புதன், 13 பிப்ரவரி, 2019

மனமே வாழ்வின் ஆணிவேர்!





மனதில் அமைதி வேண்டுமென்றால் தனிமைதனை நீ நாடு!
மனதில் அமைதி கெடுவதற்கும் தனிமைதனை நீ நாடு!
மனதில் நன்மைக் கிடம்கிடைக்கத் தனிமைதனை நீ நாடு!
மனதில் தீமைகூடவேண்டின் அதற்கும் தனிமையை நீ நாடு!

மனதில் தோன்றும் கோடிகளில் தேடிஒன்றை நீ நாடு!
மனதில் தோன்றும் அத்தனையிலும் தேர்ந்தெடுத்து நீ நாடு!
மனதில் தோன்றும் நல்லவையில் சிறந்ததையே நீ தேடு!
மனதில் பக்குவம் வந்ததன்பின் எந்நிலையிலும் அதை நாடு

மனதில் நலனாய் இல்லாமல் நல்லவன்போல்நீ நடிப்பவனா?
மனதில் தெளிந்த நல்லவன்தான் எனநினைஉணர்நதே இருப்பவனா?
மனதில் பிறரை மன்னிப்பனாய் மனிதம் பேணும் நல்லவனா?
மனதில் பிழையைப் படரவிடாது நேர்மை உறுதியைக் கொண்:டவனா?

மனதிpல் எதுவும் தோன்றுகையில்; சோர்வுடனே தளர்ந்திருந்தால்
மனதில் கறைகள் படிந்துன் நிழலும் அச்சம்தரல் நடந்திடலாம்
மனதில் உறுதி ;படிப்படியாய் வளர்க்கும் விதத்தில் முயன்றுவரின்
மனதில் தளர்நிலை மறைந்து ;ஒளிபடரல் உணர்ந்திடலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக