புதன், 18 நவம்பர், 2015

 நீ நீதி சார்ந்திருந்தால் நதிமீதும் நடந்திடுவாய்!



Image result for powerful images


சிதறிச் சிதறிநீ தெருத்தெருவாய்த் திரிந்தாலும்
உதவிக்கு வழியின்றி ஊர்ஊராய் அலைந்தாலும்
இதயத்தின் உறுதியை இழக்காமல் இருந்தனையோ
எதனாலும் நன்நோக்கம் தளராமல் தடுத்திடலாம்

உன்மண்ணை உன்எதிரி ஏமாற்றிப் பறித்திடலாம்
உன்மக்கள் தீயரெனப்  பொய்பகர்ந்து ஏய்த்திடலாம்
நன்நோக்கம் நின்மக்கள் நல்வாழ்வே எனநம்பின்
என்றைக்கும் தோற்காதந் நினைவெனவே நம்பிடுவாய்!

யூதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாய் ஏதிலிகள்
பாதகர்கள்இ கொடியவர்கள் எனப்பட்டம் சுமந்தவர்கள்
வாழவே வழியின்றி வாழ்நாளில் சிதைந்தாலும்
வாழநாம் வழிகாண்போம் எனவுறுதி எடுத்தவர்கள்

உலகெல்லாம் கைவிட்டும் அவர்தமக்குள் இணைந்திருந்தார்
கலங்காமல் தம்கனவை நனவாக்கப் பணிதொடர்ந்தார்
இலட்சங்கள் பலவெனவே தம்மக்களை இழந்தாலும்
கலங்கவே கலங்காமல் இலட்சியம்தனில் நின்றார்

எப்படியோ தம்மண்ணில் காலூன்றி அமைத்தவர்கள்
அப்படியே ஓயாமல் அதைவளர்த்து உயர்ந்தனரே!
ஒப்பிடவே முடியாத பலமிக்க ஒருநாடாய்
இப்பொழுது இசுரேலியர் எனவுயர்ந்து விட்டனரே!

உன்மண்ணும் இவர்போல உன்இனத்தால் உனதாகும்
உண்மையான கனவுடனே தொடர்ந்துழைத்தால் அதுஆகும்
என்றுந்தன் உள்ளமதுள் தொடர்கனவாய்க் கொள்கைஎடு
என்றைக்கும் நீதியது சாவதில்லை என்று இரு

சேற்றில் நனைந்திருந்தால் அதைக்கழுவிச் சுத்தம்பெறு
உற்றவர் போலிருந்தார் கெட்டரெனில் தவிர்த்துவிடு
காற்றுக்கு அசைதுணியாய் சந்தர்ப்ப வாதியரோ
கீற்றாகக் கூடஅவர் தொடர்புதவிர்இ கொள்கையில் நில்.

முடியாத தென்றொன்றும் உழைப்பார்க்கு இருந்ததில்லை
படியாத மனவுறுதி தகர்ந்தாயும் கதையில்லை
நீசாரும் கொள்கையது உண்மையிலே நீதியெனில்
நீநடக்க முடிவெடுத்தால் நதிமேலும் நீநடப்பாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக