புதன், 18 நவம்பர், 2015

கானலை நம்பினால் மானுக்குக்கேடு
  பாவத்தை நம்பினால் மாந்தர்க்குக் கேடு



Image result for mirage and a deer





என்னதான்  சொன்னாலும் எவ்வண்ணம்  சொன்னாலும்
எந்நாளும் மெய்யதாய்  பொய்மாறல் துர்லபம்
தண்ணீரைக் கொண்டு  நீசுட்டிடலாம் ஆயினும்
தண்ணீரால் தீயணைத்தல் அன்றி வே றாகுமா?

என்னதான்  செய்தாலும் எவ்வண்ணம் செய்தாலும்
நின்நீதி  பொய்யெனில் நீதியாய்  மாறுமா?
நல்லாரை இல்லாராய்  ஆக்கலும் அடக்கலும்
பொல்லார்க்கு இலகுதான் நிரந்தரமாய் வெல்லுமா?

தின்மைவிழை பெரும்பான்மை எவ்விதம் முயலினும்
தின்மைதான்  நன்மையாய் சரித்திரத்தில் ஆகுமா?
மென்மைதான்  நாவென நச்சினைநீ பரப்பினால்
நன்மையா பரவிடும்? நெஞ்சைத்தொட்டுச் சொல்வையா?

என்னதான்  மறைத்தாலும் எவ்வண்ணம்  மறைத்தாலும்
தண்ணீருக்குள் புதைபந்தால்  உள்தங்கல் இயலுமா?
புண்மேலே  புனுகுபோல் தீமைமேல் நன்மைபோல்
கண்மறைத்  தேசெய்யும் பாவங்கள் மறையுமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக