ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அவதானம் அறிவு வளர அவசியம்




இறைவன்என்ற நம்பிக்கையைக் கதைகள்கட்டிக் காப்பவர்
இறைவன்பெயரில் பொய்யைவைத்துத் தம்மைவளர்க்கும் கீழ்மகர்
தரையில் நின்று வானை விளித்து இறையைத்தேடும் மூடர்கள்
தரையும் உருண்டை வடிவுக்குள் அடக்கம் எனஉணராத மூடர்கள்

கறைபடியாத மனமதனோடு அறிவினில் தெளிவினை ஊட்டுதல்
நிறைவினை நன்மைகள் செய்வதில் உணரும்வழிதனைப் பிறர்க்குக் காட்டுதல்
இறையைநம்பும் மனங்களுக்குள்ளே உண்மைபதிந்திடற் குதவிடின்
பறையறைந்தும் பலரழைத்தும் அவர்புகழ் பரப்பல்கூட நல்லதே!

அன்புஎன்ற ஒன்றில் மட்டும் இறைவன் உண்டு என்பவன்
அன்புதன்னைப் பலபெயர்வைத்துப் பேதம்செய்யும் மார்க்கமாய்
பண்புஅற்று ஏற்றத்தாழ்வில் அடிமைத்தளத்தை ஆக்கினால்
அன்புகொன்று தீமைவளர்க்கும் தீயவரே ஆளுவார்

அமைதிதன்னைத் தேடிஅன்று அமைக்கபபட்ட மதங்களால்;
அமைதிகெட்டு உலகம்எங்கும் கொலைகள் பரவக் காரணம்
அமைதிகெடுத்துத் தம்மைவளர்க்கும் சுயநலப்பேயர் கூட்டமே!
அமைதிதேடி அவரைநம்பின் எவர்க்கும்தொடரும் தீமையே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக