வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சிந்தனைக் கூறுகாய் 19









181.மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்து, மண்ணில் மறைந்தோர்                              மனிதரென்பார்.
      மண்ணில் மலர்ந்து,  மண்ணில் மறைந்தும்  உயிராய் நிலைப்பரை                           தெய்வமென்பார்              

182.மடைமையை விதியென ஏற்பதும் மடைமை விதியதை மடைமையாய்ச்            சொல்வதும் மடைமை.
      உண்மையை உணரார் பொய்யெனல் மடைமை உண்மைக்குப் பொய்யுரை       போடலும் மடைமை.

183.தேசத்தின் உயர்வும் விடுதலை உணர்வும் இதயத்தில் உள்ளவனைத்                     தேசத்தின் தலைவன் ஆகவே கொள்பவர் அனைவரும் பாக்கியரே!

184.சத்தியநெறியை இதயத்தில் கொள்ளா நரிகளின் தலைமையினை                            புத்தியில்லாரும் புல்லரும் ஏற்கும் தேசத்துக் கழிவுவரும்

185 எதிர்வினை இல்லா தெதுவுமே இயற்கையில்  இல்லையென்பதே                          நிசமாகும்
       எதிர்வினையாகநம் பாவமும்; பழிகளும் பரம்பரை சுமப்பதே  விதிஆகும்

186.மரமதன் தன்மை, பெறுமதி அதுதரும் பழத்தினைப் பொறுத்திருக்கும்                    மனிதனின் திண்மை அவன்செல் திசையின் உறுதியில் தெரிந்திருக்கும்

187.வார்த்தையும் செயலும் சத்தியம் சுமந்தால் வாய்மையின் தரம் கிடைக்கும்       போர்வையைப்போலே பொய்யதில் கலந்தால் தோல்வியின் குழிதிறக்கும்

188.  வழிகாட் டிடவழி  தெரியார் வழிபுகின் கேடது கூடவரும்                                                வழிகாட் டிடவரும் போதகர் தவறெனில் வாழ்வழி கெட்டுவிடும்.

189. நன்மையைச் செய்பவர் நற்பெயர் கெடுத்திடும் இழிபுத்தி மாந்தரெல்லாம்            நன்மையைச் செய்வராய் நம்பிடும் அறிவிலார் சிறுபுத்தி மாந்தரேதாம்

190. அடுத்தவர்க்குதவிடும் நற்பண் பினைநாம் குழந்தைக்கு ஊட்டுகையில்                  கெடுப்பவர் வேடம் பற்றியும் புரிந்திட வைத்தால் பின்னா ளவர்கையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக