புதன், 29 மே, 2013
சிந்தனைக் கூறுகாய் - 16
151. கடவுளைக் காண்பேனோ இல்லையோஇதயத்தில் நிச்சயம் வைத்திருப்பேன்
இடமின்றி இதயமது வெறுமையாய் ஆவதை அதில்நானும் தவிர்த்திருப்பேன்
152. கறைகொண்ட கைகளால் கழுவியே சுத்தம்செய் போலித்த னத்தைத்தான்
இறைவனின் பெயரிலே மனிதத்தை அழிப்பவர் சேவையாய்க் காட்டுகின்றார்
153. உடற் சுத்தம் நோயின்றி தப்பிடற்குதவாது, உடலுக்குள் சுத்தம்வேண்டும்
கடவுளைக் கும்பிட்டுப் புண்ணியம் சேராது, மனிதத்திற் குதவவேண்டும்
154. எழுதுவர் விரல்களில் இதயத்தின் நாடியும் நாளமும் இருக்க வேண்டும்
பழுதுள்ள குருதியேல் அதுதரும் நோய்கேடு. எழுதுவோர் உணர வேண்டும்
155. காதலைக் கவர்ச்சியாய் உணர்ச்சியாய் மட்டுமே கவிஞர்கள் காட்டும்போது
காலத்தின் தாக்கத்தைத் தாங்கிடும் ஆற்றலை காதலர்க் களிப்பதேது?
156.காலத்தின் வேகத்தில் கவர்ச்சியும் உணர்ச்சியும் கானலாய் ஆகிப்போகும்
காலத்தை மீறியே அன்பெங்கே ஆழமோ அங்குதான் அது காதல் பதிவு ஆகும்
157.கடவுளைத்தேடி-யெ வருவதைப் போலவும் களவதைச் செய்வதெது?
உடலுக்குள் எழுந்து, பின் உள்ளத்தில் நிறையும் உண்மைக் காதலது
158. இறைவனைக் காதல் என்றுரைப்பதிலும் உண்மையே உண்டு என்பேன்
இகமதை இயக்கும் படைப்பதன் அடிப்படை அதனிலே இருக்குதென்பேன்
159.நாளெல்லாம் தேடியும் நீர்கிடைக் காவிடின் உடல்சோரும். தாங்கிடலாம்
நாளெல்லாம் பழகியும் நல்நட்பு கிடைத்திடேல் எவ்வண்தான் தாங்கிடலாம்?
160.வெள்ளத்தைக் கண்டுநான் அஞ்சமாட்டேன் அதிலென்னால் நீந்தியே தப்பமுடியும் -குள்ள
உள்ளத்தைக் கண்டுதான் அஞ்சிநிற்பேன் அதற்குள் ஆபத்தும் கலந்திருக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக