வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சிந்தனைக் கூறுகாய் 18



                                                                 



171.பஞ்சதும் கல்சுற்றி எறிந்திடில் கல்போன்று பலம் சேர்ந்து சேதம் செய்யும்
      நெஞ்சதில் நீதிகொள் தலைவனைச் சார்ந்துநில் மக்களும் படைகளாகும்

172.ஊதஊதப்பெருகியே பெரியதாய் ஆவதால் பலூன் பலம் பெறுவதில்லை    
       ஊதிஊதிப் பிரிவனை இனத்துக்குள் வளர்ப்பவர் உயர்நிலை                                        அடைவதில்லை

173.கழுதையும் குட்டியில் அழகுதான் என்பதால் குதிரையோடிணைத்து                        விட்டால்
      கழுதையை அதனாலே உயர்த்திடல் இயலாது, தீயவர் தொடர்பும் அதுதான்

174.எளிமையை மதிக்காது இழிமையாய்ப் பேசுவோன் எவனுமே                                       இழிமகன்தான்
        எளிமையை மதித்ததன் பெருமையை உணர்த்துவோன் எவனுமே                           உயர்மகன்தான்

175.வசதிகள் வாய்ப்புக்கள் அளவுக்கு மிஞ்சினால் மனதுக்குள் நோய்கள் வரும்
       வசதிகள் வாய்ப்புக்கள் உழைப்புக்கு ஏற்பவே அமைந்திடில் நன்மை  வரும்

176.பிறருக்கு உதவிசெய் உயர்குணம் இல்லையேல் மனிதா!நீ செத்தல் நன்று
       பிறரிலும் பிழைநிறை கொடியரை உணர்ந்திடேல் மனிதா!நீ இருத்தல்                  என்று?

177.உறவாக நெருங்கிடும் அனைவரும் நல்லவர் எனநம்பி ஏற்று நின்றால்
      கீரையாய்ப் புல்லையும் சேர்த்துண்டு வலிவந்து துடிப்பதே நடந்திடும்பார்!

178.வடிவுடல்  மட்டுமே நம்பிடும் புணர்வுணர் வென்றுமே அன்று காதல்
       வடிவுக்கு  அன்பதே இலக்கணம் என்பதை உணர்வதேஉண்மைக் காதல்

179.விலங்குகள் மனம்இணைஇனத்துடன்இணைந்துதான் வாழ்ந்திடல் இயல்பு        எங்கும்
       கலங்கவே இணைந்துவாழ் உறவுகள் கெடுத்ததில்உயர்வதே மனிதர்கள்              இயல்பு எங்கும்

180.கடலோடே மிதந்தோடி கரைகாண வழிதேடி ஓயாது அலைதல் காமம்
       கடலோடே இணைந்துள்ள அலைபோல அசைந்திணைந்திருப்பதே                         உண்மைக்காதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக