சனி, 20 அக்டோபர், 2018

நாமே நாடத்தகு நல்ல அனுபவங்கள்



மதங்களினாலே நன்மைவரும்என மனதினுள்உண்மையில் நீநினைத்தால்
மதபேதம் எனும் நச்சினைக் கொண்ட மனதுடன் கொடுவழி இறங்காதே!
இதம்தரும் வார்த்தை பதந்தரும்பண்பு இதரர்க் குதவிடும்; கருணையுடன்
நிதமுனைநீயே வழிசெல்லவைத்தால் உன்வழிஉன்மதக் குறளாகும்

தெரியாவிதங்களில் நீதியின்சக்தி இயங்குதல் இலகுவில் புரியாது
புரியாவிடயங்கள் இலையென மறுப்பது எதனிலும்ம்சரியாய் இருக்காது
சரியாய்ச் சரியைப் புரிந்திட முயலின் தாமதமிருப்பினும் தவறாது
மரியாதையினை மனிதருள் பகிர்ந்தால் இறைவனை உணர்வோம் தவறாது


கரும்பதன் சுவையை சரியாய் உணரக் கடித்தததை (உ)ருசித்தல் சரியாகும்
விரும்பிடும் விதமதில் இறைவனை உணர இதயத்தின்ஈரமே சரியாகும்
வறுமையை இயலாநிலைதனைக் கொண்டவை அனைத்திலும் நீ உணர்ந்தால்
சிறுசிறு வகையிலும் பசியுடன்கல்வி வழிவகை வகுத்தலும் சரியாகும்

எவரது துன்பமும் நினதெனநினைத்திடும் பக்குவ மதைமனம் பெறவேண்டும்
எவரது துயரமும் களைவதில் உன்மனம் உண்மையில்ஆர்வம் கொளவேண்டும்
எவரது உயர்விலும் உன்மனம் நிறைவுறும் உத்தமம் உன்னுள் எழவேண்டும்
எவரது வாழ்விலும் நன்மையே சேர்ந்;திட விழைமனம் உன்னுள் வரவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக