செவ்வாய், 9 அக்டோபர், 2012

கேட்டுப் பார்! பதில் கிடைக்கும்

ற்புத மாய்நீ அடுத்தவர் பெயரைக் கெடுப்பதில் உயர்ந்திடலாம்
அற்புத மாய்நீ பொய்மைகள் நிறைத்தே அகிலத்தை மயக்கிடலாம்
அற்புத மாய்நீ அடுத்தவர்சொத்தை அபகரித் துயர்ந்திடலாம்
அற்பமே ஆகி நோய்நொடி வீழ்ந்தே ஒதுங்கவே நேர்ந்து விட்டால்?

பற்பல நாடும் நீபறந்தோடிப் பணபலம் தேடிடலாம்
பற்பல மொழிகள் கற்றவை தேறிப் பேர்புகழ் பெற்றிடலாம்
பற்பல விதமாய்ச் சூழ்நிலைக்கேற்ப வேடமிட்டுயர்ந்திடலாம்
கற்றவை சேர்த்தவை சாதனை யாவும் கடைசியில் வந்திடுமா?

முற்பகல் உனக்கே சாதக மென்றால் பழிகளும் செய்திடலாம்
முற்பகல் நடுப்பகல் ஆகிடுமுன்பே முன்னிலை பெற்றிடலாம்
முற்படும் எத்தகைக் காரியம் தன்னிலும் சுயநலம் பேணிடலாம்
முற்பகல் முடிவில் நள்ளிர வாதல் உன்வழி நடந்துவிட்டால்?

புத்தகமெல்லாம் பலபக்கம்சேரினும் கட்டுக்குள் தானிருக்கும்
எத்தனைசாதனை சக்தியும் வாழ்க்கையில் எல்லைக்குள் தானிருக்கும்
சித்தத்தில் கொள்வன வாழ்க்கையின் பக்கமாய்ச் சரித்திரம்
                                                                                                                 வரைந்திருக்கும்
புத்தியில் இதனைப் பதித்திடார் வாழ்க்கையோ சுயநலத் தாலழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக