நீங்கள் …. பவரா?
நீங்கள் நீதியை நேசிப்பவரா?
அப்படியானால்...
பிறரை திருப்திப்படுத்துவதற்காக அநீதியை அங்கீகரிக்க மாட்டீர்கள்.
நீங்கள் நியாயத்தை மதிப்பவரா?
அப்படியானால்...
சந்தர்ப்பவாதிகளின் சலசலப்புகளினால் மனமுடைந்து போகமாட்டீர்கள்.
அவர்களால் உங்கள்மீது அநியாயமான பழிகள் சுமத்தப்பட்டாலும் பயப்படமாட்டீர்கள்.
நீங்கள் மனச்சாட்சியை மதிப்பவரா?
அப்படியானால்...
குற்றவாளிகளை மன்னித்து விடுவீர்கள். ஆனால் குற்றங்களை ஒருபோதும் அங்கீகரித்துவிட மாட்டீர்கள்.
நீங்கள் உண்மை நடபைத் தேடுபவரா?
அப்படியானால்...
உங்களைத் திருத்துவதை விரும்புவீர்கள்.
அவர்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டி அவர்கள் பிழை செய்து விடாமல் தடுக்க முயல்வீர்கள்
பணத்திற்காக- பதவிககாக – வசதிக்காக நட்பைக் கைவிட மாட்டீர்கள்
நீங்கள் புகழை விரும்புபவரா?
அப்படியானால்...
உங்கள் தகுதிக்கேற்ற புகழை மறுக்காதீர்கள். ஆனால் உங்களைச் சாராத – நீங்கள் பங்களிக்காத காரியங்களால் புகழ் வந்தால் அதற்குரியவரை அப்புகழ் சேர வழி செய்யுங்கள்
நீங்கள் நடுநிலை நிற்க விழைபவரா?
அப்படியானால்...
எதற்கும் தீர்ப்பெடுக்குமுன் அடிப்படையை ஆராயுங்கள். சம்பவங்களல்ல-
சம்பவங்களின் நோக்கங்களே பல பிரச்சினைகட்கும் அடிப்படை. காட்சியைக் காட்டி, சாட்சியம் சேர்ப்போர் பலரும் பொய்யை மெய்யாய்க் காட்டி, குற்றங்களைச் சரிபோல் மாற்றி, சமுதாயத்தில் தங்களைத் தப்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித உருவங்களுள்ளுள்ள வஞ்சகத்தை விளங்காமல் நியாயத்தைக் காப்பாற்ற முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக