துளித்துளியாய்த் தானும்..
தனியொருவன் பயணித்த வள்ளமே பின்னால்
பலநுாறு பேர்செல்லும் கப்பலாய் ஆச்சு!
தனிமனிதர் சிந்தித்த உண்மைகள் பின்னால்
பலகோடிப் பேருக்கும் வழிகாட்ட லாச்சு!
ஒருமனிதர் உள்ளத்தில் உருவான கொள்கை
ஓருலகம் முழுவதும் பரவிட்ட காட்சி
ஒவ்வொரு மதமதன் அடிப்படைக்குள்ளே
ஒப்புயர்வில்லாத உயர்ச்சியாய்ப் போச்சு!
ஒற்றுமை தன்னையே உருவாக்கு தற்காய்
கற்றவர் பலபேரும் வழிகாட்ட வந்தார்
கற்றவர் இடையில்வாழ் கயவர்க ளாலே
கறைசேர்ந்து அனைத்துமே குறையாகிப் போச்சு!
துளித்துளி யாகவும் நல்லதைச் சேர்த்தால்
விழிமுதல் கால்வரை நல்லவர் ஆவோம்
வழிசொல்லும் முன்நாமே வழிநின்று கண்டால்
வழிகாட்டும் பணிகளில் வெற்றியும் காண்போம்
தனியொருவன் பயணித்த வள்ளமே பின்னால்
பலநுாறு பேர்செல்லும் கப்பலாய் ஆச்சு!
தனிமனிதர் சிந்தித்த உண்மைகள் பின்னால்
பலகோடிப் பேருக்கும் வழிகாட்ட லாச்சு!
ஒருமனிதர் உள்ளத்தில் உருவான கொள்கை
ஓருலகம் முழுவதும் பரவிட்ட காட்சி
ஒவ்வொரு மதமதன் அடிப்படைக்குள்ளே
ஒப்புயர்வில்லாத உயர்ச்சியாய்ப் போச்சு!
ஒற்றுமை தன்னையே உருவாக்கு தற்காய்
கற்றவர் பலபேரும் வழிகாட்ட வந்தார்
கற்றவர் இடையில்வாழ் கயவர்க ளாலே
கறைசேர்ந்து அனைத்துமே குறையாகிப் போச்சு!
துளித்துளி யாகவும் நல்லதைச் சேர்த்தால்
விழிமுதல் கால்வரை நல்லவர் ஆவோம்
வழிசொல்லும் முன்நாமே வழிநின்று கண்டால்
வழிகாட்டும் பணிகளில் வெற்றியும் காண்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக