புதன், 13 பிப்ரவரி, 2019

கண்ணுறங்கில் கல் நசுக்கும்! கவனம்!





உலகைச் சூழ்கிற அத்தனையும் வருமொருகாலம் கற்பனைதான்!
உலகைச் சூழ்கிறஆபத்துக்கள்  காலத்தின்பக்கத்தில் கற்பனைதான்!
உலகைப் படைத்த சக்தியெதோ அதுவும் ஒருநாள் கற்பனைதான்!
உலகை அழிக்கும் மனிதகுல விஞ்ஞானம்அதும்; கற்பனைதான்!

கனவுஎன்னும் ஒன்றினையன்றி உற்றதுணைநமக் கெதுவுமில்லை
கனவுகள்கண்ட மனிதர்கள்வாழ்வே வரலாறாயின வேறுஇல்லை
கனவுகள்என்பன கற்பனைச்சிதறல்கள் படைக்கும் ஒருவித ஓவியம்தான்!
கனவுஎன்பது இல்;லையென்றே லிந்த வையகமே வெறும் பூச்சியம்தான்!

இறைவன் வீட்டில் இடம்பிடித்திடவே இருக்கும்வீட்டை இடிப்பவர்தாம்
இறைவன் பேரில் மதம் பலபிடித்தே ஒற்றுமைதடுத்திட மோதுகின்றார்
இறைவன் உண்டு இல்லை என்று கானலில் தாகம் தீர்;ப்பவரோ
இறைவன் பற்றிய பயன்இல் கதைகளால் காலம்கரைக்கும் கயவர்களோ?

மாபெரும் மந்தை சிறுவெடிக்கஞ்சிப் பதறிச் சிதறிடும் காட்சியதாய்
மாபெரும் உலகம் பாதகர் சொற்பதம் கேட்டே அஞ்சும் அவலமதாய்
மாபெரும் உண்மைகள் நீதிகள்கழுமரம்ஏறுதல் கண்டும் தளர்ந்திருந்தால்
மாபெரும் அழிவும் தீமையும் உலகின் நியதியாய் மாறிடும்! விழித்திருப்பாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக