சனி, 14 செப்டம்பர், 2013

புரிய வைத்தல் பெரிய வேலை





பக்குவம் ஆகவும் சத்தியம் போலவும்
பகைகொண்ட தீயவர் திரிபுசெய்து பேசுவார்
திக்கிலே எங்கணும் தீமைக்கு நன்மையாய்
திசைமாற்றிக் கதைகட்டிக் கயமையைக் காட்டுவார்

மக்களுக் காகவே செய்கிறேன் என்பதாய்
மக்களை வாட்டியும் வதைத்துமே ஆளுவார்
நீதிக்காய்க் குரல்எழின் தேசத்து ரோகமாய்
நீலிக்கண் ணீர்விட்டு உ லகுக்கவர்  காட்டுவார்

பயிர்நிறை வயலினை அறுவடைக் கேற்பவே
பயன்வரும் காலத்தில் கொள்ளைசெய் கள்ளராய்
வயிற்றுக்கும் இன்றியே பொதுமக்கள் வாடவே
வழிசெய்து அவருயர்ந் ததில்பொருள் தேடுவார்

கழுதைக்குக் குதிரையின் அலங்காரம் செய்வதால்
கழுதையும் குதிரையாய் எங்குமே மாறுமா?
சனநாய கம்என்று சனக்கொள்ளைக் கூட்டமே
சதிசெய்து வெல்லநாம் இடமிடல் நியாயமா?

முன்னுக்குப் பின்னாக உண்மையை மாற்றுவார்
முன்னாளும் இந்நாளும் தீயரே ஆகுவார்
என்னாளும் அவர்பின்னே தலைமைக்கு நம்பியே
பின்னோடல் நாட்டுக்கு என்றென்றும் தீமையாம்

நாட்டுக்குத் தலைவரைத் தேர்ந்திடும் போழ்திலே
வீட்டுக்குள் உணரராமல் நாம்செய்யும் தவறினால்
காட்டேறிக் கூட்டங்கள் நாடாளல் தவிர்த்திடில்
நாட்டுக்கும் நலம்சேரும் மக்களும் வாழுவார்

சூழ்நிலைக் கஞ்சியே தீமைக்கு இடம்விடின்
பாழ்பட்டுப்போவதே தேசத்துக் காகிடும்
வாழ்வுக்கு நல்லதாய்ச் சுதந்திரம் நாடிடேல்
வாழ்வர்த்தம் என்றைக்கும் பொருளற்றல் ஆகிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக