சனி, 27 அக்டோபர், 2018

மனவளத்தின் ஆணிவேர்




விண்வெளிக்கு அழகு கிரகங்களும் விண்மீன்களும்போல்
மண்ணுக்கு அழகு இயற்கையமைப்பும் உயிரின வடிவுகளும்போல்
தண்ணீர்க்கு அழகு அதனுள் வதியும் மீனினங்களும் தாவரங்களும்போல்
மனிதர்க்கு அழகு மனதைக் கண்ணியத்துள் இருத்திச் சிந்தித்தல்தான் எனலாம்.

இன்றைய உலகின் அனைத்து நிம்மதியின்மைகளுக்கும் அத்திவார வேர்களாகப் பரவிக் கிடப்பவை தனக்கே அல்லது தமக்கே என எண்ணங்களை வளர்க்கும் சுயநலமும் தன்னொப்பப் பிறர் வாழ அல்லது உயர மனமொப்பா இழிமனமும்
பிறர் நலம் கெடுத்தாகில் தான் முன்னேற மனதில் இடமளிக்கும் பலவீனங்களும்
பார்வைகளிலெல்லாம் பிறர் குறை தேடல் பிறர் நலன் காணப் பெறுக்காமல் பொறாமை கொளல் சரியென நம்பும் தாழ்வு மனப்பான்மை இப்படிப் பலப்பல விதங்களில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

புpறர் குறை சுட்டிக் காட்டத் தயங்காத நமக்கு நம் குறையைச் சுட்டிக் கொள்ளும் அறிவும் தட்டிக் கேட்கும் துணிவும் குறைந்தே இருந்து வருகின்றது. இந்த மனநிலைதான் தரங்குறைந்த பிறர்பற்றிக் குறைசொல்லும் புரணிக் கதைகளில் கற்பனைச் சுவையுணர்ந்து அவற்றைத் தேடித்தேடி அலைய வைக்கின்றது.

இதனால்தான் பணம் பண்ண விழையும் பத்திரிகைகள் அத்தகைய தரங்குறைந்த செய்திகளை வைத்தே பிரபலந்தேடி வளர்ந்து கொண்டிருக்கின்றன. தரம் எது தாழ்வெது என்பதைத் தெரிவதில் தவறிழைக்கும் மனதிற்குக் கவர்ச்சியில் ஈடுபாடு காட்டுமளவிற்கு கண்ணியத்திலும் நியாயத்திலும் நீதிசார் சிந்தனைகளிலும் ஈடுபாடு
காட்டும் பக்குவம் இருக்காது.

இதுதான் இன்றைய பொதுமக்களில் பெரும்பாலாரை சிந்தனை பலவீனர்களாக எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் வைத்துக் கொண்டிருக்கின்றது.

இவர்களை வைத்துத்தான் இன்றைய சனநாயகக் கோட்பாடு பொய்யர்களாலும் பித்தலாட்டக்காரர்களாலும் மத மொழி வெறியர்களாலும் பணம் பண்ணவென்றே வரும் அரசியல் அயோக்கியர்களாலும் நாற்சக்கரங்களும் காற்றற்ற வாகனமாத் தடுமாற- அதைத் தள்ளித்தள்ளி நகர வைக்கும் அப்பாவிக் கூலிகளாகப் பொதுமக்களால் தள்ளப்பட்டுக் கொண்டு வருகின்றது.

பசியிலும் வறுமையிலும் தாழ்த்தப்பட்ட நிலைகளிலும் வழிதெரியாது தவிக்கும் பெரும்பான்மை மக்கள் ஏமாற்றப்பட்டு பணபலத்தால் விலைக்கு வாங்கப்பட்டு
வாக்கின் அருமையை உணராதவர்களால் அயோக்கியர்கள் கைகளில் அகப்பட்டுக் கடைசியில் பசி அறியாதவனும் பசி உணராதவனும் தரம் தெரியாதவனும் தறுதலைகளுமாக சனநாயக சிம்மாசனத்தைக் குரங்குகளே எங்கும் ஆக்கிரமமிக்கும் நிலையினால் உலக சனநாயகம் உனமுற்று துடித்துக் கொண்டிருக்கின்றது.

ஓன்றிரண்டில் வேண்டுமானால் தவிர்ப்பிருக்கலாம். இது நிர்வாண சபையில் ஆடையுடன் நின்று அவமதிக்கப்படுவதைப் போன்ற கவலை தரும் நிலையல்லவா? தலைவிதி!

கண்ணியமாக வாழ்வதற்கு முதலில் வாழ்வினடிப்படையை உணர்ந்திருக்க வேண்டும்.
அதற்கு முதலில் கொடுத்தாலன்றிப் பெற முடியாத சில விடயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்.

மரியாதை: ஒரு புன்னகையால் - ஒரு வார்த்தையால் - ஒரு சைகையால் 
        ஒரு நற்செயலால் மற்றவர்களிடமிருந்து இதனைப் பெற்று விடலாம்.
        இதிலெதுவும் உங்களுக்கு திரும்பி வரும்போது நீங்கள் கற்பீர்கள்
        கண்ணியமான நடத்தையின் பிரதிபலிப்பை. நீங்கள் உயர நீங்கள்
        கொடுத்தவையே பயன் தரும் ஏணிப்படிகளாய் எதிர்வழிகளாய் முன்
        தெரிவதை உணருவீர்கள்.
        இச் செயல்கள்பிழையான பாதிப்பைத் தந்தால்? அதிராதீர்கள்.
        முத்தினைத் தெரியாமல் பன்றிகள் முன் வைத்துவிட்டோம் என
       உணர்ந்த எச்சரிக்கையுடன் ஆனால் விடாது தொடருங்கள்.          
      
       சிம்பன்சிக் குரங்கு பல்லை இளித்தால் அது சிரிப்பல்ல அதன்
        கோபத்தின் வெளிப்பாடு. சில சமயங்களில் நாயிலும் இதை
        உணர்ந்திருப்பீர்கள். ஆக மனித முக வெளிப்பாடுகளில் பரவலாக
        இருக்கும் கபடத்தனம் புரிகிறதல்லவா?   

கோபம்
:  இது நம் எல்லாரிடமும் எப்போதும் உறவாடிக் கொண்டிருக்கும்
        மிக நல்   நண்பனாகவும் ஆபத்தான விரோதியாகவும் இருக்கும் ஒரு
       குணமாகும்.
      
     ஆத்திரத்தை அடக்கினால் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம். நட்புறவைக்
        காத்துக் கொள்ளலாம். வீண் பகை தவிர்க்கலாம்.

மன்னிப்பு : அத்தனை நல்ல குணங்களிலும் மேலானதும் மனதில் நிரந்தர
        அமைத நிலவ உத்தரவாதத்துடன் உதவி செய்ய வல்லதும் இதுதான்.
        இதைத்   தவிர்த்தால் இதயத்தின் நல்ல இடங்களிலெல்லாம்
        பொய்மைகளும   பொறாமைகளும் வெறுப்புணர்வுகளும் தொற்றிக்
       கொண்டுவிட பெரும் வாய்ப்பு உண்டு.
    
        மன்னித்தல் என்பது மிகமிக இலகுவானது ஆனால் அதற்கு ஏற்ப
         மனதை வளர்ப்புது கடினமானது. மனதார உங்களுக்குத்
         தீங்கிழைத்தவர்களையும் எதிராக நடப்பவர்களையும் ஏன் உங்களை
         ஏய்ப்பவர்களையும் கூட மன்னிக்கும் துணிவை நீங்கள் பெற்றால்
         நிம்மதி
         கதவைத் திறந்து கொண்டு உங்கள் இதயத்தில் குடியேறுவதையும்
         மிக இலகுவாக இழப்புக்கள் அலட்சியமாவதையும் புரிந்து கொள்வீர்கள்.

இன்னும் பலப்பல விடயங்களில் வாழ்க்கை இலகுபட மார்க்கங்களுண்டு. என்றாலும் மிகமிக இலகுவாக அனைத்தையும் எப்போதும் இப்படிப் புரிந்து கொள்ள சிந்தித்து முடிவெடுங்கள்.

வருகையில் வெறுமனே வந்த நாம் வாழும்போது ஆக்குமெதுவும் சேர்க்குமெதுவும் அமைக்குமெதுவும் அவை எத்தகைய முக்கியத்துவமாகப் பட்டாலும் அனைத்துமே நிலையற்று காலத்தால் மலர்ந்து வளர்ந்து உதிர்ந்து காய்ந்து போகின்றவையே!
 

நாம் கடைப்பிடிக்கும் நல்ல குணங்கள் படிப்பினை சார்ந்த அனுபவங்கள் இவையே நமக்குப் பின் நமது சந்திதகளுக்கும் சமுதாயத்திற்கும் நற்காற்றென நலம் சேர்க்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக