சனி, 16 மார்ச், 2013
விதைகள்
பெறற்கிய லாநிலை அழுத்திடும்போதும்
பெறற்குழைத் திடும்நிலை இழந்திடும்போதும்
வரற்கென இருப்பவை தடைப்படும்போதும்
இரவலும் இலையெனும் நிலை வரும்போதும்
உறவுக்கும் துணைக்கும்நம் உறவெனத் தேடின்
வருவதும் இணைவதும் எதுவெனத் தேடின்
வருவதும் துணையென இணைவதும் என்றும்
உருப்படப் பிழைவழி ஏற்கிற எண்ணம்
ஓவியன் விரல்வரை பெண்ணவள் தோற்றம்
காவியம் ஆகிடும் படைப்புகள் மற்றும்
தாவிடும் விதமதில் ஆட்டிடும் இசைகள்
யாவிலும் இருந்திடும் மாபெரும் சக்தி
பாரினில் பதித்திடும் பாரிய தாக்கம்
பார்த்திடில் சரியாய் ஆய்ந்துநம் வழியில்
பார்த்தவை மனமதில் பதிந்திடும் தாக்கம்
பாரினில் தாக்கத்தைத் தருவது புரியும்
மனமது ஏற்று ஒழுகிடத் தவறின்
இதமது என்றே தவறுகள் சார்ந்தே
வனமதில் வாழும் விலங்குகள் போலே
சுயதேவைக்காய் இரக்கத்தை மறக்கும்
விலங்குகள் வழியில் உள்ளத்தை இழுக்கும்
மனிதத்தின் வழியைப் பிழையாய் உணரும்.
சலனத்தின் பாதை சுயதரம் குறைக்கும்
சரியாய் உணர்ந்தால் நம்வழி திருந்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக