள் பரிதவித்துக் கொண்டு தப்பிவிடப் பாய்ந்தோடுவதுபோல தமிழ் மக்கள் அன்றைய சிங்கள இனவெறிக்குத் தப்பித்துக் கொள்ளவென எங்கெங்கெல்லாமோ

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கல்லறைகளே! (சிறுகதை)


1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதி.

இலங்கை.

இயற்கையாகவே அழகு செழித்து ஓங்கும் அந்தச் சின்னஞ்சிறு தீவின் எங்கோ ஒரு பகுதியில் தொற்றிக் கொண்ட வகுப்புவாத வன்செயல் என்னும்  தீ படிப்படியாகப் பரவி வந்து அத்தீவின் முழு மண்ணும் செந்நிறமாக மாறத் துவங்கியிருந்தது.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் அமலன்.

சனி, 15 செப்டம்பர், 2012

நம்பினார் கெடுப்பதுவே.. நாடுகளின் தீர்ப்பு

த்தியன் போல்பேசும் கபடனை நம்பின்
சத்தியம் என்றைக்கும் நொண்டியாய்ப் போகும்
சத்தியம் சார்பவர் தோல்விகட் கஞ்சின்
சத்தியம் நிச்சயம் சரிவுறல் நேரும்.

பிறர்சொத்தை உடைமையைத் தேசத்தைக் கொள்ளை
அடிப்பதைக் கொள்கையாய்க் கொண்டவன் என்றும்
பிறர்மனம் பிழையாகப் பொருள்கொள்ளும் வண்ணம்
அடிப்படை உண்மைகள் அறியாமல் செய்வான்.

கல்லுக்குள் ஈரம் (கட்டுரை)


ரமுள்ள இதயங்கள் மிகுந்திடலே நடந்துவிடின்
இகம் பரமே ஆகிவிடும் புதுமையதும் நடந்து விடும்
பாரும் தன்னிடையில் படர்கொடிக்கு இடம் கொடுத்தே
பல்லுயிரைக் காத்திடலும் சாத்தியமாய் ஆகிவிடும்.

அந்த நதியோரத்தில் அமர்ந்து
இரசித்துக் கொண்டிருந்தார் ஒரு கவிஞர். ஆழமான அந்த நதியின் மேல்

புதன், 5 செப்டம்பர், 2012

தகரம் வெள்ளியென்றால் பித்தளை தங்கமாகும்


நேர்மையைக் கொண்டிலார் அறிவுரை கள்
நேர்மைபோல் பொய்சொல்லும். புரிதல் நன்று
பார்வையில் புண்ணியர் போ லியங்கும்
போர்வையர் புவியிலே அதிகம் உண்டு.

மொழிதனை வளர்த்தவர் என்று சொல்வார்
மொழிவைத்து வளர்ந்தவர் ஆய் இருப்பார்