ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பசப்பு வார்த்தைகளைப் பாசமென நம்பாதே!




கரையான்கள் அயர்ந்திருந்தால் பாம்பின்புற்று  ஆகிவிடும்
தலைமைகள் பலம்குறைந்தால் அந்நியர்கள் பலம் பரவும்
முறையில்லா விதமமைந்தால் சோலைபுதர்க் காடாகும்
வரைவகுக்கும் அறம் சோர்ந்தால் அநநியர்வசம் நாடாகும்

கண்திறந்தே துயிலுபவர் பொதுமக்கள் எனஇருந்தால்
மண்பறிக்கும் தீயவர்கள் அடக்கியாள மனம்வகுப்பார்
மண்சாரா வெளிமகனை மரியாதைக் கிழுத்துநின்றால்
மண்பிடித்து நினையாண்டு உன்மண்ணைப் பறித்திடுவான்

பொதுமக்கள் சேவையினைப் பணம்பண்ணும் கயவரிடம்
பொதுமக்கள் தற்காலச் சிறுவுதவிக் கடகுவைத்தால்
பொதுமக்கள் எந்நாளும் பொறுக்குவராய் ஆகிடுவார்
பொதுமக்கட்: குரிதனைததும் அவர்பறித்தே உயர்ந்திடுவார்

ஆட்சியொன்றை அமைப்பதிலே அறிந்துணர்ந்து செயல்படலே
மாட்சிமைக்கு வழியமைக்கும் மக்களாட்சி மலரவைக்கும்
காட்சிவைத்துக் கவர்ச்சிசெய்தும் கலகம்செய்தும் வெல்லவரின்
வீழ்ச்சிக்கான வழியுனக்கு வருகுதென்று தெளிந்திருப்பாய்!

அள்ளியள்ளித் தருவதுபோல் அரசுபணம் தருவதுவும்
அள்ளியதைக் கொண்டதிகம் செய்கிறதாய் எண்ணுவதும்
நஞ்சுணரா துணவருந்தும் நமையிழக்கும் மூடத்தனம்
பஞ்சுபோன்ற பசப்புவாhத்தை பாசமன்று – கயமைத்தனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக