நாமாக்கின் நமதாகும்
எதிர்பார்ப்பு எதுவுமின்றி உறுதியுடன் நாமிருந்தால்
ஏமாற்றம் என்பதற்கு இடமெதிலும் இருந்திடாது.
பதில்பார்த்து உதவிசெய்யும் மனப்பான்மை வளர்ந்திருந்தால்
பதிலிந்த உலகமதில் கானலன்றி வேறிராது.
நட்புக்குள் உறவுக்குள் பாசத்துள் சுயநலத்தால்
நல்வாழ்க்கை பலபேர்க்கு நரகமதாய் ஆனதுண்டு
முட்செடியாய் இருந்தாலும் ரோசாவின் இல்லம்அது
கெட்டவர்போல் தெரிவரிலும் நல்லவர்கள் இருப்பதுண்டு
நாற்புறமும் மலையமைந்தால் நல்லசுகக் குளிரிருக்கும்
நாலுநல்ல உறவிருந்தால் நமதுமனம் குளிர்ந்திருக்கும்
நல்ல கெட்ட என்று எதிலும் வேவு பார்த்தல் தவிpர்த்துவந்தால்
நல்லதாக நமது மனம் தனித்துவமாய்க் வளர்ந்;திருக்கும்
எந்தநிலை வந்திடினும் நல்லதையே நினைப்பதுவும்
எந்த செயல் செய்தினும் நல்லநோக்கம் சேர்ப்பதுவும்
எந்தநிலை வந்தபோதும் தீமைதன்னைத் தவிர்ப்பதுவும்
எந்த நாளும் நமதுமனத் தூய்மைதனுக் குதவிவரும்.
எதிர்பார்ப்பு எதுவுமின்றி உறுதியுடன் நாமிருந்தால்
ஏமாற்றம் என்பதற்கு இடமெதிலும் இருந்திடாது.
பதில்பார்த்து உதவிசெய்யும் மனப்பான்மை வளர்ந்திருந்தால்
பதிலிந்த உலகமதில் கானலன்றி வேறிராது.
நட்புக்குள் உறவுக்குள் பாசத்துள் சுயநலத்தால்
நல்வாழ்க்கை பலபேர்க்கு நரகமதாய் ஆனதுண்டு
முட்செடியாய் இருந்தாலும் ரோசாவின் இல்லம்அது
கெட்டவர்போல் தெரிவரிலும் நல்லவர்கள் இருப்பதுண்டு
நாற்புறமும் மலையமைந்தால் நல்லசுகக் குளிரிருக்கும்
நாலுநல்ல உறவிருந்தால் நமதுமனம் குளிர்ந்திருக்கும்
நல்ல கெட்ட என்று எதிலும் வேவு பார்த்தல் தவிpர்த்துவந்தால்
நல்லதாக நமது மனம் தனித்துவமாய்க் வளர்ந்;திருக்கும்
எந்தநிலை வந்திடினும் நல்லதையே நினைப்பதுவும்
எந்த செயல் செய்தினும் நல்லநோக்கம் சேர்ப்பதுவும்
எந்தநிலை வந்தபோதும் தீமைதன்னைத் தவிர்ப்பதுவும்
எந்த நாளும் நமதுமனத் தூய்மைதனுக் குதவிவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக