திங்கள், 29 அக்டோபர், 2018

தலையைச் சுற்றுதே ...சாமி!




வறுமையை அலட்சியம் செய்கின்ற நாடும்

கல்வியில் பதவியில் விளையாட்டில் சாதனையில் திறமையில் பாகுபாடு தேடும் நாடும்

விவசாயிகளையே பஞ்சத்துள் தள்ளி வஞ்சிக்கும் நாடும்

கல்வியில் வெற்றிக்குத் தடையிடும் சட்டங்களை விதிக்கும் நாடும்

ஏற்றத் தாழ்வில் தாமுயரும் பாதகர்களிடம் சிக்கிய நாடும்

பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படும் நாடும்

உண்மைகளைத் திரித்து வழங்கி மக்கள் மனதில் பொய்யை மெய்யெனப் பதித்து ஆட்சியமைக்கும் தீயவர்கள் நிறைந்த நாடும்

ஒன்றைச் சொல்லி வந்துவிட்டு மற்றொரு வழியில் தந்திரமாய் நாட்டைக் கொள்ளையடிப்போர் ஆட்சியைக் கொண்ட நாடும்

உண்ணவும் உடுக்கவும் தன் விதத்தில் ஒழுகவும் இடம்தர மறுத்துத் தாம் நினைத்தபடியே மக்கள் வாழ வற்புறுத்தி வதைக்கும் நாடும்

மத நல்லிணக்கத்தைக் குலைப்பதே மக்கள் பணியாக நினைக்கும் பிற்போக்காள் நிறைந்த நாடும்

வெறித்தனமே ஆள வேண்டும் மனிதம் பணிந்தே இருக்க வேண்டும் எனச் சிறுமதியினர் நடனமாட அனுமதிக்கும் நாடும்

வன்கொடுமைகள் அத்தனைக்கும் சாதி வைத்து முக்கியத்துவம் தரும் தொடர்பணியிலிருக்கும் பத்திரிகைகளே சனரஞ்சகமாக இருந்து வரும் நாடும்

பணத்துக்காகப் பாதகங்கள் செய்பவரும் கையூட்டலே வாழ்க்கையில் வெல்லும் வழியென நம்பும் பாமரரும் இணைந்தே இயக்கும் நாடும்

கையறு நிலையில் நல்லவரும் கோழையராய் தயங்கி இயங்கி வரும் நாடும்.....

இந்த உலகப் பந்தில் எங்கெங்கெல்லாம் உள்ளன எனத் தேடினேன். ஓன்றிரண்டு மூன்று நான்கு கொண்ட பல நாடுகளைக் கண்டேன். ஆனால் எல்லாமும் கொண்ட ஒரு முழுமை நாடும் வந்தது கண்ணெதிரில். அது...


கண்ணைச் சுற்றுதே சாமி. கவலை தள்ளுதே சாமி!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக