வியாழன், 6 செப்டம்பர், 2018

இரத்தமும் நீராகலாம்!

இரத்தமும் நீராகலாம்!

 Image result for tsunami



ணனியின் முன் அமர்ந்திருந்த அமலனின் கண்களுக்கு அதன் திரையில் இருந்த செய்திகளோ படங்களோ தெரியாதபடிக்கு விழிநீர் தடுத்துக் கொண்டிருந்தது. தனது மனம் கனப்பதையும் துயரம் வந்து அதனை அழுத்துவதையும் தாங்குவது சிரமமாக இருந்தது அவனுக்கு.

காலத்தால் தடுக்க முடியாத சில உடன் தொடர் உணர்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

விழிகளில் நிறைந்த நீர் இளஞ்சூடாகக் கன்னத்தில் வழிந்தது. இரு கர ஆள்காட்டி விரல் நுனிகளாலும் அதைத்துதடைத்துக் கொள்ள முயன்றான். விழி எரிவது போலிருந்தது. ஆனால்….

மனதின் பாரத்தைத் தாங்க இயலாமல் போகும்போது இயற்கை வழங்கும் ஆறுதலுக்கான பன்னீரல்லவா இந்தக் கண்ணீர்! எத்தனையோ கோடானுகோடி உயிர்களை அன்றும் இன்றும் என்றும் ஆறுதல் படுத்தவென்று இருக்கும் அந்த வற்றாத ஆறுதல் நதி மட்டும் தொடராமல் நின்றிருந்தால் ஒருவேளை இந்த உயிர்கள் அனைத்துமே முற்றுமுழுதாக துயரங்களால் அலைக்கழிந்து போயிருந்திருக்குமோ என்னவோ!

ஏதோ ஒரு கோமாளித்தனமான கற்பனை போல வந்து குறுக்கிட்ட அந்த நினைப்பு அமலனை அந்த வேளையிலும் சற்று முறுவலிக்க வைத்தது.

பசிக்கு உணவு, தாகத்துக்கு நன்னீர், நோய்க்கு மருந்து, கல்விக்கு ஆசான், அறிவுக்கு நன்னூல், உறவுக்கு குடும்பம், நட்புக்கு நேர்மை, எழுத்துக்கு உண்மை, வெற்றிக்கு உழைப்பு, உழைப்புக்கு ஒத்துழைப்பு, வாழ்க்கைக்கு ஒழுக்கம், புகழுக்குப் பயிற்சி என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று இருந்தாலும் அனைத்துக்கும் உச்சமாக உயிர்களுக்கு ஒன்றின் தேவைதான் எப்போதுமே மிகமிகமிக அவசியாக இருந்து கொண்டே வந்தது, வருகின்றது, வரவும் போகின்றது என்று அமலனின் சிந்தனை நீண்டது.

எல்லா உயிர்களுக்கும் எல்லாம் இருந்தாலும் எல்லாம் கிடைத்தாலும் என்றுமே தீராத தாகமாக ஏங்க வைத்திடும் பாசம் என்ற ஒன்று இருக்கிறதே! அதில்தானே இறைவனின் முழு அசைவுமே அமிழ்ந்து போய் இருக்கின்றது என்று அவன் நினைத்தான்.

வந்த நாள்முதல் மறையும் நாள்வரை அதுதானே நம்மோடே நிரந்தரமாக, இரகசியமாக, உண்மையாக ஒட்டிக் கொண்டே வருகின்றது!

அமலனின் இதழ்கள் மீண்டும் முறுவலில் நெளிந்தன. „இறைவா, உனது தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் நீ இந்த „பாசம்“ என்ற புரிந்து கொள்ள முடியாத புத்துணர்ச்சி உணர்வை உயிர்கள் மத்தியில் பரவ விட்டுக் கொண்டிருக்கிறாயா?“

மனம் சற்று தேறி, ஆறுதலடைவது தெரிந்தது. ஒரு கதை போல வந்த அவனது கடந்த கால நினைவுகளில் அவன் மூழ்கிப் போனான்.

                                              ……………………

ம்மா, அம்மா அங்கே பாருங்கள். பொன்கலனும் ரெக்சும் சண்டை போடுகிறார்கள்“ அமலனின் சத்தத்தைக் கேட்ட அம்மா குசினிக்குள்ளிருந்து பதில் சொன்னார்கள்.

„ஏய், ரெண்டு பேரும் சும்மா சண்டை போடாமல் விளையாடுங்கள்“

„அவர்கள் சண்டை போட்டுத்தானம்மா விளையாடுகிறார்கள்“
அமலனின் தம்பிமாரின் அறைக்குள்ளிருந்து குரலொன்று வந்தது.

„அம்மா நாங்கள் அலிபாபா விளையாடுகிறோம். சண்டை போடவில்லை. அண்ணன்தான் பயந்து வருகிறானில்லை“

அம்மா சிரிப்பது கேட்டது. அமலனை வெட்கம் பிடுங்கித் தின்றது. என்னை கோழையென்றல்லவா சொல்கிறான் தம்பி, பாவி ரெக்ஸ்?

„டேய் அமலா, நீயும் போய் அவர்களுடன் „வாள் ஃபைற்“ பண்ணு. பொன்கலன்தான் எம்.ஜி.ஆராக இருப்பான். கவனம்.“

அம்மா சிரித்ததுடன் அவர்களின் கவனம் சமையலுக்குள் நுழைந்து விட்டது புரிந்தது. மெதுவாக அமலன் அவர்களின் அறைக்குள் நுழைந்தான்.

அவனைக் கண்டதும் அங்கே ஈர்க்கில் குச்சி வாட்சண்டையில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த எம்.ஜீ.ஆரும் வீரப்பாவும் ஒரேயடியாகத் திரும்ப, எம.ஜீ.ஆர். பொன்கலன் கத்தினான்.

„டேய் ரெண்டு பேரும் சேர்ந்து அண்ணனை வெளுப்போம். வாடா“

அவ்வளவுதான் சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிரிகள் இருவரும் ஒன்றாகவே அமலனின் பக்கம் திரும்பிக் கொண்டார்கள். அமலன் எடுத்தான் ஓட்டம்.

அவன் அம்மாவின் பக்கம் சென்று ஒளியவும் வீரப்பா அட்டகாசமாகச் சிரித்தார்.
„அலிபாபா கள்ளன் பயந்தோடி அம்மாவுக்குப் பின் ஒளிகிறான். ஹாஹாஹா! ஏய் கையைத் தாக்கு. இல்லையேல் குத்திக் கொன்று விடுவோம். ஹாஹாஹா“

அலிபாபாவும் வீரப்பாவும் தங்களின் வாள்களை நீட்டிக் கொண்டே நெருங்க, அமலன் அம்மாவின் முதுகுக்குப் பின்னால் பதுங்கினான். அம்மாவே அமைதிப் பேச்சுக்கு முன் வந்தார்கள்.

„ஐயா வீரர்களே! இந்த ஆள் ரொம்ப பயந்து போய்விட்டார். இப்போ நீங்கள் மட்டும் சண்டை போடுங்கள். கொஞ்சம் பொறுத்து வீரத்தை எடுத்துக் கொண்டு அவர் வருவார்.“

வீரப்பாவும் எம்.ஜீ.ஆரும் போட்ட அட்டகாசச் சிரிப்புச் சத்தத்தில் குசினி அதிர்ந்தது. அமலனின் மானமே போய்விட்டது.

„நான் இவன்களோடே விளையாடப் போக மாட்டேனம்மா. என்னைத் தனியாக விட்டு விட்டு இருவரும் சேர்ந்தே அடிக்க வருகிறான்கள்;“

அமலனின் அழாக்குறையான மன்றாட்டை இரசித்த அம்மா, அமலனிடம் ஒரு வெங்காயத்தைக் கொடுத்துத் தோலுரிக்கச் சொன்னதும் அமலன் உடனே கீழ்ப்படிந்து கொண்டான். குச்சிவாள் குத்தை விடவும் குசினி வேலை பாதுகாப்பானது என்றவன் எண்ணிக் கொண்டான்.

                             …........................................................
த்தனை வருடங்களுக்குப் பிறகும் தனது பசுங்கால நினைவு
தந்த அந்தப் பாசத்தின் அனுபவத்தின் சுகம் மேகம் தாங்கிச் சுமப்பதைப்போன்ற ஒரு கற்பனைச் சுகானுபவத்தைத் தருவதை உணர்ந்த அமலனுக்குள் அதுவே ஒரு பயங்கர துயரத்தையும் கலக்கவிடுவதைத் தாங்குவதே கடினமாக இருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டே மாதங்களுக்குள் இளைய தம்பி பொன்கலன் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து போனான். மற்ற தம்பி அமலன் நாடு கடந்து வாழத் தொடங்கிய பின் இளவயதில் மாரடைப்பால் மறை;து போனான். வுpழிநீர் நிறைவது புரிந்தது.

பரவாயில்லை.

காலம் எதற்காகவும் எவர்க்காகவும் தன் கடமையைக் கைவிடுவதில்லை.எல்லா உயிர்களும் அதற்குள் அடங்கித்தான் ஆகவேண்டும்.

அருகில் வாழும்போது அன்பின் அருமையை அறிந்துகௌ;ளாத அல்லது புரிந்து கொள்ளாத உறவுகள் பிரிந்துபோக நேர்ந்து அதுவே தொடர்ந்து போக நேர்ந்தால் பதறுவதும் ஏங்குவதும் ஆதங்கப்படுவதும் இயல்புதானே!

புலம் பெயர் வாழ்க்கைக்குள் எரிந்துகொண்டிருக்கின்ற இத்தகைய துயரமிகு மெழுகுவர்த்திகள்தான் எத்தனை இலட்சங்கள்?

பாவம் இவர்கள் பரிதாபத்துக்குரிய மனித நடைப்பிணங்கள்.


                ….....................

மார்கழி மாதம். எங்கணும் கடுங்குளிரும் ஆங்காங்கே பனிமழையுமாக
ஐரோப்பா வெடவெடத்துக் கொண்டிருந்தது. நத்தார் பண்டிகைக்காலம் நெருங்குவதால் அதன் களிப்பால் பலரும் உற்சாக மிகுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம்.

அன்று மாலை அமலனின் தொலைபேசி திடீரென அலறியது. அதை எடுத்துத் தனது காதில் வைத்த அமலனின் மனைவியும் அலறினாள்.

„ஐயோ என் தம்பி போயிட்டானா? ஐயோ ஐயோ!„

முழுக் குடும்பமும் அதிர்ச்சியில் திகைக்க அமலன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரமறிந்து கொண்டான்.

கோழும்பிலிருந்து மலையகம் நோக்கிப் பயணித்த ஓர் இசைக்குழுவில் அறிவிப்பாளனாகக் கலந்து கொள்ள அமலனின் மனைவியின் தம்பி ராஜாவும் குழவினருடன் இணைந்து சென்றபோது எங்கோ ஒரு மலைச் சரிவில் அவர்கள் சென்ற பேருந்து வழுக்கித் தடம்புரண்டு ஒரு பள்ளத்தில் விழுந்ததில் ஓரு பாரமான இசைக்கருவி ராஜாவின் தலையை மிகப் பலமாகத் தாக்கிவிட அதனால்அவன் மட்டும் துரதிட்டவசமாக மரணிக் நேர்ந்து விட்டதுவாம் என்ற துயரச் செய்தியால் அனைவரும் கலங்கி நின்றார்கள்.

ராஜா அங்கே பிரபலமான ஒரு நடிகனாகவும் சிறந்த நிகழ்ச்சி அறிவிப்பாளனாகவும் இருந்தான். நல்ல குணசாலி. அத்துடன் கலகலப்பாக எல்லரிடத்திலும் எப்போதும் பழகி நல்ல பெயரெடுத்தவன்.

தனது மூத்த மகனை மட்டும் வீட்டைப் பொறுப்புடன் கவனிக்க வைத்துவிட்டு மற்ற இரு பிள்ளைகளுடன் அமலனின் குடும்பம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப் புறப்பட்டது.

இது இப்படி இருக்க அமலனின் சிந்தனை தனது சொந்தக் குடும்பத்தையும் அப்பொழுது இழுத்து நின்றது. கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கழித்து முதல் தடவையாகத் தனது உறவுகளையும் அதிலும் விசேடமாகத் தனது தந்தையையும் சந்திக்கப் போகும் நினைவு அவனுககுள்; குடைந்து கொண்டிருந்தது.

ஆழ் கடல் கடந்து அயல்நாடு வந்த பின் தந்தையுடன கொண்டிருந்த மடல் தொடர்பு திடீரென நின்றதும் அதற்குக் காரணம் தந்தையின் பார்வை சக்தி மறைந்து போனதும் பிறகு நீரழிவு நோய் காரணமாக அவரது ஒரு கால் முழங்காலுடன் துண்டிக்கப்பட்ட செய்தியும் அவர் அந்நிலையிலும் தனது பெயரையே எப்போதும் சொல்லிச் சொல்லிப் புலம்புவதாகவும் தனது சகோதரியின் மூலமறிந்த செய்தியும் அவனுள் சுட்டுக் கொண்டிருந்த நெடுநாளைய புண்கள்.

இந்த சந்தர்ப்பம் அதற்கு ஓர் ஆறுதல் பெற்றுத்தருமென்ற நம்பிக்கை ஒருவித மகிழ்ச்சியை அவனுக்குள் நுழைப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.

         …............................................................

பூமிப் பந்தை விட்டு விரைந்தோடிப் பறந்துவிடப் பெருமுனைப்புடன் போராடி அதில் வென்று விட்ட திருப்தியில் அமைதியான ஒரு பறவையைப்போல அடித்துப் புரணடு கொண்டு ஓடுதளத்தில் பதறி ஓடிப் பாய்ந்து பறந்த விமானம் இப்போது அமைதியாகப் பெருமூச்சு விட்டபடி பறப்பதைப்பேல ஒரு வித அமைதியுடன் பறந்து கொண்டிருந்தது.

ஏப்பொமுதுமே நடித்து நடித்Nது வாழ்க்கைய ஓட்டிக் கொண்டிக்கும் மனி குலத்தின் கூட்டம்.
தத்தனது அகத்தின் உண்மை அழகைக் காட்ட விரும்பாத பல முகங்கள்.
மலர்ந்த முகங்கள்
தளர்ந்த முகங்கள்
இரண்டு; கெட்டான் முகங்கள் என்று அத்தனையும் பொய்முகங்கள்தான். அதிலும் சில முகங்களில் தற்பெருமைச் சேறு வேறு வழிந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

ஏதோ ஒரு திரைப்படப் பாடல் கெட்பது போன்ற உணர்வு...ர்hர்வையொன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா...?
எவனோ எதற்காகவோ பாட அதை அமலனின் மண்டைக்குள் பாடிக்காட்டிய மனக்கண்ணை நினைத்து அவன் முறுவலித்துக் கொண்டான அப்போது.

தனது தந்தையின் கவி ஆற்றல் - சிறந்த பாடல் பாடும் குரல் வளம் - கம்பீர இளந்தோற்றம் -புத்தியும் தைரியமும் கலந்த அவைக்கஞ்சாமை -அடித்துச் சொல்லும் ஆற்றல் இவைகளையெல்லாம் காலப் புல்வெளியிலிருந்து பிய்த்துப் பிய்த்து எடுத்து அமலனின் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.

ஏத்தனை துயரங்களுக்குள்ளும் அயராத மகிழ்ச்சியுடனிருந்த நல்ல குடும்பத்தில் அம்மா என்ற அடித்தளத் தூண் சரிந்தால் நிலைமை எப்படித் தலைகீழாகும் என்பதைத் தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருந்த அமலனுக்குள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் காலச் சுழற்சியின் காட்சியுமாகப் பல திரைப்படங்களாக
நினைவலைகள் ஓடத் தொடங்கின.

எத்தனை அனுபவங்கள் பாடங்கள் வழிகாட்டுதல்கள் சுய கண்டுபிடிப்புக்கள் என ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைக்குள்ளும்
உண்மைகள் உழன்று கொண்டிருக்கின்றன!

இவற்றை முறைப்படித் தொகுத்தால் எத்தனை ஆயிரம் கதைகளை எழுதலாம் எத்தனை உயிர்களுக்கு உதவலாம் என்றெல்லாம் அமலனின் சிந்தனைக் கயிறுகள் முடிச்சிடத் தொடங்கி விட்டன எனலாம்.

காலம் இந்த ஞாலத்தை நடத்தப் போகும் விதம் தெரிந்தால் என்ன நடக்குமோ தெரியாது ஆனால் அதை அது ஒரு புதிராகவே நடத்துகிறதால்தால் வாழ்க்கையில் மனிதருக்குள்ள பிடிப்பு வலுக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

               
இலங்கைத் தீவின் பசுமையையும் அற்புதமான அதன் அழகையும் வானத்தில் இருந்து பார்த்த அமலனின் நெஞ்சமும்  விழிகளும்
ஒருங்கே நிறைந்து கொண்டிருந்தன.



                 …................................

றுதிச் சடங்கில் கலந்து முடித்தபின் தனது தந்தையிடம் சென்று சந்தித்துப் பேசிடவும் அவரது ஆசியைப் பெற்றிடவும் மனம் நிறைந்த கனவோடே தனதில்லம் நோக்கி நடந்த அமலனுக்குத் தனது கழுத்திலே ஒரு கோடரி கொத்தக் காத்திருப்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.

அதுதான் இந்தக் காலதேவனின் திருவிளையாடல்.

தான் பிறந்து வளர்ந்த தனது வீடு பலவித மாற்றங்களுடனும் மாடியுடனும் முற்றிலும் மாறியிருந்தது. அவனது சகோதரியர் அவனை வரவேற்றார்கள்.

முதலில் அப்பாவைப் பார்த்து விடுவோம்.

„அப்பா எங்கே?“

அவரைக் காட்டிய திசையில் அவர் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்.மலன் அவரை நெருங்குகையில் ஒரு தங்க அமலனை நெருங்கிச் சொன்னாள்.

„அண்ணன் அப்பா அதையிதைச் சொன்னால் அலட்டிக் கொள்ள வேண்டாம். சும்மா சிரித்துச் சமாளித்துவிடுங்கள்“

அமலனுக்குப் பெரிய அதிர்ச்சி.

„ஏன்ன சொல்கிறாய்? புரியவில்லையே!“

„முதலில் கிட்டப்போய் பேசுங்கள்“ அவளிடம் தெரிந்தது ஒருவித.. பதட்டமா அல்லது நடக்ககூடியதை உணர்ந்த தீர்க்கதரிசன உணர்வா?

புரியவில்லை அமலனுக்கு. நேராக அப்பா அருகில் சென்று அமர்ந்து கொண்டு

„அப்பா நான்தானப்பா மகன் வந்திருக்கிறேன்“  என்றான்.

காலதேவனின் கோடரி உயர்ந்தது.

„நகர்ந்து நில்லடா முதலில். யாருக்கோ பிறந்த எவனோ ஒருவன் என்னிடமே வந்து என் பிள்ளை என்று சொன்னால் நான் நம்புமளவுக்கு மடையனா என்ன?

„என் மகனின் குரலை என்னை விடவும் சரியாக உணரத்தக்கதாக உன்னால் எப்படியடா சொல்ல முடியும்? புதிதாக வந்திருக்கிறானாம். என் பிள்ளையுடன் தினசரி பேசுபவன் நான். என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயா? ஏய் யார் அங்கு இருக்கிறீர்கள் முதலில் இவனை வெளியேற்றுங்கள் அல்லது நான் பொல்லாதவனாகி விடுவேன்.“

காலதேவனின் கோடரி விழுந்து தலைதுண்டிக்கப்பட்ட துயரத்தில் அமலனின் இதயம் துடிதுடித்தது.அவனே விறைத்துப் போய் விக்கித்து நின்றான்.

அமலனின் தங்கை அவனை சைகை செய்து அழைத்தாள்.  மௌனமாக அவளை நெருங்கினான் அமலன்.

„அண்ணன் அப்பாவுக்கு பார்வை போன பிறகு உங்களிடமிருந்து கடிதங்கள் வருவதும் நின்றபடியால் அப்பா சதா உங்களை நினைத்து பேர் சொல்லி அழைத்து அழைத்து அரற்றி அழுதுகொண்டே இருந்தார்கள். அதனால் நாங்கள் யோசித்து நமது சேகரை நீங்கள் என்று சிறிது காலம் குரல் மாற்றிப்பேச வைத்தோம். முதலில் ஏற்க மறுத்தவர் தினசரி அவன் அவருடன் பேசப்பேச அந்தக்குரலை உங்கள் குரலென நம்ப ஆரம்பித்தார். அதனால்தான் இப்படி நடந்துவிட்டது.“

சேகர் என்னால் எங்கள் வீட்டி; வளர்ப்பு மகனான எனது நண்பன்.
விளக்கம் சரியோ பிழையோ அமலனின் தந்தை தன் மகனை இழந்துவிட்டார் என்று மட்டும் அவனுக்குள் புரிந்தது. இனி என்றைக்கும் இதுவாகவே நிலை இருக்கும்.


அமலன் தனது தங்கையைப் பார்த்து ஒரு பிணம்போலச் சிரித்தான். உள்ளுக்குள் அவனது இருதயம் இரத்தக் கண்ணீர் வடித்துத் துடித்துக் கொண்டிருந்தது.

பிறப்பதன் பெறுமதி இறக்குமுன் போய்விடின் இருந்தென்ன இறந்தென்ன?
உறவதன் பெறுமதி உயிர்முன்னே உடைந்திடில் உறவதன் நிலையென்ன?
இரக்கமே இல்லானாய் இருப்பவன் இறையெனில் இருந்தென்ன மறைந்தென்ன?
சுரக்கின்ற இரத்தமே தண்ணீராய் மாறுமேல் இதயத்தில் நலனென்ன பயனென்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக