ஞாயிறு, 31 மார்ச், 2013

கூடாத கூட்டங்கள் கூட வேணாம்! கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்!






வானத்திலேருக்கிற நட்சத்திரத்தைத்தான் இங்கிலீசுக்காரங்க இஸ்டாரு அப்புடீம்பாங்க. ஆனா இந்த சினிமாக்காரங்களையும் இஸ்டாருங்கிறாங்களே அது ஏன்? அப்புடீன்னு நான் மாசக்கணக்கா என் மூளையைப் போட்டுக் கொழப்பிட்டே இருந்தேன்.

 பதிலே கெடைக்கல்லே. அப்பாக்கிட்டே அதைப்பத்திக் கேக்கப் போனா “ஏண்டா ஒனக்கு அது?“ன்னு என்னையே திருப்பிக் கேட்டுட்டு தப்பிச்சோடிருவாரு. அந்தாளுக்கு வெவரம் போறாதுன்னு அடிக்கடி எல்லாருமே சொல்லிக்குவாங்கல்லியா? கேட்டிருக்கேனே!

 பொதுவா  மனுசன் கிட்டே இருக்கிற பலவீனம் என்னதுன்னா…எதையும் சட்டுபுட்டுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிறதுக்கு தயங்கிக் கிட்டே இருக்கிறதுதான். எல்லாருமே அநேகமா தங்களை எல்லாந் தெரிஞ்ச மேதாவிங்கன்னு காட்டிக்கிறதுக்குத்தான் அதிகமா அலட்டிக்கிறாங்களே தவிர, தெரியலைன்னு காட்டிக்கிறாங்களே இல்லை. ஏன்னா, அதனாலே அவங்க மவிசு கொஞ்சம் கொறைஞ்சி போயிடும்னு நெனைக்கிறாங்க. இது பெரிய தப்புங்க.

 கேக்கத் தயங்குறவன் முட்டாள்னு செர்மனி டிவியிலே கொழைந்தைங்க சீரியல் காட்டப்ப ஒரு பாட்டே போடுறாங்களாம்.

எதையும் கேட்டுக்கிட்டாத்தான் தெரிஞ்சிக்கிடலாம்.      தெரிஞ்சிக்கிட்டாத்தான் படிச்சிக்கிடலாம்.                                 படிச்சிக்கிட்டாத்தான் புடிச்சிக்கிடலாம்.                                            புடிச்சிக்கிட்டாத்தான் ஒசந்துக்கிடலாம்.       இல்லீங்களா?

 நானு மெதுவா என் அம்மா கிட்டே போய் கேட்டேன். அவங்க சிரிச்சாங்க. „எலே அப்பாசாமி, ஒனக்கு இப்பவே சினிமா இஸ்டாரு ஆவுறதுக்கு ஆசை வந்திடுச்சா?“ அப்புடீன்னுட்டு,

 „ போய் பாட்டி கிட்டே கேளு. அவுகதான் படிச்சவுக. எதையும் சரியா சொல்லிக் குடுக்க அவுகளாலேதான் முடியும். போ“ இன்னாக.

அட, நம்ம பாட்டி இருக்கச்சே மத்தவங்களைப் பத்தியெல்லாம் யோசிச்சி டைம்மை வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு அப்பத்தான் என் மூளையிலே தட்டிச்சிது.

ஒடனே பாட்டி கிட்டே ஓடினேன். மொதல்ல.. கொஞ்சம் ஐஸ் வைப்போம்.

„ பாட்டி, பாட்டி நீங்க ஒரு இஸ்டாரு“

அதைக் கேட்டதும் பாட்டிக்கே கொஞ்ச வயசுப் பொண்ணுகளோடே ரெண்டாம் குணம் அதான் நாணம் வந்துட்டுது.  வெக்கப்பட்டுட்டாக.

நம்ம சிவாசி மவன் பெரபு சிரிச்சதும் வெக்கி நெளியிற குசுப்பு மாதிரி வளைஞ்சிக்கிட்டே…

„ என்னடா சொல்றே நீ அப்பாசாமி? நானு  இஸ்டாரா? நக்கலா அடிக்கிறே?“ அப்புடீன்னு கொழைஞ்சாக.

கெழடுக்கும் புகழாசை இருக்கும்னு புரிஞ்சுது எனக்கு. மெதுவா என் சந்தேகத்தை எடுத்துப் போட்டேன்.

 கெழவி கம்பூட்டர் மாதிரி டக்குன்னு சொன்னாக.

„மேலே அண்ணாந்து பாக்க வைச்சாத்தான் எதுக்கும்  மவுசு இருக்குன்னு அர்த்தம். நட்சத்திரத்தை அண்ணாந்துதான் பாக்கணும். சினிமாக்காரங்களும் தெரையிலே மேலேதான் இருந்து நம்மையெல்லாம் அண்ணாந்து பாக்க வைக்கிறாங்க. அது மட்டுமில்லே ஏங்கவும் வைக்கிறாங்க. புரியுதாடா?“

இனியும் புரியல்லேன்னா பாட்டி என்னையும் அப்பாரு மாதிரின்னு சொல்லிப்புடலாமில்லியா? அதனாலே புரிஞ்சிட்டுதுன்னு சொல்லிப்புட்டு ஓடிப் போயிட்டேன்.

                                                               .........................

ஒரு வாட்டி எங்க பக்கத்து வூட்டுப் பனியம்மா பாட்டியோடே பேசிட்டிருக்கச்சிலே என்னதுக்காகவோ „ எப்பவுமே நாலு பேரு கூட்டு சேர்ந்தாக்கா வம்புதான் வரும்“ னு என் பாட்டி சொன்னாக.

நான் கேட்டேன் „ஏம்பாட்டி நாலு பேரு சேந்தாத்தானே வம்புங்கிறீங்க. அஞ்சு பேரோ ஆறு பேரோ சேந்தா வம்பே வராதா?“

பொக்கு பொக்கு பொக்குன்னு பாட்டி குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சாக. அவுக காதிலேருந்த பாம்படம் ஆடி ஆடிக் குலுங்கிச்சுது.

„அடேய் அப்பாசாமி. ஓன் அப்பாவை அப்புடியே உரிச்சி வச்சிரிக்கேடா? அவனுக்கும் மூளையில்லே. ஒனக்கும் மூளையில்லே. முட்டாப் பய மவனே!“

எனக்கு கறுப்புத்துண்டு தோளிலே இல்லாமலே சுருக்குன்னு சுயமருவாதி ஒணர்வு குத்திச்சிது. ஆனாலும் பாட்டி சிரிச்சதைப் பாத்ததும் கோபம் வரலை. நானும் சும்மா சிரிச்சிக்கிட்டேன்.

அம்மா குசினிக்குள்ளாற இருந்துக்கிட்டு, „இந்தக் கெழவிக்கி எப்பவுமே ஊர் வம்பையெல்லாம் வலிய இழுத்துக்கிற வேலைதான்“ னு முணுங்கினது கேட்டுது.

ஆனா பாட்டிக் கெழவிக்கு அறிவும் அனுபவமும் அதிகம்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்கிறதாலே ஏதாச்சும் நாயம் இல்லாமே பாட்டி பேசாதுங்கிறதும் அவுகளுக்கு தெரிஞ்சுதானிருந்திச்சுது. பொறவு பாட்டி நாலுபேருங்கிறது வெவரம் இல்லாமே, சும்மா கூட்டம் சேர்றதைத்தான்னு வெவரமா சொன்னாக. புரிஞ்சிக்கிட்டேன்.

எனக்கும் நாலைஞ்சு பேர் கூட்டாளிங்க இருந்தாங்க. இருந்தாலும் லேசில வம்பு வந்த மாதிரி தெரியலை. ஒரே ஒத்துமை. அதாலே என்னாலே பாட்டி சொன்னதை முழுக்கவும் சரிதான்னு ஏத்துக்க முடியலை. ஓத்துமையா சண்டை போட்டுக்காமே சிரிச்சிட்டே இருந்தா ஏன் சண்டை வருது? வம்பு வருது?  என்னாலே நம்ப முடியலை.


                                                                ..............................

ஒரு நாள் நானும் எங் கூட்டாளிங்களுமா சேந்து சுப்புப் பாட்டிக்கிட்டே சுடச்சுட வடை வாங்கித் தின்னுக்கிட்டே பேசிட்டிருந்தோம். திடீர்னு அண்ணா புட்பால் சங்கம்னு ஒண்ணை ஆரம்பிச்சா என்னான்னு ஒரு ஐடியா பொறந்துது. உடனே அதுக்காவ திட்டம் போட்டோம்.


ஐடியா என்னமோ அருமையாத்தான் பட்டுது. ஆனா அந்த ஐடியாவை பாட்டிக்கிட்ட சொல்றதா அம்மாகிட்டே சொல்றதான்னு ஒரே ரோசனை எனக்கு. ஏன்னா சங்கம் வச்சப்புறம் லெட்டர் பேடொண்ணு அச்சடிச்சு எல்லாரோடே பேரையும் போட்டுக்கலாம். பதவி கெடைச்ச மாதிர இருக்கும். வீரகேசரி பேப்பர்லே அதை செய்தியா போடுறக்குன்னு எங்க அடுத்த தெரு ரிப்போட்டர் மாமா பிச்சையா கிட்டே குடுத்தா அவரே ஒடனே வால் தலை எல்லாம் வைச்சு எழுதி செய்தியாப் போட்டுடுவார். பொறவு பெரிசா பேர் வந்துடும். ஆனா…. கதை மாறி எதாச்சும் வம்பு தும்பும்புன்னு வந்துட்டுதுன்னா பாதுகாப்பு வேணாம்? அதுக்காவத்தான் நானு அப்புடி யோசிச்சிட்டிருந்தேன்.

ஏன்னா… என் தாத்தா ஒரு வாட்டி என் அப்பாகிட்டே எதுக்காவவோ சொன்னாரு: “ எலே மாடசாமி! எதையுமே செய்றதுக்குத் தொடங்குறதுக்கு முன்னாடி நல்லா ரோசிச்சிப் பாத்துக்க. பின்னாலே என்ன வரும்னு ரோசிக்காமே சட்டுப்புட்டுனு எதையாச்சும் செஞ்சியோ…? அம்புடுதான்.

ஓனக்கு நெனைவிருக்கா? ரோசனையே பண்ணிக்காமே காலிலே ரப்பர் சிலிப்பரு செருப்பை மாட்டிக்கிட்டு, நம்ம ராமையா எண்ணைக் கடைக்கி முன்னாடி தீவாளி அன்னிக்கி  டுவிசு டான்சு ஆடப்போயி, காஞ்ச எண்ணெய்யிலே பொதக்குன்னு கால் வழுக்கிக் கீழே உழுந்துட்டு, பொறவு சிலிப்பரையும் அறுத்துக்கிட்டு, ஆரை, எப்புடி குத்தவாளிங்கிறதுன்னு தெரியாமே தவிச்சானில்லே ஒன் பெரியப்பா முனுசாமி? அது மாதிரித்தான் நீயும் தடுமாற வேண்டி வரும். சாக்கிரதை” அப்புடீன்னாரு.

இந்த முனுசாமித் தாத்தா ஒரு படுகெழம். தொண்ணூறு வயசு வரைக்கும் அச்சு தேஞ்ச மாட்டு வண்டியாட்டம் இழுஇழுன்னு உசிரை இழுத்திட்டே இருந்திட்டு, நானு பொறக்குறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி குழிக்குள்ளாற பூந்து ஆண்டவனை தேடிக்கிட்டு போயிட்டவருன்னுதான் எனக்குத் தெரியும். பட்டாசு போட்டுப் போட்டு எடுத்திட்டுப் போயி கொண்டாடிக்கிட்டுத்தான் பொதைச்சாங்களாம். எல்லாருக்கும் „ அப்பாடா, தொணதொணப்பு போச்சே“ன்னு ஒரே சந்தோசம் போல.

எனக்கு அவரப் பத்தி வேறே எதுவுமே வெவரமா  தெரியாது. ஆனாலும் ஏதாச்சும் ஒரு சம்பவத்திலேருந்து பாடம் படிச்சிக்கிறதுக்கு வழி கெடைக்கும்னா அது நல்லதுதானேன்னு நானும் அவதானமா தாத்தா சொல்றதைக் கேட்டுட்டிருந்தேன்.

அப்பத்தான் தாத்தா ஒரு பெரிய பழமொழிய சினிமா டாக்கீஸ் போஸ்டரை சைவக்கடை செவுத்திலேருந்து உரிக்கிற மாதிரி பரபரன்னு மூளையிலேருந்து உரிச்சி எடுத்து உட்டாரு. “எலே மாடசாமி! வருமுன் காப்போன் மதியூகின்னு ஒரு பழமொழி இருக்குதே! அது ஓனக்குத் தெரியுமாடா?”

என் அப்பாரு மொதல்லே வாயைத் தொறக்காமே தலையை சொறிஞ்சாரு. கொஞ்சம் பொறுத்து, வாயைத் தொறந்தாரு. வெத்தலக் காவி படிஞ்ச பல்லெல்லாம் என்னமோ பூமி நடுக்கத்திலே இடிஞ்சு உழுந்து கெடக்கிற பில்டிங் துண்டுங்க மாதிரி அவரு ஈஈஈன்னு இளிச்சப்போ ஒரே மேடு பள்ளமா, ஒரே இருட்டா மட்டும் தெரிஞ்சுது.

தாத்தாவுக்கு வாலிலே மிதிபட்ட பூனைக்குட்டியாட்டம் பெரிய கோவம் வந்திட்டுது. ஒரே சத்தமா கத்தினாரு. “ஏண்டா டேய்! நாலாங் கிளாசு வரைக்கும் நல்லாத்தானேடா  படிச்சிருக்க? அவ்வளவு நாளும் இதப்பத்தி ஒன் வாத்தியாரு ஒனக்கு ஒண்ணுமே சொல்லிக் குடுக்கலையா?”

அப்பா டக்குன்னு சொன்னாரு: “ அப்பா அவருக்கு ஒங்களவுக்கு அறிவு இருந்திருந்தாத்தானே சொல்லிக் குடுக்க முடியும்? அவருக்கு அடிக்கடி வெத்தல போடவும் சைடுக்குப் போயி பீடி அடிக்கவும்தானே ரொம்ப நேரம் தேவையாயிருந்துது. படிச்சா குடுத்தாரு அவரு? சும்ம்ம்ம்மா தம்முதானே அடிச்சிட்டிருந்தாரு”

தாத்தாவுக்கு தன்னோடே மவனே தனக்கு அறிவாளின்னு சட்டிப்பிகேட்டு குடுத்திட்ட மாதிரி ஒரு பெருமை. சிரிச்சுக்கிட்டே கேட்டாரு. “ மதியூகின்னா என்னான்னாவது தெரியுமா ஒனக்கு?”

அப்பா திரும்பவும் தலையச் சொறிஞ்சாரு.

“எலே தெரியல்லேன்னா டபக்குன்னு சொல்லிடணும். அத உட்டுட்டு சும்மா பேன், கரப்பாம்பூச்சி கடிக்கிற மாதிரி சொறியிற சொறிச்சல் வேலை வேணாம்”

“சரீப்பா”

அப்பாவோட இடிஞ்ச பல்லு திரும்பவும் தெரிய ஆரம்பிச்சுது. அதான் அசடா இளிச்சாரு.

தாத்தா சொன்னாரு:

“மாடசாமி! மதியூகின்னா அறிவாளின்னு அர்த்தம். எதுவுமே வர்றதுக்கு முன்னாடியே எச்சரிக்கையா நடந்துக்கணும். அப்புடி சரியா ரோசிச்சி நடந்துக்கிறவன்தான் அறிவாளின்னு அருத்தம். அப்படியில்லேன்னா....”

“ நானுன்னு அருத்தம்”
அப்பா முடிச்சாரு. தாத்தா லொபக்கு லொபக்குன்னு சிரிச்சாரு.

“மடப்பயலே!”

இப்ப நானு அதைத்தான் நெனைச்சுப் பாத்தேன். நாமளும் சங்கத்தை தொவக்கிறதுக்கு முன்னாடி மதியூகியா நடந்துக்கிடணுமில்லியா?

அன்னிக்கி சாயங்காலமா நைஸ்ஸா… அம்மா கிட்டே மெதுவாப் போனேன். அவங்க டின்னருக்கு என்னமோ சமைச்சுக்கிட்டு இருந்தாக.

“அம்மா... நாங்க ஒரு புட்டுபால் சங்கம் தொடங்கப் போறோம்மா? அண்ணா புட்டுபால் கிளப்னா நல்லாருக்குமா அண்ணா புட்டுபால் சங்கம்னா நல்லாருக்குமா?”

அம்புட்டுதான்!
கீரியை வெறட்ற பாம்பு மாதிரி அம்மா „சுர்ர்ர்ர்“னு சீறிப்புட்டாக.

“எலே சும்மா பாடம் படிக்காமே பந்தடிச்சிப் பெயிலாவவா திட்டம் போடறே? பேசாமே பந்தைத் தூக்கி மொதல்ல பொந்துக்குள்ளே போட்டுட்டு ஒழுங்காப் படி. படிச்சதுக்கப்புறமா பந்தடிக்கிறதை பாத்துக்கலாம்.”

எனக்கு சப்புன்னு ஆயிட்டுது. இந்தம்மா என்னா ஏதுன்னு வெவரம் கேட்டு நம்மள உற்சாகப்படுத்துவாகன்னு நெனச்சிப்போனா இப்புடிச் சொல்லிட்டாகளே!” அப்புடீன்னு ஒரே கவலையாயிருந்துது.

இவுகளுக்கு பாட்டி தேவலை. அவுககிட்டே போவோம்னு நெனச்சிக்கிட்டு மெதுவா வாசலுக்கு…. அவுக பக்கமா நவந்தேன்.

பாட்டி வெத்தலக் கொழவியிலே டக்கு டக்குன்னு பாக்கு போட்டு இடிச்சிட்டிருந்தாக. பக்குவமா கிட்டே போயி பாட்டி கிட்டேருந்து கொழவிய நான் வாங்கி இடிச்சேன்.

கெழவிக்கி என்னமோ புரிஞ்சிட்டுது. “என்னடா அப்பாசாமி! ஏதாச்சும் சில்லறை கில்லறைக்கி அடிபோடுறியா?”

சீ! என்னா ஒலகம் இது? எதுக்கெடுத்தாலும் ஒரே லஞ்சம் ஊழல்னு எல்லா எடமும் பரவிக் கெடக்கிற சனியன் இப்போ நம்ம வூட்டுக்குள்ளாறவும் வந்திட்ட மாதிரி இருக்கே!“ ன்னு கோவம் வந்துது எனக்கு.

இருந்தாலும்… இப்ப காரியம் நடக்கணுமே! அதுக்காக பொறுமையா அரசியல்காரங்களைப் போல பொறுமையா இருந்துக்கிட்டேன்.

“இல்லே பாட்டி! வந்து....நாங்க ஒரு புடடு பால் சங்கம் தொவங்கலாம்னு நெனைக்கிறோம். அதான் ஒங்க ஐடியாவையும் ஒத்துழைப்பையும் கேக்க வந்தேன்”

பாட்டி ஒரு வாட்டி நம்ம கே.ஆர். விஜயா மாதிரி சிரிச்சாக. ஒரு வித்தியாசம். அந்தம்மா சிரிச்சா வெள்ள வெளேர்னு பல்லு வரிசையா அழகாத் தெரியும். எம் பாட்டி சிரிச்சப்போ ஒரு பெரிய கொகை மாதிரி இருந்திச்சி. அம்புடுதான்”

ரெண்டு செக்கண்டு கழிச்சு பாட்டி கேட்டாக:

“எலே அப்பாசாமி! யார் யாரெல்லாம் ஒங்க சங்கத்திலே இருக்கீங்க?”
அட பாட்டி நம்ம கைக்குள்ள வந்துட்டாக போலிருக்கே!

“ நம்ம ராமசாமி  சின்னசாமி அருமைசாமி முத்துசாமி கண்ணுசாமி அந்தோனிசாமி  கருணைசாமி, நானு….”


“எலே எலே போறும்டா. எல்லாருமே சாமிங்கன்னா அது ஆண்டிங்க கூடி கட்டுற மடம் மாதிரித்தாண்டா இருக்கும். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க: கூடாத கூட்டங்கள் கூட வேணாம். கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்”

இதென்னடாது! கெழவி ஒரே ணாம்ணாம்னு பாட்டுப் பாடுது?
எனக்குப் புரியலை.

பாட்டி சிரிச்சிக்கிட்டே சொன்னாக: அடேய் திட்டம் போட்றது பெரிசில்லே. அதை சரியா  செம்மையா செய்யவும் வேணும். மொதல்ல வேணும்னா எல்லாருமா சேந்து காசு சேத்து ஒரு பந்தை வாங்கிக்கிட்டு வெளையாடுங்க. அதுக்கப்புறமா பாத்து சங்கம் போடுங்க. ஏன்னா.... எதையும் தொவங்கச்சிலே கூடுற கூட்டம் தொடர்ந்து இருக்கும்னு நம்ப முடியாது. சொல்லிப்புட்டேன்”

எனக்கு சப்புன்னு ஆயிட்டுது. இருந்தாலும் அடுத்த நாள் எல்லாரும் சந்திச்சப்போ ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு மொதல்ல ஒரு புதுப் பந்து வாங்குவோம்னு பாட்டியோட ஐடியாவை  எனது ஐடியாவாச் சொன்னேன்.

அப்பத்தான் தெரிஞ்சிது எல்லாப் பயலுவளுமே சும்மா ஓசியிலே வெளையாடற படுவாக்கள்னு. ஓரு பயலுமே காசு தர முன்வரலை. “ அடேய் அப்பாசாமி, நீ ஒன் அப்பாரு கிட்டே கேட்டு மொதல்ல பந்தை வாங்கு. பின்னாடி நாங்க கொஞ்சம் கொஞ்சமா தர்றோம்”னு கதை உட்டானுவ. நான் என் தாத்தாவை நெனைச்சுக்கிட்டேன். வருமுன் காத்துக்கணும். அப்பத்தான் நாமளும் அறிவாளின்னு ஒரு வாட்டி எனக்குள்ளாற நெனைச்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் புட்பால் கிளப் அப்புடீயே சுனாமியிலே பொதைஞ்சு போன சட்டி பானையாட்டம் பொதைஞ்சி போச்சுது.

இப்ப வளந்து பெரிய மனுசனாகி வெளிநாட்டுக்கும் வந்தப்புறம்தான் பழைய கால புத்தியிருக்கிற அதே சனங்க இங்கேயும் அப்புடியே இருக்கிறது தெரியுது.

எல்லா எடத்திலேயும் சங்கம்னு ஒண்ணை தொவங்குறதுக்குன்னே ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்குது. உள்ளாற ஒரு ஐடியாவோடே ஸ்டாட் பண்ணுவாங்க. ஆனா ஊருக்கு உபதேசமும் சேவையும் செய்றதுக்குன்னுதான் ஒண்ணுக்கு இருந்து முன்னுக்கு வருவோம்னு சங்கம் போடுறோம்னு சொல்லிக்குவாங்க.

பொறவு பாத்தா படிப்படியா, உருப்படியானவங்கள்ளாம்  கழந்துடுவாங்க. அவங்களா கழறல்லேன்னா இவங்களே பெரேரணை அது இதுன்னு அவங்களுக்கு எதிரா எடுத்துவுட்டு, கழட்டிப்புடுவாங்க.

கடைசியிலே கொஞ்சம் மிச்ச சொச்சங்க மட்டும் கொடி புடிச்சிக்கிட்டே சங்கம் நடத்தும்.

மனசார சேவைன்னு இல்லாமே அவனவன் தன்னை வளக்க மட்டும் பக்குவமா சதி செய்திட்டே இருப்பான்.

எனக்கென்னமோ இதுகளுக்குள்ளாற புவுந்துகிட்டு அப்புறம் எறும்புக் குழிக்குள்ளே கையை உட்டுட்டு, சொறியிற வேலை அனாவசியம்னு பட்றதாலே ஒதுங்கி இருந்துக்குவேன். ஆனா அதுக்காவ நல்ல சங்கமே இல்லேன்னும் அர்த்தமில்லே.

கருவாட்டுக் கடையிலே துணி வித்தா எப்புடி இருக்கும்? கருவாடும் நாத்தமடிக்கும். அதுக்குள்ளே இருக்கிறதாலே துணியும் நாறும். இல்லீங்களா?

இதை வச்சுத்தான் நம்மாளுங்க நம்மை எச்சரிச்சு „கூடாத கூட்டங்கள் கூட வேணாம். கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்“ அப்புடீன்னு சொல்லியிருக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்.

நல்ல நண்பர்கள்னும் கெட்ட நண்பர்கள்னும் ரெண்டு கிளாஸ் இருக்கிறதை நாம மறந்திடக் கூடாதுங்க. ஏன்னா நல்ல நண்பர்கள் கெடைக்கிறதுங்கிறது ஒரு அதிர்ஸ்டம் பாருங்க.

தன்னோடே நண்பனுக்காக நல்லதை நெனைக்கிற எவராவது இருந்தா அவங்க இருக்கிற எடத்திலே தெய்வம் இருக்குன்னு நம்பிக்கலாம். „கடவுள் இல்லே! கடவுள் இல்லே“ன்னு கத்துறாங்களே, அது ஏன்னு புரிஞ்சிருக்குமே!

ஒங்களோடே கூட்டாளின்னுக்கிட்டு யாராவது ஒட்டிக்க வந்தாங்கன்னா „டக்“குன்னு நம்பிடாதீங்க. நல்லாருக்கச்சிலே பாசமா நடக்கிறவங்க ஒங்களுக்கு ஏதாச்சும் எடைஞ்சலோ துன்பமோ பொருளாதாரக் கஷ்டமோ வரும் நேரத்திலே எப்படி நடந்துக்கிறாங்கன்னு அவதானமா பார்த்துக்குங்க.

பக்குவமாக சாட்டு சொல்லித் தப்பிக்கிட்டே ஒதவாமே நழுவிக்கிற நைஸ் வியாபாரிங்களும் ஒங்க நெலைமையை புரிஞ்சுக்கிறாத மாதிரி காட்டிக்கிட்டே ஒதுங்கிக்கிற ஓப்புக்காரங்களும் ஒங்க பலம் கொறைஞ்ச நெலைமையை ஊர் பூராவும் பரப்பி விட்டுட்டு, சிரிச்சிக்கிட்டே ஒட்டிட்டிருக்கவங்களும் ஒங்க கூட்டாளிங்க இல்லை.


ஒங்களுக்கு ஒண்ணுண்ணா தனக்கு நடந்தாப்போலே நெனைக்கிறவங்களும் ஏலாமே இருந்தாலும் எப்படியாவது ஒதவ முடியாதான்னு நெனைக்கிறவங்களும் யாரோ அவங்களைத்தான் நம்புங்க.

ஏன்னா செய்றதும் செய்யணும்னு மனசார நெனைக்கிறதும் புண்ணியத்தோடே எலக்கணத்திலே ஒண்ணுதான். நல்லதுகளுக்குத்தான் நல்ல நெனைப்புக்களும் வரும்.                                                                                                
 காத்துக்கு வாசமும் நாத்தமும் சேர்க்கையை பொருத்துத்தான் இல்லீங்களா?

 செலாளுங்க ரொம்பவும் பக்குவமாவும் பவ்வியமாவும் பரிசுத்தமான தேவதைங்களாட்டம் தெறமையா பேசிப் பழகுவாங்க. ஆனா உள்ளாடி வெறும் கருமிசமும் வைராக்கியமும் பகையும்தானிருக்கும். பழகினீங்கன்னா ஏதோ ஒலக சாதனையெல்லாமே அவங்களாலேதான் நடக்கிற மாதிரி கதையடிப்பாங்க. ஆனா அவங்க கிட்டேயே ஒங்களுக்கு இருக்கிற ஒயர்வான ஆசைன்னு எதையாவது சொல்லி ஒதவி செய்யக் கேட்டுப் பாருங்க.

அப்பத்தான் எப்படிப் பக்குவமாவும் தெறமையாவும் அவங்க ஒங்க ஆசையை தட்டிவிட்டு ஒங்களை தடுக்கிறாங்கங்கிறதை நீங்க சரியா அடையாளம் காணுவீங்க. அவங்களை நம்பவே நம்பாமே, ஏதோ அவங்களை நம்பறாப்பலே நீங்களும் சும்மா புது நடிகராட்டம் கொஞ்சம் நடிச்சுப் பாருங்க. அப்பத் தெரியும் அவங்களோடே நெஜமான நெறம். முள்ளை முள்ளாலேயே எடுக்கிற மாதிரித்தான் இதுவும். புரிஞ்சுதா?


நட்பா பழகுறது வேறே, நண்பரா ஏத்துக்கிறது வேறே! ரெண்டுக்கும் டிப்பெரண்ட்டு இருக்குது.

நண்பரா ஏத்துக்கிறதுக்கு முந்தி சந்தேகத்தோடேதான் பழகணும். சரியான ஆளுன்னு கண்டு பிடிச்சி நட்பு வச்சோமோ, அதுக்குப் பின்னாடி சந்தேகமே வரக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. ஏன் தெரியுமா?

ஆளைக் கண்டு மயங்காதே! நம்பவே நம்பாதே! மூளையை சரியா ரோசிக்காமே வித்துட்டமோ நட்பே நஞ்சாயிடும்னு நம்மை எச்சரிச்சு வைக்கத்தான்.

சொந்தம் பந்தம் கூட செல சமயங்களிலே தீப்பந்தங்களாகி விடுறதுண்டு. நல்ல கொணம், நல்ல புத்தி, நல்ல பழக்க வழக்கங்க எல்லாம் நாம எப்பவும் பொடம் போட்டுப் போட்டுப் பாலிஷ்; பண்ணி வைச்சுட்டே வர வேண்டிய வெசயங்கள். சும்மா மேடையிலே பேசிட்டு நடையை மாத்தி நடந்துக்கிற சமாச்சாரங்களில்லை.

எவனாவது பேச்சு வேறே வாழ்க்கை வேறேன்னு இருந்தான்னா, அவன் ஒழுக்கமில்லாத ஆள்னுதான் அர்த்தம். அவனோடே சேர்றதும் அவனைப் போல ஆளுங்களா இருந்தாத்தான் அவங்க தொடர்பு நெலைச்சிருக்கும். ஒரு சாதிப் பறவைகள்தானுங்களே ஒண்ணாப் பறந்து போவும்?

ஆந்தையும் வாத்தும் காக்காவும் புறாவும் ஒண்ணாப் பறந்து என்னிக்காவது பார்த்திருக்கோமா?

யார் கூடயாவது சேரணும்னு நீங்க நெனைச்சா, மொதல்ல ஆளைப் படியுங்க. ஆழந் தெரியாமே காலை உட்டா மூழ்கிச் சாகணும். ஆளையறியாமே சிநேகம் வைச்சா அவதிப் பட்டே ஆவணும்.


நீங்கள்ளாம் என் முனுசாமித் தாத்தா மாதிரி ரோசிக்காமே நம்பி நடந்துட்டுப் பொறவு தடுமாறக் கூடாதேன்னுதான் ஒங்களுக்கு இப்போ இதைச் சொல்லி வைக்கிறேன்.

தயவு செஞ்சி…

கூடாத கூட்டங்கள் கூட வேணாம். (வீணா மனசுக்குள்ளே) கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்.



மறக்க மாட்டீங்கதானே!

போயிட்டு வாறேன்.

அடுத்த வாட்டி சந்திக்கிற வரைக்கும்,

 ஒங்க அப்பாசாமி

திங்கள், 25 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 14




                                                               






131.ஏமாளி யாகநாம் இருக்கின்ற வரைக்குமே தெரிந்தெம்மை ஏய்த்து நிற்பார்
       நாமாக நம்தன்மை சரியாக உணர்ந்திடில் எதிரியும் மதித்து நிற்பார்

132.நாளைக்கும் சாவரும் இன்றைக்கும் சாவரும் வாழ்கையவாழ்ந்து                 கொள்வோம்
      நாளைக்கு வரவுள்ள சந்ததிக் குதவிடற் கெதுநன்று என்று செய்வோம்

133.எல்லாமும் தெரிந்தவன் எனவெந்த மனிதனும் உலகிலேஎங்குமில்லை       
இல்லையே தெரியாமல் ஒன்றுமே என்றுமே எவனுமே உலகிலில்லை

134.புல்தின்று பலம் கொள்ளும் குதிரையை நம்பிநாம் புல்தின்று பலம்வராது
சொல், செயல், ஆற்றலில் பிறர் தொற்றி நடிப்பதால் சுயபலம் வளர்ந்திடாது

135.பொய்யென்றும் மெய்யென்றும் வாதிட்டுத் தவிப்பதால் உண்மைக்கு ஒன்றுமில்லை
செய்வினை தொடர்ந்துநம் வாதைக்கும் நன்மைக்கும் செயற்கேற்ப பயன்தரும் பொய்யுமில்லை.

136.அருகிலே இருந்தாலும் அறிவிலார் நல்லதை அடையாளம் காணமாட்டார்
பெருமையைப் போலியில் தேடியே அலைவதால் அறிவாலும் உயரமாட்டார்

137.தரையிலே வாத்துடன் கோழியும் சமமாக இரைதேடல் நீரிலும் சரியாகுமா?
தரணியில் மனிதரின் சமத்துவம் தகுதியில் தகைமையில் வேறன்று!  தவறாகுமா?

138.கடன்வாங்கும் முன்பதாய்த் திருப்பிக் கொடுப்பதைத் திட்டத்தில் வைக்கவேண்டும்
கடன்தந்தார் மனம்புண்ப டாவண்ணம் நாணயம் காத்ததைச் செலுத்த வேண்டும்

139.அழகதை நம்பியே கடதாசிக் கப்பலில் கடலேறத் துணிபவர் யார்?
அழகாகப் பேசினார் என்பதை வைத்துத் தம் இரகசியம் பகிர்பவர் யார்?

140.அழகான இயற்கையின் காட்சிகள் வானத்தில் நிலையில்லை என்னத்திற்காய்?
அழகது இதயத்தின் தெளிவதே! மற்றவை இலையென்று உணர்த்துதற்காய்!

சனி, 23 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 13



 




121.தீயவன் நல்லதைத் தீமையாய்ச் சொல்லித்தன் தீமையை நல்லதென்பான்       இயங்கிடும் நல்லதை இயங்காது தடுக்கவே அவனதைப் பரப்ப நிற்பான்

122.தன்னலம் பேணவே நீதியை மறுத்துநல் மனிதத்தை ஒதுக்கும்நாடு                 
       என்னலம் சொல்லியும் என்னதான் செய்யினும் அப்பாவம் தப்பிவிடாது


123.வாவென்னும்உதடுகள்  நம்பிஉள் நுழைபவை பல்லுக்குள் அரைதல்நேரும்
       வாவென்று வரவேற்கும் தீயரால் பின்னாளில் துயரமே நம்மைச்சேரும்


 124.துன்பத்தில் மறைபவன் நட்பென்று தெரிந்தால் தூரத்தில் நிறுத்திநீ வை
       இன்பமும் துன்பமும் தனதென்று வந்தானை இதயத்தில் நிறுத்திநீ வை

125.உள்ளத்தை ஒழுங்காக வைத்திரா மனிதரின் எழுத்திலே பொய்யிருக்கும்
      கள்ளமாய்க் கள்ளோடே பாலவர் கலப்பதால் சமுதாயம் நலமிழக்கும்

126.வதைவந்து வருத்துமுன் நோய்வரா வண்ணம் நாம் வாழ்தற்குமுயலல்    

       வேண்டும்
     இதை அன்றே உணராமல் இன்றைக்குநான்படும் பெரும்பாடு போதும்
       போதும்


 127.புதிதென்றும் அரிதென்றும் பெருமைகொள்விதமெங்கும் என்றைக்கும்                   எதுவுமில்லை
        எதிலெடுத்துப் பார்ப்பினும் முன்னறிந்தோர் பகிர்வன்றி புதிதாக                                எதுவுமில்லை 
 

 128. நாம்வாழும்சூழ்நிலை எதிராகத் தெரிந்திடில் எதிர்த்துநில் ஓடிடாதே!
         நாமாக வெல்லாமல் நமைவெற்றிசேராது!எப்போதும் மறந்திடாதே!

129..கைகூப்பிக் கடவுளை வணங்கிடும் எவரையும்நல்வராய்நம்பிடாதீர்                      கைகூசாக் கள்வரும் வணங்குவார் கடவுளை நமைஏய்க்க, மறந்திடாதீர்

130.விழிநின்று வடியும்நீர் துக்கத்தைத் தெரிவிக்கும் என்பார்கள்பொதுவாக              விழியிலே நீர்வரும் மனமெல்லாம்நிறைவாகும் மகிழ்விலும் மறவாதீர்

இறைவனும் மதங்களும்






இன்றைய உலக அமைதியின்மைகளுக்கான காரணங்களில் மதபேதங்களுக்கே பெரும் பங்கு இருப்பதுதான், நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டேயாக  வேண்டிய கருத்தாக வளர்ந்து கொண்டு வருகின்றது.


மனப்பயம் உருவாக்கிய ஒரு நம்பிக்கை,
 

அந்த நம்பிக்கை ஓர் உண்மைக்கான அடிப்படையைத் தொட்டு நிற்பதாக அந்நாளைய மக்களின் மனங்களில் எழுந்து, வளர்ந்த அனுமானம்,

அதனை மக்கள் மத்தியில் பரவலாக்குவது மனிதத்துக்கு நல்லது என உருவான ஒரு பிறர் நன்மை கருதி எழுந்த எண்ணம், படிப்படியாக ஆழ்ந்த ஆர்வமும் அவசரமும் அணுகுமுறைகளும் இலக்கணங்களாக அமைந்து வேதங்களாகி, அவற்றினடிப்படையில் ஏற்படத் துவங்கிய கருத்து வேறுபாடுகள்,  அவற்றின் விளைவாக தனித்துவங்களின் முக்கியத்துவம் கருதி தனிவழிகளுக்கு மதங்களென்ற பொது வழி கண்டு, தத்தமது நம்பிக்கை வழிகளுக்கு என வழங்கப்பட்ட தனித்துவ நாமங்கள் இவ்வாறாகவே மதங்களுக்கு அத்திவாரங்கள் இடப்பட்டன எனலாம்.

மிகவும் துரதிர்ஷ்டவிதமாக நல்வழிக்காக அமைந்த மதங்கள் தீய அணுகுமுறைகளுக்குள் இறங்கின என்பதை விடவும் திட்டமிட்டு சதி செய்யும் கள்ளமனக் கொள்ளைக்காரர்கள் அந்த வழிக்குள் வலிந்து தள்ளியமையே அதற்கு அடிப்படைக் காரணம் என்பதே உண்மையாக இருக்க வேண்டும். குழந்தைக்கு உணவூட்டிவிட தாய் தான் சொல்லும் கதைகளுக்கு உண்மையென வடிவம் கொடுத்து நல்வழிப்படுத்த முனைய அக்கதைகளை  வளர்ந்த பின்னும் நம்ப வைத்து ஏய்த்த அயலவன்  கதைதானிது.

நோக்கம் பிறழ்ந்து, சுயநலம் வளர்ந்து, அதுவே கட்டெறும்பாகிப் போன கழுதையாக ஆகிப்போனதன் விளைவாகி, இப்போது ஒருமையில் எழுந்த நம்பிக்கையானது ஒரே மதமாக இல்லாது மதங்கள் என்று பன்மை வடிவில் இறைவனை அறிதல் அல்லது உணர்தல் என்று முயன்று தவறானவர்களால் இப்படிப் பகைவளர்க்கும் கருவியாகத் தரமிறங்கிப் போயிருக்கின்றது.

மதவாத, சயநல வெறியர்கள் தாங்களே சரியென்றும் மெய்யென்றும் தம்மைத்தாமே நிலைநிறுத்துவதில் ஈடுபட்டதனால்தான் பொய்யான  நம்பிக்கையை  வைத்துப் பயமூட்டி மனம் வெல்லும் சிந்தனைக் கொலைக்கான பிரச்சாரங்களில் அவை ஈடுபடத் தொடங்கின எனலாம்.

எந்த மதமுமே முழுக்க முழுக்க அன்பை மட்டுமே வைத்து வளர்ந்ததாக வரலாற்றில் ஒரு „கொமா“ கூடக் கிடையாது. மாறாக, படுமோசமான படுகொலைகளையும் சித்திரவதைகளையும் கற்பழிப்புக்களையும் கொள்ளைகளையும் சுதந்திர சிந்தனைத் தடைகளையும் இரத்த வெறித்தனங்களையும் போர்களையும் அழிப்புக்களையும் அங்கீகரித்த மூலதனமாக வைத்தே அனைத்து மதங்களுமே வளர்ந்து வந்திருக்கின்றன.

அதனால்தான் இத்தனை மதங்களும் இன்றைக்கும் உதட்டளவில் ஒற்றுமையும் உள்ளத்தளவில் பகைமையுமாக இருந்து கொண்டே வருகின்றன. ஆங்காங்கே இந்த சன்னியாசிகள் அல்லது துறவிகள் அல்லது போதகர்கள் தமக்கு எதிரான மதத் தலைவர்களுடனே கட்டிக் குலாவி, ஒன்றாயமர்ந்து காட்சி கொடுப்பதுடன் சரி, மறந்தும் தங்களவர் மற்றவர் பக்கம் தாவிவிட மனமொப்புவதே கிடையாது.

தெரிந்தோ தெரியாமலோ இவர்களே தாங்கள் நம்புவதாகச் சொல்லும் கடவுளையே கூட பதவி இறங்கியவராகவே காட்டுவதுதான் பெரிய வேடிக்கை.

ஆண்டவனை இவர்கள் ஆள்பவன் என்று எங்காவது அழைப்பதாகவே தெரியவில்லை. அதாவது இவர்களைப் பொருத்த மட்டில் கடவுள் முன்பு ஆண்டவர் இப்போது அவர் „ரிட்டயர்ட்“ ஆகிவிட்டார். ஆகவேதான் அவர் இப்போது வெறும் ஆண்டவராகவும் ஆள்பவராக இல்லாதவராகவுமாக இருக்கிறார்.

அதனால்தான் வேதங்களும் புராணங்களும் ஆணித்தரமான, நடந்த சம்பவங்களாகக் காட்டி வந்த, வருகின்ற அந்நாளைய அதிசூரத்தனங்களும் அதிசயங்கள் பலவும் இப்போது எங்குமே நடைமுறையில் இல்லாமலிருக்கின்றன போலும்.

இருந்தொரு சமயங்களில சில சலசலப்புச் செய்திகள் வருவதும் வந்த வேகத்திலேயே அவை மங்கி மறைந்து போய்விடுவதும் அதனால்தான் போலும்.

ஆனால் ……….

அனைத்தையும் நடத்தும் ஓர் அடிப்படை சக்தியை மறுப்பதை மட்டும் ஏற்கவே முடியாமலிருப்பதுவும் உண்மைதான்.. அதாவது நாம் குறிபபிடும் இறைவன் என்னும் சக்தி பொய்யல்ல. ஆனால் அதற்கு உருவங்களும் கதைகளும் கொடுத்து, நோக்கத்தை துர்ப்பிரயோகம் செய்வதற்கும் அதற்கும் முடிச்சுப் போட்டால் அதனிடையில் மொட்டையும் முழங்காலும்தான் இருக்கும்.

அதாவது அனைத்தையும் இரு வழிகளில் இயக்கும் இயல்பு சும்மா வந்ததல்ல. அதுவே அனைத்துக்குள்ளும் அனைத்துமாக இருந்து இயக்கிக் கொண்டு இருக்கின்றது. அதனை நம்புவதை மடைமை என்பதுதான் மடைமை.

நமது மனித பலவீனங்ளை வைத்து நம்மை மீறிய சக்தியை மதிப்பிடுதல் அசாத்தியம் என்பதற்கு ஓர் நல்ல உதாரணமே இன்றைய உலக சூழ்நிலைகள்.

மனித அறிவும் கல்வியும் விஞ்ஞானமும் இன்றுவரை முழுமை பெறாதிருப்பதே அதற்குக் காரணம். அல்லவா?

சுனாமிகளுக்கும் காலநிலை மாற்ற பாதிப்புக்களுக்கும் நோய்களில் பல புதியவைகளுக்கும் நமது மித மிஞ்சிய அறிவின் இயற்கைக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கே பெரும் பங்கிருப்பதை மறுப்பதற்கு முடியுமா?

இன்றைய உலக வறுமைக்கும் பதற்றங்களுக்கும் யுத்த தீவிரங்களுக்கும் முழு உலகப் பந்தையே அடியோடு தகர்த்துத் தூள்தூளாக்குமளவிற்கு பல்லாயிரக்கணக்கான அணுகுண்டுகளையும் விஷகுண்டுகளையும் வெடிகுண்டுகளையும் பெருக்கி வைத்துக் கொண்டு இறைவனின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது யாரின் குற்றம்? இயற்கையின் குற்றமா அல்லது அதைத் தந்த சக்தியின் குற்றமா?


வாழும் உயிர்களுக்கென படைக்கப்பட்டவைகளைப் பணத்தைப் படைத்துப் பதுக்கி வைத்துக் கொண்டு, அந்தப் பணத்தைக் கொடுத்து இறைவனைக் கப்பம் பெற்று உதவிசெய்யும் ஒரு கோமாளியாக்கிக் கொள்ளையடிக்கும் (ஆ)சாமிகளுக்கும் அவர்களுக்குப் பலியாகும் பக்தி தெரியா மூடருக்கும் யார் பழி?

இதைத்தட்டிக் கேட்பது நாத்திகமா அல்லது ஆத்திகமா அல்லது……?

ஆகவே நாம்தான் சரியாக சிந்தித்துச் சரியாக உண்மையைத் தேட முயல வேண்டும். சரி எதுவெனத் தேடுவதை விட்டு எதையும் அது பிழையெனச் சொல்ல வழிதேடுவதால் தேடுதல் வழி பிறழ்வதற்கே வழி சமைக்கும் என்ப எனினும் நாம் கவனிக்க வேண்டும்.
 

ஒன்று நீரில் வாழும் ஒன்று நீருள்மூழ்கின் சாகும்
ஒன்று கல்லின் மேலிருக்கும் ஒன்றுஉள்ளுள் வாழும்
நன்று என்று ஒன்றுகொள்ள ஒன்றுஅன்று என்னும்
என்றும் கண்ணில் தென்படாது எனினும் உள்ளதுண்டு

அளவுஎன்று எதுவுமின்றி எதிலும்எதுவும் இல்லை
அளவுமீறி இயற்கைசீண்டின் அமைதிவருவ தில்லை
களவுசெய்து இயற்கைசக்தி  பயன்படுத்தும் எல்லை
அளவுமீறி அழிவுஆகி  நமைஅழிக்கும் பின்னை

மதத்தின்பின்னே ஓடுமுன்பு மனதைத்தொட்டுப்பாரு!
எதற்கு இந்தப்பேதமென்று  எதற்கும் எண்ணிப்பாரு!
பதமடையா மனங்களுடன்  மதத்தில்தேடும் தெய்வம்
எதற்குமுனக்கு உதவிடாத உண்மைதெரியும்.தேடு!


திங்கள், 18 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 12

111. பலவிதம் மரங்களும் செடிகளும்ஒருமண்ணில் எழுந்திடல் அதனதன்  
        தனித்துவத்தால்
       பலவிதம் மனிதரும் இயங்கிடும் குணங்களில் திகழ்ந்திடல் மனங்களின்            இயல்குணத்தால்

112. வெளிக்கு வடிவாய்த் தெரிபவர், உரைப்பவர் உண்மையில் எவரென                        ஆயாமல்
        களிப்புடன் அவருடன்உறவினை வளர்த்தால் பழிகளே சேரும் தவறாமல்

113.  மண்ணினில் விளையும் பொருட்களை உண்போம் மண்ணைஅதற்காய்      
         உண்போமா?
        நன்றாய்ப்பேசிடும் ஆட்களின் உள்ளம் பொருந்தேல் உறவாய் ஏற்போமா?

114. வெண்மை அமைதிக்குஅடையாளம் அதுபோலத் துயருக்கும்அதுவே
        அடையாளம்
       வெண்மை பேச்சினில் உருவினில் எனினும் உள்மனம் பலருக்குக்
        கருப்பாகும்

115.  அருகால் மறந்தே நடந்தாலும் தீமையின் வாதனை நமைத்தொடலாம்        
         பெரும்பா லும்நம் சிந்தனைப்பிழையால் துன்பம்தொடர்ந்தே உடன்     
          வரலாம்
 
116. அஞ்சியே தீவழிநின்றுமே ஒதுங்குதல்  என்றைக்கும் நலன்
         பயக்கும்               
       ஆழத்தை அறியாது அதனோடு இணைந்திடில் இருப்பதும் தகர்ந்தழியும்

117.  பன்னூறு விதமாகப் பானங்கள் செய்துநாம் (உ)ருசி கூட்டிப் பருகினாலும்
        என்றைக்கும் மனமேற்கும் நன்னீர்போல் தாகத்திற் கேற்றது            

        எதுவுமில்லை
 

118. பல்லாயிரம் மரங்கள் சூழ நின்றாலும் பழம்தரு மரமே பசிக்கு உதவும்                   எல்லா உறவுகளும் எங்கிருந்தாலும் இல்லறமே தரம்காக்க உதவிநிற்கும்

119. நாளைய சந்ததியின் நலனதையும் காப்பினையும் திட்டமிடா அரசு                          வேண்டாம்
       கோழைகளும் திருடர்களும் சுயநலரும் காட்டும்வழி எள்ளளவும் அணுக             வேண்டாம்

120. உண்மையை உணர்த்துவதும் எழுதுவதும் சொல்லுவதும் நன்மைசேர                 உதவிசெய்யும்
       மென்மையையே தழுவிடினும் சுயநலமே நோக்கமெனில் தீமைக்கவை              விதைவிதைக்கும்

ஞாயிறு, 17 மார்ச், 2013

பாசக் கயிறு


                                                    



ண்மையான பாசத்தின் அழுத்தம் உயிரையே கூட அர்ப்பணிக்கத் தூண்டிவிடக்கூடியதாக அமைந்து விடுவது விதியின் கொடூர விளையாட்டுக்களில் ஒன்று.

எனது பள்ளி நண்பனொருவன். சிறந்த பேச்சாளன். இலக்கிய விமர்சகன். அநீதியை இடம் சூழ்நிலை பார்க்காமலே மூர்க்கமாக எதிர்த்து நின்று, அதனால் பலரிடமும் பகையைச் சம்பாதித்த உத்தமன்.

பள்ளி நீங்கிய பின் பலவருடங்களாய்த் தொடர்புகளேதுமே இல்லாதிருந்தபோது  ஒரு நாள் என் அலுவலகத்து வாசலில் அவன் வந்து நிற்பது கண்டு அவனை உள்ளே அழைத்தேன்.

இத்தனை காலமாக சந்திக்காதவன் எதிர்பாராமல் வந்திருந்ததற்கு ஏதோ காரணமிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். எனது அறைக்குள் அழைத்துச் சென்று அமர்த்தியபின் விசாரித்தேன்.

ஒரு வேகமாக இயங்கும் இயந்திரத்தைப் போல அவன் தான் வந்த நோக்கத்தை என்னிடம் விபரித்தான்.

தனது காதலியின் வீட்டார் கச்சேரிக்குத் தனது காதலியுடன் வந்திருப்பதாகவும் இன்னும் அரை மணிநேரத்தில் அவளுக்கும் இன்னொருவனுக்கும் கச்சேரியில் திருமணம் நடக்கப்போவதாகவும் தான் அவளை மணமுடிக்க வேண்டும் என்றும் என்னால் அவன் சார்பில் கையொப்பம் வைக்க வர இயலுமா என்றும் கேட்டான்.

அதிர்ச்சியாகவிருந்தது. ஏன் அவன் தனது குடும்பத்தினருடன் வரவில்லை என்பதைக் கேட்டேன்.

பழைய குடும்பப் பகைமை காரணமாக இந்தக் கலியாணம் நடக்கக்கூடாது என்று வீட்டில் தடுப்பதாகவும் தனது அண்ணனே வீட்டுக்குப் பொறுப்பானவன் என்பதால் அம்மா அவன் சொல்லைத் தட்ட முடியாமல் தடுமாறுவதாகவும் தெரிந்தது.

பெண் வீட்டார்?

அவர்கள் இவர்கள் வீட்டுக்குப் பாடம் படிப்பிக்கவென்றே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிந்தது. இவன் நேரில் விசாரித்தபோது  அவர்கள் திருமணம் செய்து வைக்க முடியாது என்று மறுத்துரைத்ததாகவும் தெரிந்தது.

குடும்பத்தவர்களின் தனிப்பட்ட விறுப்பு  வெறுப்புக்களுக்கு இளம் உயிர்கள் பகடைக் காய்களாக நகர்த்தி விளையாடப்படும் கொடுமைக்கு அங்கீகாரமா?  சரி  பிழை இந்தப் பெரியவர்களுக்குப் புரியவில்லையா?

எனக்கோ மிகவும் அச்சமாக வேறு இருந்தது.

அவன் வெளிப்படையாகவே அழுதான்.
பிறகு சொன்னான்.

“ அம்மாவைப் பற்றித்தான் எனக்குக் கவலையாக இருக்கின்றது. ஆனால் இன்றைக்கு இது நடக்காவிடில் இனி என்னைக்குமே நடக்காது. நீதானடா எங்களைக் காப்பாற்ற வேண்டும்.”

எங்களை!
தனது வருங்கால மனைவியையும் சேர்த்துக் கொண்ட அவனுக்கு என்மீது இருந்த நம்பிக்கையை உதற முடியவில்லை என்னால்.

அன்று திருமணம் நடக்கப்போகும் விஷயத்தைக் கூட பெண்ணின் தம்பிதான் இவனிடம் சொல்லியிருக்கிறான். அவன் இவர்களுக்கு ஒத்தாம்.

அந்த மாப்பிள்ளை வருமுன் இவன் வந்து நுழைந்தால் அப்பெண்ணைக் காப்பாற்றிவிடலாம். அல்லது...

சிக்கலான நிலைமைதான்.

அவனது சிக்கலான நிலைமை எனக்குப் புரிந்தது. தீவிரமாக யோசித்துவிட்டு  மடமடவென்று காரியத்தில் இறங்கி விட்டேன்.

அந்த நாட்களில் பெற்றோர் முடிவை மீற முடியாத நிலைமைதான் சாதாரணமாகப் பெண்களுக்கு இருந்தது.

இவன் என்னை நம்பி வந்திருந்த காரணம். நான் சரியென்று சொன்னால் கடைசிவரை வாக்கு தவறமாட்டேன் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதனால்தான்.

நல்ல நண்பன். உண்மையாகப் பழகியவன்.

அந்தச் சந்தர்ப்பத்தில் நடப்பதன் விளைவுகளை நான்தான் எல்லா விதத்திலும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

முதலில் தலையைச் சுற்றியது. என்றாலும் மனம் துணிந்தது.

“சரி.. உன்னம்மாவிடம் போய் எப்படிச் சமாளிப்பாய்?”

“நீதான் அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் நீ சொன்னால் மட்டும்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். என் அம்மாவுக்கு உன்னிலே நிறைய அன்புண்டு. உனக்கும் அது தெரியும். நமது உண்மையான அன்பின் மேலே சத்தியமாய் நீ இதைச் செய்துதான் ஆக வேண்டும்.”

எதன் மீது சத்தியமாய்? உண்மையான அன்பின் மீது?
என்னை உண்மையாய் நேசித்தவன். இன்றும் அப்படியேதான் இருக்கிறான். பரவாயில்லையே!

மனதிற்குள் இனந்தெரியாத ஓர் உணர்வு. பாசமா, மகிழ்ச்சியா அல்லது திருப்தியா?

புரியவில்லை அப்போது.

எனது அலுவலகத்துக்கு எதிரேதான் கச்சேரி இருந்தது. அலுவலகத்தில் சொல்லிவிட்டு  அவனுடன் விரைந்தேன். ஓர் ஒதுக்குப்புறமாக நின்று கொண்டு அவதானித்தோம்.

கச்சேரிக்குள் பெண்ணின் குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி இரண்டு மூன்று பேர் ஆஜானுபாகுவாக காவல் காத்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.

வருமுன் காத்திடும் மதியூகம்.
நமது மாப்பிள்ளை பெரிய சூரனல்லன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் நிலைமையின் அழுத்தத்தைப் பயன்படுத்தி எதையாவது இவன் ஏற்பாடு செய்து விட்டால்? என்ற அவர்களின் அச்சத்திற்கும் நியாயமிருந்தது.

சில வேளை அடிபிடி நடக்கும் அளவுக்கு எதுவும் நடந்தாலும் நடக்கலாமென்ற முன்னெச்சரிக்கை.

எனது நண்பனால் காரியம் தடைப்பட்டுவிடலாமோ என்ற அவர்களின் பயத்தில் எனக்கு இவனும் ஒரு வீரனாகவே தெரிந்தான்.

எனக்கு அங்கே பணியாற்றிய போலிஸ் உத்தியோகத்தர்களை நன்கு தெரியும்.

பத்து நிமிட நேரம் ஒருவருடன் விபரமாக எல்லாவற்றையும் சொல்லிப் பேசினேன்.

என் நண்பன்தான் உரிய மாப்பிள்ளை என்றும் பெண்ணிடம் நேரிலே கேட்டால் அவளே சொல்வாள் என்றும் விளக்கிக் கூறினேன்.

வழமைபோல ஒரு சின்ன மாமூல். செக்யூரிட்டி சார்ஜ் என்றுதான் வைத்துக் கொள்வோமே!

ஐயா கைக்குள் வந்துவிட்டார்.

குறிப்பிட்ட நேரத்துக்குச் சில நிமிடங்கள் முந்தி  மணப்பெண்ணின் தம்பிக்கு என் நண்பனுடன் வந்திருந்தவன் கண்ணால் சமிக்ஞை காட்ட   அவன் தனது அக்காவின் அருகில் சென்று நின்றான்.

காதலின் உத்வேகம் கடகடவென்று இயங்கத் துவங்கிவிட்டது.

மணப்பெண் பதிவாளர் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

யாரோ அவளிடம் ஏதோ கேட்க  அவள் ஏதோ பதில் சொன்னாள். அதிசயமாக யாருமே அவளைப் பின் தொடரவில்லை. தான்  பாத்ரூமுக்கு அவசரமாகப்  போவதாக சொல்லியிருக்க வேண்டும் போலும்.

என் நண்பனுடன் இன்னொரு பக்கமாக நான் பதிவாளர் அறைக்குள் நுழைந்தேன். அறைக்குள் இன்னொரு கதவு மூலமாக மணப்பெண் வந்தமர்ந்திருந்தாள்.

காதலுக்குத் தனி தைரியம் வரும் என்பது தெரிந்தது அப்பெண்ணின் துணிச்சலில்.

மடமடவென்று பதிவாளரிடம் விஷயத்தை விளக்கினேன். அதற்குள் வெளியிலே ஏதோ பரபரப்பாகத் தெரிந்தது.

மெதுவாக கதவினிடையால் எட்டிப் பார்த்தேன்.

நமது போலிஸ்காரர் பெண்ணின் முழுக் குடும்பத்தையும் இந்தப் பக்கமே வரவிடாமல் ஏதோ காரணஞ் சொல்லி  விரட்டிக் கொண்டிருந்தார்.

ஆஜானுபாகு ஐயாமார்கள் கைகளைப் பிசைந்து கொண்டு தடுமாறிக் கொண்டு நிற்பதும் தெரிந்தது.

சில நிமிடங்களுக்குள் ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயத்தை சின்னஞ்சிறு குழுவினராக நாங்கள் அனைவரும் எழுதி முடித்தோம்

கச்சேரிக்குள் வேலைபார்க்கும் எனக்குத் தெரிந்த ஒரு சிங்கள நண்பரும் நானும் கையெழுத்திட  திருமணப் பதிவு இனிதே நடந்தேறியது.

எனது நண்பனதும் அவனது புதுத்துணையினதும் நன்றியை அவர்கள் ஒரு நீண்ட புன்னகையால் தெரிவித்துக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகுதான் எனக்கு பயம் வந்தது.

இனி எப்படி வெளியே போவது?  சுற்றி வளைத்து வெளுவெளுவென்று வெளுத்தாலும் வெளுப்பார்களே! உடம்பு தாங்குமா?  உயிரேதான் மிஞ்சுமா?

கையெழுத்து வைத்த ஊழியர் உதவிக்கு முன்வந்தார். சற்று நேரம் வெளியே போனவர் திரும்பி வந்து “எல்லாம் ஓகே” என்றார்.

வெளியே எட்டிப்பார்த்தேன். நம்மவன் எதிர்ப்படை முற்றாகவே இல்லாமல் மற்றவர்களின் நடமாட்டத்துடன் ஏகுவழி சுபம் சொல்லிக் கொண்டிருந்தது.

பக்கத்து வழியால் அழைத்துச் சென்றார் அந்தச் சிங்கள நண்பர். வெளியில் ஒரு வாடகை வாகனம் காத்துக் கொண்டிருந்தது.

எங்கே “ஹனிமூன்”  போகப் போகிறாய்?

நண்பன் திகைத்தான்.
“தெரியவில்லையே, மச்சான்! எதையுமே ஏற்பாடு பண்ணவில்லையே மச்சான்?”

நான் பலமாகவே சிரித்துவிட்டேன்.
“அட மடையா! கல்யாணம் கட்டு முன்பே அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லையா? ஹனிமூனின் அவசியம் புரியாத அசட்டு மாப்பிள்ளையடா நீ. வெட்கம் வெட்கம்.”
நான் பலமாக சிரிக்க அவன் அசடு வழிய நின்றான். பிறகு சொன்னான்.

“இன்றைக்கு இவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்பட்டு இருந்ததே முந்தா நாள்தானே எனக்குத் தெரியும்? அந்த அதிர்ச்சியில் எதுதான் நினைவுக்கு வரும்?”

வசமாக மாட்டிக் கொண்டோம். இனி நமக்கு தற்காலிக மீட்புக்குக்கூட வழியே இல்லை.

“டக்”கென்று ஓடி அருகிலிருந்த பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து எனக்குத் தெரிந்த ஒரு உல்லாசப் பயணிகள் உணவகத்துக்குப் தொலை பேசி எடுத்தேன். என் அதிர்ஷ்டம் அங்கே அறையொன்று காலியாக  இருந்தது.

நல்ல பகலுணவுக்கும் அவர்களின் தேனிலவுக்கும் பதிவு செய்த பின் வாகன ஓட்டுனரிடம் சொல்லியனுப்பினேன். கையெழுத்து வைத்தவரும் நானும் அவனது கூட வந்திருந்த நண்பர்களுமாக இன்னொரு வாகனத்தில் தொடர்ந்தோம். பகலுணவில் பங்குபற்றினோம்.

அந்த எளிமையான இனிமையான திருமணம் என் நண்பனுக்கு திருப்தியாக அமைந்துவிட்டது.

டெலிபோன் பண்ணிச் சொல்லிவிட்டு  அன்று வேலைக்குப் போவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
முன்னெச்சரிக்கை தற்காப்பு முயற்சியில் முதன்மையானது என்பது தெரியுந்தானே!

சில நாட்கள் அஞ்ஞாத வாசம் தேனிலவாகக் கழிந்ததன் பின் அவன் வீடு திரும்பு முன் நான் அவனது தாயாரைச் சந்தித்து எல்லாவற்றையும் எடுத்துரைத்து  சமாதானப்படுத்தி வைத்தேன்.

முதல் இரண்டு வாரங்;கள் “வெட்டுவோம்; கொத்துவோம்” என்று கொதித்த பெண் வீட்டார்  பிறகு அடங்கிப் போய் விட்டார்கள்.

அதற்கிடையில் வந்த இடைஞ்சல்கள் பெரிதாக இருக்கவில்லை. எதிர்பார்த்ததற்கு மாறாக பெண் வீட்டாரே வழிக்கு வந்ததாகவும் இரு குடும்பங்களும் சமாதானமாகி விட்டனவென்றும் அடிக்கடி என்னை வந்து வந்து சந்தித்த என் நண்பன் தெரிவித்தான்.

ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்ட திருப்தி எனக்கு. அந்தக் கலியாணத்துக்கு எனது அரைமாதச் சம்பளம்தான் நட்டம். அதை அவனிடம் அடிக்கடி சொல்லிச் சொல்லிக் கேலி செய்வதில் எங்களுக்குள் பெரிய சந்தோஷம்.

உண்மையான அன்புக்காக ஏற்படும் நஷ்டமிருக்கிறத! அதுதான் உண்மையிலேயே ஆழ்ந்த மகிழ்ச்சிக்கு அத்திவாரம். அதைத் தெரிந்து கொள்ள, நீங்கள் இப்படி அனுபவப்பட்டால்தான் முடியும். வேறு வழியே இல்லை.

„டேய்! எனது அரைமாதச் சம்பளத்தைக் கொள்ளையடித்துக் கல்யாணம் செய்த கள்வா! வாடா வா! எப்படி இருக்கிறாய்?“ என்று நான் அவனை வரவேற்பேன்.

„உன் முழுமாதச் சம்பளத்தை அடிக்க முடியாமல் போச்சே என்று முழுக் கவலையில் மூழ்கியிருக்கிறேன். வெகுவிரைவில் உன் இரண்டு மாதச் சம்பளத்தை கபளீகரம் பண்ணுவது பற்றிய திட்டத்தைத்தான் வகுத்துக் கொண்டிருக்கிறேன். பொறுத்திரு!“ என்று அவன் பதிலடி அடிப்பான்;.

இரு குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்களாகி விட்டார்கள். அதற்கிடையில்தான் இனிய இலங்கையில் இனக் கலவரம் வெடித்தது. அந்தக் குடும்பத்தின் தொடர்பும் அறுந்து விட்டது.

நான் ஜெர்மனிக்கு வந்தபின்  ஒரு நாள் ஒரு செய்தி கிடைத்தது. அவனது தாய் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்டு  வீட்டுக்குப் போனவன் அம்மா என்று கதறியவாறே தனது உயிரை விட்டு விட்டானாம்.

இப்போது இரு குழந்தைகளுடன் அப்பெண்...தெய்வமே!

அந்தத் தாயின் அன்பை இழந்துவிடத் திராணியில்லாமல் என்னுதவியை நாடியவன் தன் தாய் இறந்ததைத் தாங்கவொண்ணாமல் அந்த அதிர்ச்சியிலேயே மாண்டு போன துயரம் அடிக்கடி இன்னும் நினைவில் வரும்போது சொன்னதைக் காப்பவன் என்று அவன் நம்பித் தந்திருந்த இதயபூர்வமான நற்சான்றிதழுக்காக என்னிதயம் அவனுக்கு நன்றி சொன்னாலும் வாழ வேண்டியவன் வாழ்வு மாயமான அதிர்ச்சி இன்றும்கூட குறைய மறுத்தபடி என்னை வதைத்துக் கொண்டுதானிருக்கின்றது.    

அன்பை ஆழமாக மனதில் வளர்த்ததால்தான் என் நண்பன் இந்த நிலைக்கு ஆளானானா?
நினைக்கவே கஷ்டமாயிருக்கிறதே!

தாயன்பின் தாக்கத்தினால் தாரத்தையே தவிக்க விட்டுவிட்டானே பாவி என்று திட்டுவதா?
புரியவில்லை எனக்கு. அவனது பாசமே பாசக் கயிறாகிவிட்டதை இன்று நினைத்தாலும் என் நெஞ்சை அடைக்கின்றது..    

இந்தப் பூமாதேவியின் மார்பில் இவனைப் போன்ற எத்தனை உயிர்கள் இன்னும் இருக்கின்றனவோ?
             
            தன்னையே ஈந்துதான் நம்மை ஈந்தாள்- அந்த
           அன்னையே சென்ற பின் வாழ்வ தாமோ?
           என்றவள் பின்சென்ற கதையைச் சொன்னேன்-இன்றும்
           என்னுள்ளம் பிழிந்திடும் உண்மை சொன்னேன்.

           அன்னையின் தந்தையின் எண்ணமற்று - வாழும்
           பன்னூறு உயிர்களுக் கொன்று சொல்வேன்
           நும்வாழ்வு நுமக்கென்று அவர்களின்றி - என்றும்
           நுமக்கில்லை என்பதை மறந்திடாதீர்!  

           நீர் ஊற்றா மரம் வாடி  மடிந்து போகும் - அன்னை
           பாலூட்டா விடிலுயிர் என்னவாகும்?
           பார்வீடு இல்லாமல் விட்டுப் போகும் - உண்மைப்
           பாசமோ உயிரோடே கலந்து வாழும்.
          

சனி, 16 மார்ச், 2013

விதைகள்



 



பெறற்கிய லாநிலை அழுத்திடும்போதும்
             பெறற்குழைத்  திடும்நிலை இழந்திடும்போதும்
வரற்கென இருப்பவை தடைப்படும்போதும்
             இரவலும் இலையெனும் நிலை வரும்போதும்
உறவுக்கும் துணைக்கும்நம் உறவெனத் தேடின்
             வருவதும் இணைவதும் எதுவெனத் தேடின்
வருவதும் துணையென இணைவதும் என்றும்
              உருப்படப் பிழைவழி ஏற்கிற எண்ணம்


ஓவியன் விரல்வரை பெண்ணவள் தோற்றம்
              காவியம் ஆகிடும் படைப்புகள் மற்றும்
தாவிடும் விதமதில் ஆட்டிடும் இசைகள்
              யாவிலும் இருந்திடும் மாபெரும் சக்தி
பாரினில் பதித்திடும் பாரிய தாக்கம்
              பார்த்திடில் சரியாய் ஆய்ந்துநம் வழியில்
பார்த்தவை மனமதில் பதிந்திடும் தாக்கம்
              பாரினில் தாக்கத்தைத் தருவது புரியும்


மனமது ஏற்று ஒழுகிடத் தவறின்
            இதமது என்றே தவறுகள் சார்ந்தே
வனமதில் வாழும் விலங்குகள் போலே
             சுயதேவைக்காய் இரக்கத்தை மறக்கும்
விலங்குகள் வழியில் உள்ளத்தை இழுக்கும்
              மனிதத்தின் வழியைப் பிழையாய் உணரும்.
சலனத்தின் பாதை சுயதரம் குறைக்கும்
               சரியாய் உணர்ந்தால் நம்வழி திருந்தும்


             
               

சிந்தனைக் கூறுகாய் 11



 





101.சுவையில்லா நிலையிலும் சுவைகளில் சிறந்தது சுத்தமாய் உள்ள 
       தண்ணீர்
       எவையில்லா நிலையிலும் நிலையாக நிற்பது பாசத்தின் தூய்மையென்பீர்!
 

102.செய்வதையெல்லாம் சுயநன் மைக்கென செய்தலே பொதுமன வடிவாகும்
       செய்வதில் பிறர்நலன் விழைந்ததை வகுப்பதே நற்குணப் பண்புடை 

       வழியாகும்
 

103.பணமது எல்லாம் செய்திடும் என்றே பகுத்தறி வற்றோர் நினைத்திடுவார்
       பணமதை எல்லார் நலம்பெறும் வழிக்கே எனபகுத் தறிவோர்    

      தெரிந்திருப்பார்
 

104.நன்றியை மறப்பார் காரணமென்றே நல்லதைச் செய்வதைத் தவிர்க்காதீர்
       நல்லதைச் செய்தல் நன்றியிலல்ல, செயலதில் புண்ணியம் மறக்காதீர்
 

105.விடைகாணமுடியாதகேள்வியென்றால் விடையதற் கில்லையென்று
       அர்த்தமில்லை
      முறையாக உணராமல் மறுப்பதனால் இறைசக்தி இல்லையென்று  

      ஆவதில்லை
 

106.கருப்பாக இருப்பதால் குயிலதன் குரலதை எவருமே வெறுப்பதில்லை
       வெறுப்பாக ஏழ்மையைக் கருதியே திறமையை அறிவுளார் மறுப்பதில்லை
 

107.உடற்சுத்தம், உடைச் சுத்தம் இரண்டினால் மனிதரின் தகைமைகள்                         உயர்ந்திடாது
       உளச்சுத்தம், செயற்சுத்தம் கொண்டராய் இருந்திடில் தகைமைக்குக் 
       குறைவிராது
 

108.வேடிக்கை யாகவும் பிறர்மனம் புண்படல் விழைந்துரை செய்தல் 
       வேண்டாம்
       தேடிச் சிறுமையை நாடிய   லைந்திடும் பிழைவழி கொள்ள வேண்டாம்.
 

 109.வருவாயை மட்டுமே வைத்ததில் மதிப்பவர் மனிதருள் தரம்குறைந்தோர்  
        வறுமையில் ஆயினும் உளத்தரம் கணிப்பரே மனிதருள் தரம் உயர்ந்தோர்

110.விளையாட்டுக் காகினும் பிழையாகப் பேசினால் பிள்ளைகள் மனம் 

      தவறும்
      விளையாட்டும் வழிகாட்டும் எனக்காட்டின் நல்வழி பிள்ளைகள் மனம் 

      உயரும்

வியாழன், 14 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 10

                                                          See full size image


91. அதிர்வே இல்லாத இதமான வாழ்க்கைக்கு முதன்முதல் நல்லவழி
  எதிர்பார்ப்பை முன்வைத்து நட்புறவுகொள்ளாமை என்கின்ற நல்லவழி.

92. முத்தோடு முத்தாகக் கலந்துள்ள போலிகளை தரம்தேர்வோர்  
   கண்டுகொள்வார்
   பத்தோடே பதினொன்றாய் பழகவரும் போலியரை அனுபவங்கள்  
   காட்டித்தரும்.

93. தற்காப்பை எண்ணாமல் வேட்டைக்குக் கிளம்புபவன் ஆபத்தில் 
   சிக்கல்கூடும்
   கற்காமல் பயிலாமல் தேறாமல் முயற்சியில் இறங்குபவர் தோற்றல் 
   கூடும்.

94. மலையுச்சி அடைந்தபின் வெற்றியில் துள்ளுவோர் வழுக்கிவீழ் 
   ஆபத்துண்டு
   தலைக்கனம் கொண்டுதுள் அற்பர்கள் அருகில்தான் தோல்விக்குப்  
   படிகளுண்டு.

95. உடலிலே சுத்தமும் உள்ளத்துள் அசுத்தமும் கொண்டவர் உலகில் 
   கோடி
   உணராமல் அவர்நாடி உள்ளதும் உள்ளமும் நைந்தவர் அதிலும்கோடி.

96. முழுமையாய் உணராமல் செய்தியாய்ச் சொல்கையில் அதன்பெயர்
   வதந்தியாகும்
       முழுமையாய் உணராது தடுத்துண்மை மக்களை ஆள்தலே அரசியல் 
       கலையாகும்.

97.  பிழைசெய்யும் கள்வரின் கண்ணுக்கு எப்போதும் என்றைக்கும் நீதிதான் 
      பெரிய தீது
       பிழைசெய்யா மனிதர்க்கு அதனாலேதானவர் செய்கிறார் என்றும்தீது.


98.  மீன்நாற்றம் பழக்கத்தால் மீன்விற்போன் நாசிக்குப் புரியாது; பழகிப்போகும்
        வீண்நாட்டம் தீயவை தெரியாமல்நாடிடத் தவறாது செய்துபோடும்.

99.  இயலாத நிலையிலும் முயன்றுநாம் பிறர்நன்மை பெறற்காகச் செய்யும்   
       தர்மம்.
       இமயம்போல் பின்னாளில் ஆபத்தில் நமைக்காக்கும் கவசமாய்த்
      துணைக்கு நிற்கும்.

100. ஏற்றதை எதுவென்று உணராது உழைப்பதால் வெற்றிக்கு உறுதிஇல்லை.
         கற்றதில் வழிகண்டு உழைத்திடில் எவருக்கும் எதிலுமே தோல்வி
        இல்லை.