வெள்ளி, 5 அக்டோபர், 2018

நிழலை நம்புமுன் நிஜத்தைத்தேடு






ஆழ்சிந்தனை அற்றிருப்பமை மடைமைவிதைக் கத்திவாரம்
கீழ்சிந்தனைக் கடிபணியும் ஆபத்ததன் அத்திவாரம்
கீழ்சிந்தனை நிறைந்தவர்க்கு இணைசேர்க்கும் அத்திவாரம்
கீழ்நினைவை மேல்நினைவாய் தவறிழைக்கும் அத்திவாரம்

பாழ்செய்து பதவிதனைக் காத்திடற்குத் துடிக்கிறவன்
வாழ்நாளில் நன்மையெனத் தீமைதனை ஏற்றிருப்பான்
காழ்ப்புணர்வை கண்ணியன்போல் மக்களிடை விதைப்பதனை
வாழ்வளிக்கும் நற்செயல்போல் நம்பவைக்க முயன்றிடுவான்

செய்யவிழை பாதகங்கள் புண்ணியம்போல் தெரிவதற்கு
செய்யவிழை சதிதனக்கு மதம் சாதி இழுத்திடுவான்
பெய்யவிழை மழைதனுக்கும் மற்றவரைப் பழிக்கிழுத்து
மெய்யைவிழை மக்களுக்கும் பாதகங்கள் விதைத்திடுவான்

முள்ளைக் காட்டி ரோசாதன்னை வெறுக்கவைக்க இழிக்கிறவன்
கள்ளத் தனத்தால் ரோசாதன்னைத் தனக்கென்றாக்க நினைக்கிறவன்
கள்ளம்கொண்ட அன்னியனொருவன் கயமைநீயும் அறியாவண்ணம்
உள்ளம்கவர்ந்திpட முயல்வான்அவனை உணரேல்அழிவே நிச்சயம்திண்ணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக