வெள்ளி, 19 அக்டோபர், 2018

பாலியல் சகதியில் நொண்டிக் குதிரைகள்

பாலியல் சகதியில் நொண்டிக் குதிரைகள்

அமெரிக்காவிலிருந்து ஆரம்பமாகிப் படிப்படியாக உலகெங்கும் பரவிவிட்டிருக்கும் இந்த “நானும்தான் அல்லது எனக்கும்தான்” எனும் பொருள்பட நடிகையர்களால்  அயோக்கியர்களுக்கு எதிராகத் திரையுலகத் திரைமறைவுப் பாலியல் வன்வகைத் திருவிளையாடல்கள் வெளிவந்ததன் பின்னால் இதர பல துறைகளின் பின்னணிகளிலுமிருந்தும் தைரியமிக்க பெண்கள் முன்வந்து தமக்கு நிகழ்ந்த கடந்தகால சம்பவங்களை வெளிப்படுத்தி இன்று தமது இரண்டாந்தர ஆணாதிக்க மதிப்பு நிலையைத் தகர்க்க முயன்று படிப்படியாக அதில் பல நாடுகளில் வெற்றியும் நாட்டி வருகின்றார்கள். முpக மிகப் பாராட்டத்தக்க விடயம் இது.

ஆனால் அதன் தொடர்ச்சி இந்தியாவைத் தொட்ட போதுதான் சக்திமிக்கதான அந்த இயக்கம் சகதி மிக்கதான ஒரு அருவருப்பு நிலைக்குள் சிக்கி விட்டதோ என்ற சந்தேக சூழ்நிலையை உருவாக்கியிருப்பதுபோல உருமாறித் தெரியத் துவங்கியிருக்கின்றது.

குற்றமே செய்யாத படுசுத்தமான மனிதப்புனிதர்கள் பலர் புற்றினின்று வெளிவரும் கறையான்களாக முகநூலிலும் “வாட்ஸ்ஆப்” பிலும் “யூட்யூப்” பக்கங்களிலும் மேடைகளிலும் கெட்ட கேட்டிற்கு அரசியல் மற்றும் ஆன்மீகக் களங்களிலும்கூட இந்த “மீற்டூ” ட்விட்டர் பரபரப்புக்களினால் நாடே அதிலும் தமிழ் நாடே மிகுந்த பரபரப்பாக நாறிக்கொண்டு வருகின்றதுபோல் தெரிகின்றது.

ஏழைகளையும் கோழைகளையும் தனிமையிலிருக்கும் தளிர்களையும் பச்சைக் குழந்தைகளையும் கூட விட்டு விடாத காமுகக் கயவர்களும் தனக்கு நடந்த பாதிப்புக்கு நீதி கேட்டுச் செல்பவளைக்கூடத் தம் காமப்பசிக்குப் பங்கு போடும் காவலர்களும் ஆண்டவனின் பெயரால் ஆங்காங்கே காமக் களியாட்டம் நடத்தும் ஆ...ஆசாமிகளும் நடைபாதையிலும் பயண வேளையிலும்கூட கைநீட்டிச் சுகம்தேடும் கைங்கர்யத்தில் கைதேர்ந்தவரும் கடமை செய்ய வந்தவரைத் தமது காமத்திற்குக் கையிழுக்கும் அதிபர் நிலை அயோக்கியர்களும் அமைச்சர்களும் ஏன் ஆளுநரும்கூட இதற்குள் சிக்கி நிற்பது பெரிய அவமானமாக இருக்கின்றது.

இதனிடையே தம்மைத்தாமே உயர்வாகத் தம்பட்டமடித்துக் கொண்டும் தம்மையே உணராது தமது கருத்துக்களால் தாமே தாழ்ந்தவர் என சுயஅடையாளப்படுத்திக் கொண்டு பெரியவராக நடமாட முயலும் அறிவுத் திருநங்கைகட்கும் குறைவில்லை போலத் தெரிகின்றது.

தன் கண்ணை அடைத்து மறைக்கும் ஒட்டடையை உணராமல் மற்றவர் கண்ணில் துரும்பகற்ற முயலும் விதத்தில்தான் இந்தப் பாடகி பாடலாசிரியர் பாலியல் கதையும்  இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றது.

பாடகி சின்மயியின் முறைப்பாடு உண்மையோ பொய்யோ அதனை வைத்து தனிநபர்
நற்பெருக்குக் களங்கம் கற்பிக்கவும் அவரை அப்படியே அடித்தளம் நோக்கித் தள்ளிப் புதைத்துவிடவும் என்று ஒரு சதிக்கூட்டமே பின்னிருந்து இயங்குவதுபோல அல்லது இயக்குவது போலத்தான் பக்க சார்பற்று சிந்தித்தால் புரிகிறது.

சில வேலைகளில் வேகமிருக்கும் விவேகமிருக்காது. சில வேலைகளில் விவேகமிருக்கும.; நேர்மை இருக்காது. சில வேலைகளில் நியாயம் இருக்கும்.
ஆனால் அணுகுமுறைத் தவறால் அது தோற்றுப்போகும்.

ஆனால்.....
நியாயத்தை நம்புபவர்கள் சுய வளர்ச்சிக்காhகச் சந்தர்ப்பந் தேடி வீழ்த்த முயல மாட்டார்கள். மாறாகஎவரையும் எதற்காகவும் எதிர்க்கத் தயங்காமல் தம்மவரைக் கொண்டோ தமக்காக வருபவரைக் கொண்டோ உடனடியாகவே தட்டிக் கேட்பார்கள்.

வசதி வாய்ப்புக்கள் இல்லாத ஏழைகள் அனாதைகள் தாழ்த்தப்பட்ட மக்களாக சமுதாயத்தில் நியாயங்கள் மறுக்கப்படுபவர்கள் இவர்களை இதற்குள் சேர்க்க முடியாது. 

ஆனால் பிரபல்ய பலமிருந்தும் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவோ அல்லது வேறு சுயநலக் காரணங்களுக்காகவோ தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியரை வெளியுலகிற்கு உயர்வாக விட்டுக் கொடுத்து தாமும் உயர தம்முடன் தொடர தொழில் வகையில் இடமளித்து விட்டு அதை வைத்து உயர்ந்தும் விட்டு காலங்கடந்து களங்கம் கற்பிப்பதன் பின்னணிக் காரணமாக சொல்லப்படும் காரணங்களே மிகவும் பலவீனமாக இருக்கின்றன.


சின்மயி தனது வாழ்க்கையில் தான் பாலியல் தவறுகளே செய்தறியாதவர் போலவும் பாலியல் தவறுகள் தமக்கு நடந்ததே இல்லை என்பது போலவும் காட்டிக் கொள்ள முனைவதைக் கவனித்தால் அவர் திருமணமான பின் கணவரை விளித்து சம்பவத்தை விளக்கிய பின் அவரை வைத்தே கவிஞர் வைரமுத்துவை விசாரித்திருக்கலாமே!அல்லது சட்டத்தரணியை உடன் வைத்தே கூட விசாரித்து அவரை எச்சரித்தோ ஏற்ற நடவடிக்கை எடுத்தோ முடித்திருக்கலாமே!

இத்தனை பெரிதாக இதை வைத்துத் தத்தம் சமுதாய நலனுக்காக மணிக்கணக்கில் உரையாற்ற ஓடி வருகிற இத்தனை பெண்ணியல் பெரியார்களும் இதைக் காட்டியே தமக்குக் கூட்டம் சேர்க்கும்  தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் தத்தமது மனசாட்சியைத் தட்டிச் சொல்லட்டும்:

நாங்கள் பாலியல் தவறுகளைச் செய்ததே இல்லை. எமக்கும் எவராலும் அப்படி நடந்ததே இல்லை. தனியாகவோ இணையாகவோ குழுவாகவோ எதுவிதத்திலும் அதில் ஈடுபடவோ ஈடுபாடு கொண்டதுவோ இல்லை- கொள்வதுமில்லை அல்லது கொள்ளப் போவதுமில்லை என்று சொன்னால் அவரை அல்லது அவளை ஒன்றில் தடிகொண்டு அடிக்க வேண்டும் இன்றேல் தீவைத்துக் கொளுத்த வேண்டும்.

ஏனெனில் எந்த ஒரு மனிதப் பிறவியும் முழுமை பெற்ற பிறவியல்ல. நல்லதும் கெட்டதும் கலந்தவர்தான். தமது உண்மையை மறைக்கப் பலரும் தோற்றங்களை மேம்படுத்தி மறைந்து நிற்பதுதான் உண்மை.

அகப்படாதவரையில் அத்தனை அயோக்கியர்களும் உத்தமர்கள்தான். அதுபோல  நாம் காணும் சந்திக்கும் பழகும் அத்தனை பேருக்குள்ளும் அயோக்கியமும் யோக்கியமும் கலந்தேதான் உள்ளன. புடம்போட்டால் நிமிரலாம்.தடம் தவறின்
தடுக்கி விழலாம். அவ்வளவுதான்.

குற்றம் உண்மையெனில் தண்டனைக்கு வழி தேடவேண்டும். குற்றமில்லையெனில்
குற்றஞ சாட்டுபவரை அவதுர்று வழக்கில் இழுத்து வாலை நறுக்க வேண்டும்.
ஆவ்வளவுதான்.

இடையில் புரணி கூறிப் புகழ் தேடும் நொண்டிக் குதிரைகளுக்கு மட்டும் ஒன்று தெளிவாகத் தெரிய வேண்டும்.

உங்களின் உள்ளங்கை சொல்கிறது:

நடுநிலையில் உன் பெருவிரல்நான் சொல்கிறேன்.

எவரை நோக்கியும் நீ என் ஆள் காட்டி விரலை நீட்டுகையில்
இதர மூன்று விரல்களும் உன்னை முதலில் சுட்டுவதை நினைவில் வைத்திரு.

ஊரைத் திருத்த உன்னைத் திருத்து. அதுவே மருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக