அறிந்தென்ன?புரிந்தென்ன? இருந்தென்ன? தொலைந்தென்ன?
வெள்ளமாய் நீரேறி வீடினை இழந்தால்
விரைவிலே புதுவிட்டைக் கட்டியே விடலாம்
கள்ளமாய் மனமேய்த்தல் நடக்கின்ற தென்றால்
உள்ளத்தின் துயரையெவ்வண் நாம்போக்கி விடலாம்?
துள்ளிநில் உண்மையுள் நல்மனிதர்க ளுக்கு
துயரூட்டற் கிலகுவாய்ச் சட்டங்கள் இருக்கையில்
கள்ளமாய் அரசினில் சதிராடும் குள்ளர்கள்
கடைக்குணம் வெல்லலை எவ்வண்ணம் தவிர்க்கலாம்?
நல்லதைச் சொல்வதும் செய்வதும் குற்றமாய்
நாடுகள் சட்டங்கள் செய்துமே தடுப்பதால்
நல்லவர் கள்கூட தீயராய் மாறிடும்
நாசம்சேர் நிலைவரல் எவ்வண்ணம் தடுக்கலாம்?
பொல்லாத மக்களே ஆட்சிகள் செய்வதால்
பொய்யாக வேநீதி தடுமாறித் தவிக்கையில்
எல்லாரும் சேர்ந்தாலும் முடியாத சூழலில்
தனிநபர் திருந்தாமல் தரணியும் திருந்துமா?
மண்விட்டு விண்தாவி விஞ்ஞானம் வளர்ந்துமிம்
மண்மீது நிம்மதிக் கெனஒன்றைத் தந்ததார்?
விண்முட்டக் கட்டிடம்இகோபுரம் உயர்வதால்
வறுமையில் லாததோர் நிலையெங்கும் வந்ததா?
புண்பட்டுத் துன்பத்தில் வாடிடும் மாந்தரில்
புவிதனில் புதிதாகப் பிறந்தசிறு பாலரும்
குண்டுகள் வீழவே துண்டுதுண் டாவதும்
கருகியே அழிவதும் அவர்செய்த பாவமா?
செந்நீரில் அப்பாவி மக்களே சாகையில்
செய்விக்கும் கொடியரோ தலைவராய் மிளிர்கிறார்
கண்ணீரைத் தடைப்பவர் எவரென்று அணுகினால்
கண்தேடும் அவர்களே ஆயுதம் கொடுக்கிறார்
மண்மீது நிம்மதி வரவேண்டும் என்பதில்
மனிதாபி மானமே முதலிலே என்பதை
கண்ணுள்ள குருடராய் மறுப்பரும் மறைப்பரும்
கருங்கல்லா? கடைத்தனக் குணங்களின் விதைகளா?
.2008
வெள்ளமாய் நீரேறி வீடினை இழந்தால்
விரைவிலே புதுவிட்டைக் கட்டியே விடலாம்
கள்ளமாய் மனமேய்த்தல் நடக்கின்ற தென்றால்
உள்ளத்தின் துயரையெவ்வண் நாம்போக்கி விடலாம்?
துள்ளிநில் உண்மையுள் நல்மனிதர்க ளுக்கு
துயரூட்டற் கிலகுவாய்ச் சட்டங்கள் இருக்கையில்
கள்ளமாய் அரசினில் சதிராடும் குள்ளர்கள்
கடைக்குணம் வெல்லலை எவ்வண்ணம் தவிர்க்கலாம்?
நல்லதைச் சொல்வதும் செய்வதும் குற்றமாய்
நாடுகள் சட்டங்கள் செய்துமே தடுப்பதால்
நல்லவர் கள்கூட தீயராய் மாறிடும்
நாசம்சேர் நிலைவரல் எவ்வண்ணம் தடுக்கலாம்?
பொல்லாத மக்களே ஆட்சிகள் செய்வதால்
பொய்யாக வேநீதி தடுமாறித் தவிக்கையில்
எல்லாரும் சேர்ந்தாலும் முடியாத சூழலில்
தனிநபர் திருந்தாமல் தரணியும் திருந்துமா?
மண்விட்டு விண்தாவி விஞ்ஞானம் வளர்ந்துமிம்
மண்மீது நிம்மதிக் கெனஒன்றைத் தந்ததார்?
விண்முட்டக் கட்டிடம்இகோபுரம் உயர்வதால்
வறுமையில் லாததோர் நிலையெங்கும் வந்ததா?
புண்பட்டுத் துன்பத்தில் வாடிடும் மாந்தரில்
புவிதனில் புதிதாகப் பிறந்தசிறு பாலரும்
குண்டுகள் வீழவே துண்டுதுண் டாவதும்
கருகியே அழிவதும் அவர்செய்த பாவமா?
செந்நீரில் அப்பாவி மக்களே சாகையில்
செய்விக்கும் கொடியரோ தலைவராய் மிளிர்கிறார்
கண்ணீரைத் தடைப்பவர் எவரென்று அணுகினால்
கண்தேடும் அவர்களே ஆயுதம் கொடுக்கிறார்
மண்மீது நிம்மதி வரவேண்டும் என்பதில்
மனிதாபி மானமே முதலிலே என்பதை
கண்ணுள்ள குருடராய் மறுப்பரும் மறைப்பரும்
கருங்கல்லா? கடைத்தனக் குணங்களின் விதைகளா?
.2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக