தாவிடும் மனதினை ஓடவே விடுவது
தவறுக்கு வழிவகுக்கும்
நாவினை அதன்வழி சுவைத்திட விடுவது
நோய்களுக் கழைப்புவிடும்
தாவிடும் உணர்வுகள் தடமதை மீறினால்
தரமது தகர்ந்துவிடும்
ஆவியும் உடலமும் நீதிக்காய் உழைத்தால்
யாவிலும் திடம் பிறக்கும்.
நேர்வழி செல்பவன் பாதையை மாற்றினால்
சீர்நிலை அகன்றுவிடும்
பார்வையில் பாவத்தைப் புதைத் ததைவீசினால்
பார்கெடும் பாதை வரும்
தவறுக்கு வழிவகுக்கும்
நாவினை அதன்வழி சுவைத்திட விடுவது
நோய்களுக் கழைப்புவிடும்
தாவிடும் உணர்வுகள் தடமதை மீறினால்
தரமது தகர்ந்துவிடும்
ஆவியும் உடலமும் நீதிக்காய் உழைத்தால்
யாவிலும் திடம் பிறக்கும்.
நேர்வழி செல்பவன் பாதையை மாற்றினால்
சீர்நிலை அகன்றுவிடும்
பார்வையில் பாவத்தைப் புதைத் ததைவீசினால்
பார்கெடும் பாதை வரும்