வியாழன், 20 செப்டம்பர், 2018

தாங்கும் சக்திக்குத் தரம் இருக்க வேண்டும்

தாங்கும் சக்திக்குத் தரம் இருக்க வேண்டும்



மரஉளிகொண்டு கற்சிலை வடிக்கும் மடைமையைப் புரியா மூடர்களே
பரமனை எண்ணிப்பரம்பரையழிக்கும் பாதகவழிக்குள் நுழைகின்றார்
கரபலம்தன்னை மட்டுமேநம்பி இரும்பினை உடைத்திடும் முயற்சியில்தான்
தரமதைத் தெரிந்தும் அலட்சியம் செய்யும் தவறுக்குள் மனிதர் நுழைகின்றார்

பொய்களின்மேலே பொய்களை அடுக்கிக் கட்டிடமமைக்கும் போலிகளால்
மெய்களும்கூட பயந்திடும்சூழல் பரவிவரும்நிலை பார்ப்பவர்யார்?
செய்:திடும் தீமை மக்களுக்கான தேவையின்பால்தான் எனஉரைப்பார்
செய்திடும் பாவம்புண்ணியமாக தெய்வத்தை அணுகுதல் யார்உணர்வார்?

வறுமையும் சிறுமையும் நோய்களும்எங்கணும் ஏழைகள்உயிர்களைப் பறிப்பதிலும்
பெருமையும் உயர்நிலை அமைப்புகள்இடங்களும் உள்ளவர்க்கென்றே இருப்பதிலும்
ஒருதுளியேனும் நியாயமேஇன்றி தீயவர் வஞ்சகர் வகுத்ததுவே
அரசியல்வடிவில் நாடுகள்எங்கும் வாழ்வியல்வழியாய் மாறியதேன்?

நம்;பிக்கையெல்லாம் மதங்களின்சுயநல வழிகளால் எங்கணும் தடம்புரண்டே
நம்பிடும் கடவுளும் பணத்தினைவைத்தே பலன்தருமென்பது போலமைந்தே
பாவங்கள்செய்தே பணந்தனைச்சேர்ப்பான் ஒருசிறுபங்கைக் கோவிலிலே
பாவங்கள் தீரக்கொட்டிடும நிலையால் கோவிலும்தீதுஎன் றானதுவே!

முயற்சியின்அடிப்படை இயலாநிலையிலும் இயன்றதில்வெற்றியை அமைப்பதுவே!
முயற்சிpயின்தடமெனப் பிழைவழிதேர்தல் எதனிலும் பிழைதனைச் சேர்த்திடுமே!
பயிற்சியும் முயற்சியும் நேர்மையிலிணைந்தால் கடும்உழைப்பும் சுகம்தந்திடுமே!
பயிரினுக்கேற்ப விளைச்சலைப்போலே ஓழகிடும்விதமதில் தரம் வருமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக