ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சும்மா சில வரிகள் 5







62. தானாக அனுபவித்து உணராதபடிக்கு இறை நம்பிக்கையை
   வற்புறுத்திப் போதித்தலை மதவாதிகள் கடைப்பிடிப்பதால்தான்
   நம்பிக்கைகள் அனைத்துமே பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன.

63. திருப்தியைப் பணத்திலே தேடுகின்ற மனிதன் இறுதியில்
   சோர்ந்து போவான். திருப்தியைப் பகிர்வதில் தேடுகின்ற மனிதன்
   இறுதியில் திருப்தியை உணர்வான்.

64. எந்தச் சுகமுமே தற்காலிகமானதுதான் என்பது சரியாகப்  
   புரியாதபடியினால்தான் மனிதர்கள் எப்போதுமே திருப்தியற்று
   அலைகின்றார்கள்.

65. பகைமை உணர்வு வளருகையில் உலகம் ஒரு புது மடையனை
   வரவேற்க தயாராகின்றது.

66. சகல குற்றச் செயல்களுக்கும் அடிப்படையாக பணத்தினை  
   வைத்து மனிதரை மதிக்கும் தவறான கொள்கைதான் பெரிய
   இடத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது.

67. திரையை விலக்காமல் புகுந்தோடத் துவங்காதே! பின்னால்
   கதவிருக்கலாம். திட்டமின்றித் தீவிரமாகச் செயலில் இறங்காதே!
   தோல்வி வரும் வாய்ப்பிருக்கலாம்.

68. நல்ல கல்வியை வழங்காத பள்ளியால் மாணவர்க்குப் பயனில்லை.  
   நல்ல சமூகத்தை வளர்க்காத கல்வியால் நாட்டுக்குப் பயனில்லை

69. என்றுமே தீராத பசியாக நமக்கார்வம் கல்விமேல் இருக்க
   வேண்டும். காண்பதில் கேட்பதில் கற்பது எப்படி என்பதும் தெரிய
   வேண்டும்.

70. மதிப்பது என்பது அங்கீகாரத்தின் அடிப்படையில் வருவதாகும்.
   அது பயத்தினடிப்படையில் வந்தால் அதன் பெயர் கோழைத்தனம்.
   அங்கீகாரமல்ல.

71. ஏழு மலையேறி இறைவனைத் தொழுதாலும் அதன் பயன்
   பூச்சியம்தான். ஏழை சில பேரின் உயிர் வாழ உதவி செய். அது
   கோடி புண்ணியந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக