தடம் பதிக்குமுன் பாதையைப் பார்!
கெட்டவர்கள் ஒன்றுகூடி சங்கமென்று ஒன்றைவைத்துக்
கெட்டவர்கள் மற்றவர்கள் என்று பாடக் காணின்
எட்டிநின்றுகூட அந்தப் பக்கம் பார்த்தி டாதே!
தடடிவிட்டு வெட்டியோடுஇ பக்கம்சென்றி டாதே!
கள்ளருக்குக் களவுசெய்தல் தேவையாகத் தோன்றும்
குள்ளபுத்திக் கேடருக்குத் தீமைதேவை என்றும்.
பள்ளம்தோண்டிப் பிறரைவீழ்த்தும் பாத கர்க்குநீதி
உள்ளமதில் இல்லையதால் நீதிக் கென்றும் தீது!
எள்ளளவும் பாவம்தன்னில் நாட்டம் கொண்டி டாதே!
எள்ளளவே படிப்படியாய் உன்னை ஆழ்த்தி வீழ்த்தும்.
இருளினுக்குள் மனம்விரும்பிப் பிழைவழியார் செல்வார்
வருமுறவார் அறிதலின்றி இணைவர்துயர் சுமப்பார்
இருதயத்தினுள் இருளிருந்தால் பகலதுவும் இருளே!
இரக்கமது அதிலிருந்தால் தகைமையில்நீ விளக்கே
கருத்ததனில் பிழைதிருந்தப் பிறர்மனதை வகுத்தால்
இருந்துவரும் வாழ்க்கையிலும் இறைமகனாய் ஒளிர்வாய்!
கெட்டவர்கள் ஒன்றுகூடி சங்கமென்று ஒன்றைவைத்துக்
கெட்டவர்கள் மற்றவர்கள் என்று பாடக் காணின்
எட்டிநின்றுகூட அந்தப் பக்கம் பார்த்தி டாதே!
தடடிவிட்டு வெட்டியோடுஇ பக்கம்சென்றி டாதே!
கள்ளருக்குக் களவுசெய்தல் தேவையாகத் தோன்றும்
குள்ளபுத்திக் கேடருக்குத் தீமைதேவை என்றும்.
பள்ளம்தோண்டிப் பிறரைவீழ்த்தும் பாத கர்க்குநீதி
உள்ளமதில் இல்லையதால் நீதிக் கென்றும் தீது!
எள்ளளவும் பாவம்தன்னில் நாட்டம் கொண்டி டாதே!
எள்ளளவே படிப்படியாய் உன்னை ஆழ்த்தி வீழ்த்தும்.
இருளினுக்குள் மனம்விரும்பிப் பிழைவழியார் செல்வார்
வருமுறவார் அறிதலின்றி இணைவர்துயர் சுமப்பார்
இருதயத்தினுள் இருளிருந்தால் பகலதுவும் இருளே!
இரக்கமது அதிலிருந்தால் தகைமையில்நீ விளக்கே
கருத்ததனில் பிழைதிருந்தப் பிறர்மனதை வகுத்தால்
இருந்துவரும் வாழ்க்கையிலும் இறைமகனாய் ஒளிர்வாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக