புதன், 1 ஆகஸ்ட், 2012

ஏங்காதே! தாங்கிச் செல்!

மாற்றிவிட்டாரென நீஏங்கி டாதே!
ஏமாற்ற வில்லைநான் எனஎழுந்து நில்
வஞ்சித்து விட்டாரே எனவருந்தி டாதே!
வஞ்சிக்க வில்லைநான் என்றிருந்திடு.

துரோகம்செய் தாரேயென நீ துடிக்காதே!
துரோகிநா னல்லனென துணிந்தெழுந்து நில்
விரோதம் வளர்ப்பதாய் நீவருந் தாதே!
விரோதிக்கே விளம்பரம் அதுஎன்றிரு.

ஏமாற்றம் வருவதால் ஏக்கம்கொள் ளாதே!
எதிர்பார்த்து வாழாதே, சரியா கிடும்
சமுதாயம் திருந்துமா எனஐ யுறாதே!
சமுதாயம் திருந்தலே நலமென்று எண்.

நன்றியை மறப்பரால் நலிந்துபோ காதே!
பன்றிமுன் முத்திட்ட பிழைதா னது
எந்நாளும் உனைத்தீமை சுற்றிவந் தாலும்
எந்நாளும் உன்பாதை சரியெனநீ வாழ்ந்திடு.

நம்பிக்கை மோசடி செய்தால் விடு,
நம்பிக்கை யோடுநீ முன்சென்றிடு
நல்லரைத் தேடிடும் வழிகண் டிடு
நால்வரில் நல்லொருவர் எங்குமுண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக